ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
உயிரோடு இருப்பவர்கள் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகளுக்கு அப்படி என்னதான் அதில் இன்பம் கிடைக்கிறதோ தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பாக பிரபலங்களை குறிவைத்து தான் இந்த வதந்திகள் பரவுகின்றன. தமிழ்சினிமாவில் கவுண்டமணி, கனகா, மறைந்த ஆச்சி மனோரமா ஆகியோர் இப்படி வதந்தியால் பாதிக்கப்பட்டவர்கள் தான். கேரளாவில் கூட தேசிய விருதுபெற்ற மலையாள நடிகர் சலீம் குமார், சமீபத்தில் குணச்சித்திர நடிகர் மாமுகோயா ஆகியவர்களும் இந்த மரண வதந்திக்கு தப்பவில்ல.. இதில் மாமுகோயா, “நான் செத்தா நானே பேஸ்புக்கில் அப்டேட் பண்ணுகிறேன்.. உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம்” என பதிலடி கொடுத்திருந்தார்.
இப்போது லேட்டஸ்டாக இந்த மரண வதந்தியில் சிக்கியவர் மலையாள காமெடி நடிகரான ஜெகதிஸ்ரீ குமார். இவர் சில வருடங்களுக்கு முன் விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு, தற்போது நலமுடன் இருக்கிறார்.. ஆனால் இன்றுகாலை இவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டதாக பேஸ்புக்கில் இவரது புகைப்படத்துடன் யாரோ பொய்ச்செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தனர். பலரும் நம்பவேண்டும் என்பதற்காக பிரபல் சேனல் ஒன்றின் டிவி லோகோவுடன் கூடிய ஸ்க்ரீன் ஷாட்டை ஜெகதிஸ்ரீ குமார் படத்திற்கு பிரேமாக வைத்திருந்ததால் பலரும் இது உண்மைச்செய்தி என்றே நம்பிவிட்டார்கள்.. ஆனால் இந்த தகவல் கேள்விப்பட்ட ஜெகதிஸ்ரீ குமாரின் மகள் ஸ்ரீலட்சுமி ஸ்ரீகுமார் இதை மறுத்துள்ளார்.. தனது தந்தை நலமாக உள்ளார் என்று கூறியுள்ளதோடு, இந்த வதந்தியை பரப்பிய வீணர்களையும் வன்மையாக கண்டித்துள்ளார்.