Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஜோம்பிஸ்களை ரசிகர்களுக்கு பிடிக்கும்:மிருதன் இயக்குநர் பேட்டி

09 பிப், 2016 - 17:37 IST
எழுத்தின் அளவு:
Fans-will-enjoy-Zombie-movie-says-Miruthan-director

நாணயம் படத்தில் நவீன வங்கி கொள்ளை, நாய்கள் ஜாக்கிரதை படத்தில் சைக்கோ கொலைகாரன் என வெவ்வேறு கதை களங்களை இயக்கிய சக்தி சரவணன் அடுத்து இயக்கி உள்ள படம் 'மிருதன்'. இது ஜோம்பிஸ்களின் கதை. இந்திய சினிமாவுக்கே புதிக கதை களம். வருகிற 19ம் தேதி படம் வெளிவருகிறது. இதையொட்டி தினமலர் இணையதளத்திற்கு சக்தி சவுந்தர்ராஜன் அளித்த சிறப்பு பேட்டி:


பொதுவாக ஜோம்பிஸ் படங்கள் அருவருப்பானவை அதனை தமிழ் ரசிகர்கள் ஏற்பார்களா?


ஜோம்பி கதைகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. பல ஹாலிவுட் ஜோம்பி படங்கள் இந்தியாவில் வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரை குறைந்தது 500 ஜோம்பி படங்கள் வந்திருக்கும், அவற்றில் ஒரு சில வேண்டுமானால் அருவருப்பாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான படங்கள் குழந்தைகள்கூட பார்க்கும் வகையில் இருக்கும் மிருதன் அப்படிப்பட்ட வகையானது. மிருதன் ஜோம்பிகள் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்தியாவில் இதுவரை ஜோம்பி படங்கள் வந்தது இல்லை. 2013ம் ஆண்டு 'கோ கோவா கா'ன்னு ஒரு படம் வந்தது. அதுவும் ஜோம்பிகளை ஜோம்பிகளை கிண்டல் பண்ணும் ஸ்பூம் படம்தான். எனவே முதல் ஜோம்பி படம் மிருதன்தான்னு அடிச்சு சொல்லலாம்.


இதை ரசிகர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள். நாய்கள் ஜாக்கிரதை படம் பண்ணும்போது இது ராமநாராயணன் கதை. பழசு யாரும் பார்க்க மாட்டார்கள் என்றுதான் சொன்னார்கள். அந்தப் படம் வெற்றி பெறவில்லையா?. ஹாலிவுட் பாணியிலான திகில் படங்கள் வெற்றி பெறவில்லையா?.இந்த படமும் ரசிகனை நம்பித்தான் எடுக்கப்படுகிறது. அவனுக்கு பிடித்து விட்டால் படம் வெற்றிதான். அவனுக்கு பிடிக்கிற மாதிரி படம் எடுக்க வேண்டும் அதுதான் முக்கியம்.


ஜோம்பிஸ் படங்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?


ஜோம்பிஸ் படங்களின் கதை ஒரே மாதியானவைதான். ஒரு மோசமான வைரஸ் திடீரென பரவும். அந்த வைரசால் பாதிக்கப்படுகிறவர்கள் ஜோம்பிஸாக மாறிவிடுவார்கள். அவர்களுக்குள் மிருகத்தன்மை வந்து விடும். பாதி செத்தவர்களாகவும், பாதி உயிரோடு இருப்பவர்களாக இருப்பார்கள். பார்க்கும் மனிதர்களையெல்லாம் கடிக்கத் துடிப்பார்கள். அவர்களிடம் கடி பட்டவர்களும் ஜோம்பிஸ்களாக மாறிவிடுவார்கள். அதை தடுக்கவும் ஜோம்பிஸ்களை ஒழித்து மனிதர்களை காப்பாற்றவும் ஒரு ஹீரோ வருவார். அவருக்கு ஒரு ஹீரோயின் உதவுவார். இதுதான் ஜோம்பிஸ்களின் கதை. மிருதன் கதையும் இதுதான்.


இந்த கதை ஹாலிவுட்டுக்கு ஓகே. தமிழுக்கு...?


ஒரு ஜோம்பிஸ் கதை சென்னையில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் படத்தின் சுவாரஸ்யமே. தமிழுக்கு ஏற்ப பல மாறுதல்களை செய்திருக்கிறோம். ஜோம்பிஸ் படங்களில் பாடல் இருக்காது, காமெடி இருக்காது அவற்றை வைத்திருக்கிறோம்.


ஜெயம்ரவி டிராபிக் கான்ஸடபிள் அவர் கையில் துப்பாக்கி இருப்பது மாதிரி பர்ஸ்ட்லுக் வெளியிட்டது சரியா?


டிராபிக் கான்ஸ்ட்டபிள் கையில் துப்பாக்கியா? என்பது லாஜிக்கான கேள்விதான். அதற்கான பதில் படத்தில் இருக்கிறது. டிராபிக் போலீசாக இருந்தாலும் அவரும் துப்பாக்கி பயிற்சி பெற்றவர்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படி இன்னும் நிறைய கேள்விகள் வரும். அதற்கான பதில் படத்தில் கிடைக்கும்.


லட்சுமி மேனன் எப்படி?


இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து மாறுபட்டது. கொஞ்சம் மார்டன் லுக்குடன் நடித்திருக்கிறார். ஜோம்பிஸ்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் டாக்டராக நடித்திருக்கிறார். படத்தில் ஜெயம்ரவிக்கும், லட்சுமி மேனனுக்கும் காதல் காட்சிகள் குறைவுதான். ஆனால் படம் முழுக்க இருவரும் சேர்ந்தே பயணிப்பார்கள்.


ஜோம்பிஸ் கதை என்பதால் பட்ஜெட் பெரிதாக இருந்திருக்குமே?


பெரிய பட்ஜெட்தான். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், அவர்கள் அனைவருக்குமே ஜோம்பிஸ்க்கான மேக்அப், தினமும் குறைந்தது 5 கேமராக்கள், 200 டெக்னீசியன்கள், இரவு நேர படப்பிடிப்பு என ஒவ்வொரு நாளும் பணம் தண்ணீராக செலவானது உண்மை. ஆனால் இப்போது காட்சிகளை திரையில் பார்க்கும்போது அந்த செலவு திரையில் தெரிகிறது.


கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கிறதாமே?


ஜோம்பிஸ் படங்கள் என்றாலே 50 சதவிகிதம் கிராபிக்ஸ்தான். ஆனால் எது கிராபிக்ஸ் எது நிஜம்னு தெரியாத அளவிற்கு இருக்கணும். ஜோம்பிஸ்களுக்கு மேக்அப் போட ஹாலிவுட்ல தனியா டெக்னீஷியன்ஸ் இருக்காங்க. நாங்க இங்குள்ளவங்களை வச்சுத்தான் பண்ணியிருக்கோம். ஆனால் அவர்களை விட சூப்பரா பண்ணிக்கொடுத்தாங்க. கிராபிக்ஸ் பணிகளும் இங்கேதான் நடந்துது. சென்னையில் ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கிற அளவிற்கு டெக்னாலஜி கிடைக்குது. பிறகு ஏன் வெளிநாட்டுக்குப் போவணும்.


தெளிவாக பேசுகிறார் சக்தி சவுந்தர்ராஜன். மிருதன் புதிய கதவுகளை திறந்துவிட இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in