'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையான விசயங்களை டுவிட்டரில் வெளியிட்டு பிரபலங்களின் எதிர்ப்புகளை சம்பாதித்து வருபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. யாரையாவது குற்றம் சொல்ல வேண்டும் என்றாலோ அல்லது புகழ்ந்து பேச வேண்டும் என்றாலோ அதை நெத்தியடியாக சொல்லி வருவதால், இந்தியா திரையுலகின் மிகப்பெரிய சர்ச்சை நாயகனாகியிருக்கிறார் ராம்கோபால்வர்மா.
அந்த வகையில், சமீபத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை ஒரு நடிகராக மட்டுமே எனக்கு பிடிக்கும் என்று சொன்னவர், சினிமாவுக்கு வெளியே அவரை பிடிக்காது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதமாக பேசியிருந்தார். அதேசமயம் சிரஞ்சீவியின் ரசிகர் நான் என்று சொன்னதால் அந்த பிரச்னை பூதாகரமாக வெடிக்கவில்லை. இதனால் சிரஞ்சீவியின் ஆந்திர ரசிகர்களின் வாயில் விழாமல் தப்பித்துக்கொண்டார் ராம் கோபால் வர்மா.
இந்நிலையில், தான் எழுதியுள்ள கன்ஸ் அன்ட் தைஸ் என்ற சுயசரிதை புத்தகத்தில் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் ராம்கோபால்வர்மா. இதுகுறித்து அவர் கூறும்போது, ஸ்ரீதேவி வானில் இருந்து இறங்கி வந்த ஒரு அழகான தேவதை. அவர் போனிகபூர் வீட்டு கிச்சனில் சமைத்துக்கொண்டிருப்பதை என்னால் ஏற்க முடியாது. இதற்காக நான் போனிகபூரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்ரீதேவியை வைத்து தெலுங்கு, இந்தியில் 4 படங்கள் இயக்கியிருக்கிறார் ராம்கோபால்வர்மா.