Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பெங்களூர் நாட்கள் கலர்புல் சினிமா: பொம்மரிலு பாஸ்கர் சிறப்பு பேட்டி!

04 பிப், 2016 - 13:56 IST
எழுத்தின் அளவு:
Bangalore-Naatkal-is-colourful-cinema-says-Bommarillu-bhaskar

மலையாளத்தில் வெளிவந்து சூப்பர், டூப்பர் ஹிட் அடித்த பெங்களூர் டேஸ் படத்தை தமிழில், பெங்களூர் நாட்கள் என்ற பெயரில் ரீமேக் செய்தது சரி. அதை ஏன் பொம்மரிலு பாஸ்கர் என்ற தெலுங்கு இயக்குனர் இயக்க வேண்டும்? என்ற கேள்விதான் பெரும்பாலானவர்கள் மனதில் இருக்கிறது. அவர்களுக்கான பதில்... பொம்மரிலு பாஸ்கர் பக்கா தமிழர். வேலூர்தான் சொந்த ஊர். தெலுங்கு சினிமாவில் 10 ஆண்டுகள் அசைக்க முடியாத இயக்குனர். இதுவரை இயக்கியது 5 படங்கள்தான் அனைத்தும் சூப்பர் ஹிட். எஸ்.எஸ்.ராஜமவுலி பிரமாண்டம் என்றால். இவர் பேமிலி எண்டர்டெய்னர். படத்தை அற்புதமாக உருவாக்கிய பெருமிதத்தில் இருக்கும் பாஸ்கர் தினமலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:




* வேலூர் டூ ஐதராபாத் பயணம் எப்படி நடந்தது?


சென்னை பிலிம் இன்ஸ்ட்டியூட்டில நானும், மோகன்ராஜாவும் ஒன்றாக படித்தோம். படித்து முடித்தவுடன் வேலை தேட ஆரம்பித்தபோது மோகன் ராஜா, “எங்க அப்பா தெலுங்கில் ஒரு படம் பண்ணிக்கொண்டிருக்கிறார். அவருடன் வேலை செய்கிறீர்களா?” என்றார். கொஞ்சமும் யோசிக்காமல் சென்று விட்டேன். அங்கு எடிட்டர் மோகன்சாரிடம் தொழில் கற்றேன். மொழிகற்றேன் அப்போது பொம்மரிலு கதை எழுதினேன். அதை தமிழில் இயக்கத்தான் ஆசை. ஆனால் தெலுங்கில் வாய்ப்பு வந்ததும் அங்கே இயக்கினேன். தமிழில் என் நண்பன் மோகன்ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற பெயரில் ரீமேக் செய்தார். தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் வரவும் அங்கேயே செட்டிலாகிவிட்டேன்.


* இப்போது தமிழுக்கு வந்திருக்கிறீர்கள். நேரடி கதையோடு வராமல், ரீமேக்கோடு வருகிறீர்களே?


நானும், ஆர்யாவும் சேர்ந்து ஒரு நேரடி தமிழ் படம் பண்ண வேண்டும் என்று நீண்ட நாள் திட்டமிட்டுக்கொண்டுதான் இருந்தோம். அதற்கான சந்தர்ப்பம் அமையாமல் இருந்தது. இந்த நேரத்தில்தான் பிவிபி சினிமா பெங்களூர் டேய்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்ய என்னை அணுகினார்கள். உணர்வு பூர்வமான கதைகளை நான் தொடர்ந்து இயக்குவதால் என்னை அணுகியிருக்கிறார்கள். படத்தை பார்த்தேன் பிரமாதமாக இருந்தது. உடனே ஓகே சொல்லிவிட்டேன்.


* மல்டி ஸ்டார் கதையை இயக்குவது சிரமம் என்பார்களே?


எனது படங்கள் சிலவற்றில் மல்டி ஸ்டார் நடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த அளவுக்கு இல்லை. ஆர்யா, ராணா, பார்வதி நடிப்பதுதான் முதலில் உறுதியானது. அப்புறம் பலபேரை அணுகினோம். காஷ்சீட் பிரச்சினை அது இது என 8 மாதங்கள் வரை எதுவுமே நடக்கவில்லை. சிலர் வந்தார்கள், சிலர் போனார்கள் எல்லாமே நடந்தது. இறுதியில் பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, ராய் லட்சுமி, சமந்தா என எல்லோரும் இணைந்தார்கள்.


* எந்த அடிப்படையில் நட்சத்திரங்களை தேர்வு செய்தீர்கள்?


துல்கர் சல்மான கேரக்டருக்கு ஆர்யாவை விட்டால் ஆள் இல்லை. பகத் பாசில் கேரக்டரில் நடிக்க விரும்புவதாக ராணா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதை வைத்து அவரை அழைத்து வந்தோம். பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரியும் இருக்கணும், அழகாவும் இருக்கணும் அதற்கு ஒரே சாய்ஸ் ஊதா கலர் ரிப்பன்தான். பாபி சிம்ஹாவுக்கு ஒரு முரட்டு இமேஜ் இருந்தது அதை மாற்றி இந்த படத்தில் புதிய சிம்ஹாவை காட்ட முயற்சித்தோம். ஆனால் பார்வதி நடித்த கேரக்டருக்கு அவரை விட்டால் ஆளே கிடையாது. என் கேரட்டரை எந்த விதத்திலும் மாற்றக்கூடாது என்கிற நிபந்தனையுடன் தான் நடிக்கவே ஒப்புக்கொண்டார். சமந்தாவுக்கு சின்ன கேரக்டர்தான் ஆனால் முக்கியமான கேரக்டர் விரும்பி நடித்துக்கொடுத்தார்.


* படத்தின் நட்சத்திரங்கள் அனைவரும் ஒரே கேட்டகிரி அவர்களுக்குள் ஈகோ வரவில்லையா?


நிச்சயமாக இல்லை. காரணம் எல்லோருக்குமே அவரவர் கேரக்டர்கள் பற்றித் தெரியும். எத்தனை காட்சிகள் என்பதும் தெரியும். படப்பிடிப்பு காலங்களில் ஜாலியா ஷாப்பிங்கெல்லாம் சென்று வந்து தங்களுக்குள் கெமிஸ்ட்ரியை வளர்த்துக் கொண்டு நடித்தார்கள். படம் போலவே படப்பிடிப்பும் ரொம்ப ஜாலியாகவே இருந்தது.




கதை என்ன?


எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இடமாற்றம் கண்டிப்பாக இருக்கும், வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடு எதுவாக வேணாலும் இருக்கும். அந்த மாற்றம் அவர்களுக்குள் என்ன மாற்றத்தை கொண்டு வருகிறது என்பதுதான் கதை. பொள்ளாச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கசின்கள் (சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள்) பெங்களூரில் வாழ வேண்டிய சூழ்நிலை, அந்த சூழ்நிலை அவர்களுக்குள் எப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டு வருகிறது என்கிற கதை. கசின்கள் உறவு பற்றி வரும் முதல் சினிமான்னு சொல்லலாம். எதையும் சீரியசாக சொல்லாமல் ரொம்ப ஜாலியாக கலர்புல்லாக சொல்கிறோம்.


தமிழ் ரீமேக்கிற்காக மாற்றம் செய்திருக்கிறீர்களா?


கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. சின்ன சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறோம். மலையாள இயக்குனர் அஞ்சலி மேனின் படைப்புக்கு முடிந்த வரை நியாயம் செய்திருக்கிறோம். தமிழ் ரசிகர்களுக்கு இந்த படத்தின் அனுபவம் புதிதாக இருக்கும்.


தெளிவாக இருக்கிறார் பொம்மரிலு பாஸ்கர். தினமலர் சார்பில் வெற்றிக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெற்றோம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in