Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நடிப்பில் ஆர்வம் காட்டும் எழுத்தாளர்கள்

25 நவ, 2015 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Writers-interesting-in-Acting

பொதுவாக தமிழ் எழுத்தாளர்களுக்கு சினிமாவையும் பிடிக்காது. சினிமா கலைஞர்களையும் பிடிக்காது. இப்போதும் சினிமாவுக்கு பாட்டு எழுத மாட்டேன். வசனம் எழுத மாட்டேன் என்று மறுக்கிற எழுத்தாளர்கள் உண்டு. ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நடிக்க எழுத்தாளர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். பாட்டு எழுதுவது, வசனம் எழுதுவதை விட நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.


பாட்டு வாய்ப்பு கேட்டு வந்த ஜோ மல்லூரியை, கும்கி படத்தின் மூலம் நடிகராக்கினார் இயக்குனர் பிரபுசாலமன். ஜோ மல்லூரி இப்போது எழுதுவதை விட்டுவிட்டு முழுநேர நடிகராகிவிட்டார். பத்து புத்தகம் எழுதி சம்பாதிக்கிற காசை ஒரு படத்தில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். வேல ராமமூர்த்தி என்ற எழுத்தாளர் சினிமாவுக்கும் சிறிதும் தொடர்பில்லாதவர் அவரை விழா படத்தின் மூலம் வில்லனாக்கி, கொம்பன் படத்தின் மூலம் முழுநேர நடிகராக்கிவிட்டார்கள்.


இலங்கையிலிருந்து வந்த பிரபல எழுத்தாளர் ஜெயபாலனை ஆடுகளம் படத்தின் மூலம் நடிகராக்கினார் வெற்றி மாறன். அவரும் இப்போது பிசியான குணசித்திர நடிகர். இப்போதெல்லாம் அவர் இலக்கிய கூட்டங்களுக்கு போவதைவிட ஆடியோ பங்ஷன்களுக்குத்தான் அதிகமாக போகிறார்.


பாடல் ஆசிரியர் கபிலனை தசாவதாரம் படத்தில் நடிகராக்கிய கமலஹாசன், தூங்காவனம் மூலம் சுகாவை நடிகராக்கி இருக்கிறார். பேராசிரியர் ஞானசம்பந்தனை நடிகராக்கிய பெருமையும் கமலையே சாரும். பாடலாசிரியர் பா.விஜய், சினேகன் ஆகியோர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறைசூடன் புகழ் படத்தின் மூலம் நடிகராகியுள்ளார்.


மற்றுமொரு எழுத்தாளரான ராஜு முருகன், குக்கூ படத்தை இயக்கினாலும் அவருக்குள்ளும் நடிகன் ஆசை உண்டு. குக்கூ படத்தில் பத்திரிகையாளராகவே நடித்தார். ஷோபா சக்தி என்ற எழுத்தாளர் திலீபன் என்ற படத்தில் நடித்துள்ளார். இலங்கை தமிழர்கள் பற்றிய இந்தப் படம் பல விருதுகளை பெற்றுள்ளது. மனுஷ்யபுத்ரன் சமீபத்தில் ஒரு படத்தில் நீதிபதியாக நடித்தார். எழுத்தாளர் ஏகாதசியும் நடித்துக் கொண்டிருக்கிறார்.


இன்னும் பல எழுத்தாளர்கள் நடிகராகும் ஆசையில் இருக்கிறார்கள். குறைந்த உழைப்பு, கைநிறைய சம்பளம். நடிகன் என்பதால் கிடைக்கும் விளம்பரம், புகழ் வெளிச்சம் இவை எவ்வளவு பெரிய எழுத்தாளருக்கும் கிடைக்காது. காரணம் இது எழுத்துக்களை விட சினிமாவை நேசிக்கிற நாடு இது. அதனால் காலத்துக்கு ஏற்ற மாதிரி எழுத்தாளர்களும் தங்களை மாற்றிக் கொண்டு நடிகராக ஆர்வம் காட்டுகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in