திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
கேரளாவில் ஹிட் படங்களின் திருட்டு விசிடிகள் தொடர்ந்து வெளியாவது தயாரிப்பாளர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. நம்ம ஊரைப்போல் இல்லாமல் கேரளாவில் திருடத் விசிடி விற்பது வெகுவாக குறைவுதான். இருந்தாலும் அங்கும் சில, பைரேட் மாபியாக்கள் ஊடுருவிவிட்டார்கள். “பைரஸியை நிறுத்துங்கள் எப்படி எங்களை வேறொருவரின் யோசனைகளை, சிந்தனைகளை திருடக்கூடாது என்கிறீர்களோ, அதேபோல எங்களது படங்களையும் யாரும் திருடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு படத்திற்கு அதற்குண்டான சன்மானம் கிடைக்க வழி செய்யுங்கள்” என பிரேமம் படத்தின் திருட்டு விசிடி வெளியானபோது எதிர்ப்புக்குரல் கொடுத்தார் மம்முட்டி.
பிரேமம் பட விவகாரத்துக்குப்பின் கொஞ்சநாள் அடங்கியிருந்தபோது போல இருந்த இந்த கும்பல், இப்போது பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'அமர் அக்பர் அந்தோணி' படத்தின் திருட்டு விசிடியை விற்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கேரளா திக்கரக்கரா போலீஸார், இந்தப்படத்தின் சிடிக்களை சப்ளை செய்த ஸ்ரீகாந்த் என்பவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவன் வசம் இருந்த படத்தின் மொத்த டிவிடிகளையும் மற்றும் சில படங்களின் டிவிடிகளையும் கைப்பற்றியுள்ளனர்.