Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பார்ட்டிக்கு போறது தப்பில்லையே: த்ரிஷா

28 ஜன, 2016 - 06:17 IST
எழுத்தின் அளவு:
Going-party-is-not-wrong-:-Trisha

தமிழ் சினிமாவில், 30 வயதை கடந்தால், ஹீரோயின்கள், அக்கா, அண்ணி வேடங்களில் தான் நடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இந்த விதியை தகர்தெறிந்த பெருமை, த்ரிஷாவுக்கு உண்டு. அவருடன் ஒரு சந்திப்பு:


உங்களுக்கும் பேய் ஆசை வந்திடுச்சு போலிருக்கே?


முதன் முறையாக, பேய் படத்தில் நடிக்கிறேன். அரண்மனை 1 படம், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால், இயக்குனர் சுந்தர். சி, இரண்டாம் பாகத்தின் கதையை கூறியதுமே நடிக்க சம்மதம் தெரிவித்தேன். குஷ்பு, எனக்கு நல்ல தோழி என்பதும் இந்த படத்தில் நடிப்பதற்கு முக்கிய காரணம். இந்த வாய்ப்பு கிடைத்தை பெருமையாக கருதுகிறேன். சித்தார்த், ஹன்சிகா, சூரி என, புது டீமில் இணைந்து நடித்திருக்கிறேன்; ரொம்ப சந்தோஷமாக உள்ளது.


படத்தில் உங்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கு.?


நானே எல்லாம் சொல்லிட்டால் படத்துக்கு எப்படி வருவீர்கள், படம் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும், படம் ஒத்துகொள்ளும் போது என் ரோல் என்ன, எனக்கு எவ்ளோ முக்கியத்துவம் இருக்கு என்று பார்ப்பேன், கதை பிடித்து போனதால் தான் நடிக்க ஒத்து கொள்வேன். கையெழுத்து போடுவேன், அதனால் எத்தனை ஹீரோயின்ஸ் என்று நான் கவலை பட மாட்டேன், என் ரோல் பிடித்து போனதால் வேறு எதிலும் தலையிட மாட்டேன்.


சினிமாவுக்கு நீங்க வந்தது விபத்தா.?


ஸ்கூல் படிக்கும் போதே மாடலிங் துறையில் நிறைய விளம்பரங்களில் நடித்தேன், பிறகு சினிமாவில் நடிக்க வந்தேன். வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கும்னு தெரியாது.


15 - 16 வயசுல எந்த கேள்விக்கு எப்படி பதில் பேசணும்னு தெரியாமல் தான் சினிமாவுக்கு வந்தேன். உண்மையாகவே இது விபத்து தான். நானும் என் தோழிகளும் எத்திராஜ் கல்லூரியில் படிக்கும் போது ஆஸ்திரேலியா போய் எம்சிஏ., படிக்க ஆசை, ஆனால் எல்லாமே மாறி போனது. நான் எதிர் பார்க்காத ஒன்று சினிமா.



இரண்டாவது இன்னிங்சிலும் பிசியாக இருப்பது குறித்து...?


நான், சினிமாக்கு வந்து, 13 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை நம்ப முடியவில்லை. அதிக படங்களில் நடிக்க வேண்டும்; முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால், எனக்கு கிடைத்த அனுபவத்தின் காரணமாக, இப்போதெல்லாம் கதையில் கவனம் செலுத்த துவங்கியுள்ளேன். குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடிக்கிறேன்; ராசியான நடிகையாக இருக்கிறேன்.


அப்பாவின் மறைவு, திருமணம் நின்று போனது என, சோகமான நிகழ்வுகளிலும் துவண்டு போகாமல் இருப்பது பற்றி...?


என் குடும்பத்தில், எல்லாருமே தைரியசாலிகள் தான். எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வர். என்னை வழி நடத்த அம்மா இருக்கிறார். கசப்பான சம்பவங்கள் நடந்தால், ஒரு சில நாட்கள் அமைதியாக, தனிமையில் இருப்பேன். அடுத்த நாள், வேலையை துவங்கி விடுவேன்; இதுதான் என் கேரக்டர்.


கொடி படத்தில் தனுஷுடன் நடிப்பது குறித்து...?


உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆடுகளம் படத்துக்காக, தனுஷ் கூட சில நாட்கள் நடித்தேன். இந்தி படத்தில் நடிக்க வேண்டி வந்ததால், கால்ஷீட் பிரச்னை காரணமாக ஆடுகளத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது, கொடி படத்துக்காக அவருடன் ஜோடி சேர்ந்துள்ளது சந்தோஷமாக உள்ளது. என்னுடன், ஷாமிலியும் இந்த படத்தில் நடிக்கிறாங்க.


புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்க மறுப்பது ஏன்.?


நிச்சயமாக அப்படி இல்லை. முன்பு அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு அமையவில்லை. இப்போது என் மெயிலில் 10 புது இயக்குனர்களின் கதை இருக்கு, எல்லாமே என்னை வைத்து எழுதிய கதைகள், கூடிய சீக்கிரம் புது இயக்குனர்கள் படத்தில் நடிப்பேன்.


13 வருடத்தில் சினிமாவில் நடந்ததும், நடக்காததும் என்ன.?


மணி சார், கமல் சார் , கெளதம் சார், படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பு நான் எதிர் பார்க்காத ஒன்று. ஆனால் ஷங்கர், ரஜினி சார் படங்களில் இன்னும் நடிக்காதது நடக்காத ஒன்றாக உள்ளது. விரைவில் இது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.



கதைக்காக சம்பளத்தை விட்டு கொடுத்த அனுபவம் உண்டா?


அதெல்லாம், பலமுறை நடந்திருக்கிறது. முதலில், சம்பளம் பற்றி பேச மாட்டேன்; கதை தான் முக்கியம். கதை, மிகவும் பிடித்திருந்ததால் சம்பளத்தை குறைத்த அனுபவமும் உண்டு.


நயன்தாராவுடன் நடிக்கிறீங்களாமே?


அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஒரு சில மீடியாக்கள் தான், அப்படி எழுதுகின்றன. செய்தி உண்மையெனில், சமூக வலைதளத்தில் நானே அதை பதிவு செய்திருப்பேனே; நானும், நயனும் நெருங்கிய தோழிகள். எங்களுக்கு பொருத்தமான கதை கிடைத்தால் கண்டிப்பாக சேர்ந்து நடிப்போம்.


இளமையின் ரகசியம் என்ன?


எல்லாமே சாப்பிடுவேன். ஆர்யா கூறியது போல், இரண்டு பிளேட் பிரியாணி கூட சாப்பிடுவேன். எந்த அளவு சாப்பிடுகிறேனோ அந்த அளவு, அடுத்த சில நாட்கள் பட்டினி கிடப்பேன். பழரசங்கள் மட்டும் சாப்பிடுவேன்.


ஆர்யா, உங்களை தங்கச்சி மாதிரின்னு சொன்னாரே?


அப்படியா சொன்னார். ஆர்யா, உண்மையாகவே ரொம்ப நல்ல மனிதர். அவரிடம் எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். ஹீரோயின்களுக்கு நல்ல நண்பர். அவர் வீட்டுக்கு எப்போது சென்றாலும் சாப்பிடலாம். எங்கு வேண்டுமானாலும் அவரை அழைத்துச் செல்லலாம். ஆனால், என்னை அவர் தங்கச்சின்னு சொன்னது, நல்ல காமெடி. இதுகுறித்து, அவரிடமே கேட்டு விடுகிறேன்.


பார்ட்டிக்கு போறதை குறைச்சிட்டீங்க போல...?


நெருக்கமான யாருக்காவது பிறந்த நாள் பார்ட்டி நடந்தால் தான் போவேன். ஆனால் நான், அடிக்கடி பார்ட்டி போவது போல் வெளியில் செய்தி பரவி விட்டது. நண்பர்களை ஒரே இடத்தில் சந்திக்கிறோம்; அவ்வளவு தான். சாதாரணமாக எல்லாரும் செய்வது தான். ஆனால், சினிமாவில் மட்டும் இதை வேறு ஏதோ பெரிய விஷயமாக கருதுகின்றனர்.


திரும்பவும் ராணாவுடன் காதலா...?


எல்லாரிடமும் பேசுவது போல் தான், ராணாவிடமும் பேசுகிறேன். நட்பை தவிர வேறு எதுவுமே இல்லை. பத்திரிகைகாரர்களே இதைப் பற்றி எழுதுகிறீர்கள்; பின், நீங்களே, காதலா என கேள்வி கேட்கிறீர்கள்.


எப்போது தான் திருமணம்?


பிசியா இருக்குற நேரத்தில நான் மட்டும் இல்ல; வேற யாருமே கல்யாணம் பற்றி முடிவெடுக்க மாட்டாங்க. இப்போதெல்லாம், 30 அல்லது 40 வயது, பெரிய விஷயம் இல்லை. எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என தெரியாது. மனதுக்கு பிடித்த ஆள் கிடைக்க வேண்டும். ராணி முகர்ஜி, ஐஸ்வர்யா எல்லாம், லேட்டாகத் தானே கல்யாணம் செய்தாங்க. பிரியங்கா, இப்போது கூட கலக்குறாங்க. வாழ்க்கை துணை கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. சந்தர்ப்பம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா.?


மாடலிங் பண்ணும் போது சினிமா எனக்கு சரி வராதுன்னு இருந்தேன், வர மாட்டேன் என்று சொல்லிகிட்டு இருந்தேன். ஆனால் சினிமாவிற்கு வந்து 13 வருஷம் ஆகிவிட்டது. இன்னும் 10 - 15 வருஷத்தில என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எனக்கு அரசியலில் 'ஏபிசிடி' கூட தெரியாது. தெரியாத விசயத்தை நான் கையில் எடுக்க மாட்டேன்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in