Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பாலா டெரரான ஆளா...? மனம் திறக்கிறார் சசிக்குமார்!

13 ஜன, 2016 - 17:52 IST
எழுத்தின் அளவு:
Is-Bala-is-Terror-person---Sasikumar-interview

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த பொங்கலுக்கு தாரை தப்பட்டை உடன் வருகிறார் சசிகுமார். பாலாவின் இயக்கம், இளையராஜாவின் இசை என இரு பெரும் பலத்துடன் களம் இறங்குகிறார். தினமலர் இணைய தளத்திற்கு அவர் அளித்த பொங்கல் சிறப்பு பேட்டி:


பாலா நினைத்தால் எந்த ஹீரோவையும் நடிக்க வைக்க முடியும், உங்களை எப்படி தேர்வு செய்தார்.?


உண்மைதான். அவர் நினைத்தால் யாரையும் அழைத்து நடிக்க வைப்பார். ஆனால் அவர் மனதில் உருவாகிற கேரக்டருக்கு யார் தேவையோ அவர்களைத்தான் அழைப்பார். நடிகர்களுக்காக படம் பண்ண மாட்டார். சேது படத்தில் அவரிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்தேன். அப்போதிருந்தே அவர் என்னை கவனித்துக் கொண்டிருந்தார். நான் தனியாக வந்து படம் இயக்கி, நடிக்க ஆரம்பித்த பிறகும் நாங்கள் தொடர்பில்தான் இருந்தோம்.


திடீர்னு ஒரு நாள் கூப்பிட்டு தாரை தப்பட்டை கதை சொன்னார். கதை நல்லா இருக்கு யார் நடிக்கப்போறான்னு கேட்டேன். சன்னாசி கேரடக்டர்ல நீ தான் நடிக்கப்போறேன்னு சொன்னார். நான் எப்படிண்ணே அந்த கேரக்டர்ல...ன்னு தயங்கினேன். தலைமுடியை மட்டும் கொண்டை போடுற அளவிற்கு நீளமா வளர்த்துட்டு வா மற்றதை நான் பார்த்துக்கிறேன்னு சொன்னார். இப்படித்தான் படத்துக்குள்ள வந்தேன்.


பாலா ரொம்ப டெரர் என்பார்களே?


இப்படி யார் கிளப்பி விட்டதுன்னு தெரியல. அவர் ரொம்ப சாஃப்டான ஆள். என்னோட குருங்றதுக்காக சொல்லல. அவர்கிட்ட வேலை பார்த்த ஆர்யா, அதர்வா, விஷால், விக்ரம்லாம் திரும்ப திரும்ப அவர் படத்துல நடிக்கிறாங்களே. டெரரா இருந்தா நடிப்பாங்களா? அவர் படப்பிடிப்புக்கு வந்திட்டார்னா. அவர் முன்னாடி எதுவுமே தெரியாம நிக்கணும். அவர் மனசுக்குள்ள இருக்கிற கேரக்டரை நமக்குள்ள இறக்குவாரு. சூழ்நிலையையும் நமக்கு அமைச்சுக் கொடுப்பார். அந்த கேரக்டராவே மாத்திடுவாறு. அப்புறம் நடிக்கவே தேவையில்லை. அவர் சொன்னதை செய்தா போதும். இதுதான் அவரோட ஒர்க்கிங் ஸ்டைல். அவர் நினைச்ச மாதிரி வர்ற வரைக்கும் திரும்ப திரும்ப எடுப்பார். ஒரு வேளை அதைத்தான் டெரர்னு சொல்றாங்களோ என்னவோ.


வரலட்சுமி டான்சர்... அவரோடு எப்படி நடனம் ஆடினீங்க?


ஒப்பனிங் சாங்கல மட்டும்தான் நான் ஆடியிருக்கேன். அவருக்கு கரகாட்டம் புதுசு, எனக்கு ஆட்டமே புதுசு. டான்ஸ் மாஸ்டர்கள் சொன்னதை செய்தோம். படம் முடிஞ்சு பார்த்தபோதுதான் டான்ஸ் ஆடியிருக்கோம்னே தெரிஞ்சுது. ஆனால் வரலட்சுமி படம் முழுக்க செம ஆட்டம் போட்டிருக்காங்க. நான் கதைப்படி தாரை தப்பட்டைங்ற குழுவை நடத்துறவன். தவில் அடிக்கிறவர் வரலைன்னா தவில் அடிப்பேன். நாதஸ்வரம் ஊதுறவர் வரலைன்னா நாதஸ்வரம் வாசிப்பேன். இப்படி எல்லாம் தெரியும், எதுவும் முழுசா தெரியாது. அப்படி ஒரு கேரக்டர்.


படம் என்னாலதான் தாமதம்னு வெளிப்படையா சொல்லியிருக்கீங்களே-?


இப்பவும் அதைத்தான் சொல்லுவேன். பொதுவா பாலா படங்கள் தாமதமாகத்தான் வரும் என்பதை இந்த படத்துல உடைக்கணும்னு பாலாவே முடிவு பண்ணித்தான் ஷூட்டிங் போனோம். தஞ்சாவூர்ல சூட்டிங். ஒரு நாளைக்கு இரண்டு சீன் வரைக்கும்கூட எடுத்தோம். அதே வேகத்துல போயிருந்தா படம் 50 நாளைக்குள் முடிந்திருக்கும். தீபாவளிக்கே ரிலீஸ் ஆகியிருக்கும். ஆனால் கிளைமாக்ஸ் எடுத்தபோது நான் ஓடிவந்து கீழே விழணும், விழும்போது இரண்டு கையையும் தரையில நிப்பாட்டணும். இந்த சீன் எடுக்கிறப்போ ஆர்வக்கோளாறுல ரொம்ப வேகமாக ஒடிவந்து ஒரு கையயை மட்டும் நிப்பாட்டினேன். உடலின் மொத்த எடையும் கையில இறங்கி எலும்பு உடைஞ்சு, சதை கிழிஞ்சு ரணகளமாகிப்போச்சு. சரியா 4 மாசம் முடங்கிட்டேன். அதானாலதான் படம் தாமதம்.


இளையராஜாவின் ஆயிரமாவது படம் என்பதை எப்படி பார்க்குறீங்க?


பாலா அண்ணன் மாதிரியே நானும் இளையராஜா பக்தன். சுப்பிரமணியபுரம் படத்துலயே அவரோட மியூசிக்கை யூஸ் பண்ணியிருக்கேன். இப்போ அவரோட ஆயிரமாவது படத்துல நடிக்கிறதுல ரொம்ப பெருமையாக இருக்கு. முன்னாடியே பின்னணி இசை போட்டு அதை வைத்து நடித்த அனுபவமும் புதுசா இருந்திச்சு.


படம் முடிந்த கையோடு அடுத்த படப்பிடிப்புக்கு போனது ஏன்?


தாரை தப்பட்டைக்கு முன்பே பண்ண வேண்டிய படம் அது. திடீர்னு இதுக்குள்ள வந்துட்டேன். இதுவும் தாமதமாகி விட்டது. பாவம் அந்த இயக்குனரும், தயாரிப்பாளரும் எனக்காக பல மாதம் காத்துக்கிட்டிருக்காங்க. இனியும் காக்க வைக்க கூடாதுன்னு தான். தாரை தப்பட்டை முடிஞ்சதுமே ஹேர் கட் பண்ணிட்டு சூட்டிங் கிளம்பிட்டேன்.


தொடர்ந்து நடிக்கிறீங்களே? இயக்குனர் பாலாவை எப்போது பார்க்கலாம்?


ஏகப்பட்ட ஸ்கிரிப்டோட ரெடியா இருக்கேன். கையில இருக்கிற படத்தை நடிச்சு முடிச்சு கொடுத்துட்டு இறங்கிட வேண்டியதுதான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in