பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பொதுவாக தமிழ் எழுத்தாளர்களுக்கு சினிமாவையும் பிடிக்காது. சினிமா கலைஞர்களையும் பிடிக்காது. இப்போதும் சினிமாவுக்கு பாட்டு எழுத மாட்டேன். வசனம் எழுத மாட்டேன் என்று மறுக்கிற எழுத்தாளர்கள் உண்டு. ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நடிக்க எழுத்தாளர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். பாட்டு எழுதுவது, வசனம் எழுதுவதை விட நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பாட்டு வாய்ப்பு கேட்டு வந்த ஜோ மல்லூரியை, கும்கி படத்தின் மூலம் நடிகராக்கினார் இயக்குனர் பிரபுசாலமன். ஜோ மல்லூரி இப்போது எழுதுவதை விட்டுவிட்டு முழுநேர நடிகராகிவிட்டார். பத்து புத்தகம் எழுதி சம்பாதிக்கிற காசை ஒரு படத்தில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். வேல ராமமூர்த்தி என்ற எழுத்தாளர் சினிமாவுக்கும் சிறிதும் தொடர்பில்லாதவர் அவரை விழா படத்தின் மூலம் வில்லனாக்கி, கொம்பன் படத்தின் மூலம் முழுநேர நடிகராக்கிவிட்டார்கள்.
இலங்கையிலிருந்து வந்த பிரபல எழுத்தாளர் ஜெயபாலனை ஆடுகளம் படத்தின் மூலம் நடிகராக்கினார் வெற்றி மாறன். அவரும் இப்போது பிசியான குணசித்திர நடிகர். இப்போதெல்லாம் அவர் இலக்கிய கூட்டங்களுக்கு போவதைவிட ஆடியோ பங்ஷன்களுக்குத்தான் அதிகமாக போகிறார்.
பாடல் ஆசிரியர் கபிலனை தசாவதாரம் படத்தில் நடிகராக்கிய கமலஹாசன், தூங்காவனம் மூலம் சுகாவை நடிகராக்கி இருக்கிறார். பேராசிரியர் ஞானசம்பந்தனை நடிகராக்கிய பெருமையும் கமலையே சாரும். பாடலாசிரியர் பா.விஜய், சினேகன் ஆகியோர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறைசூடன் புகழ் படத்தின் மூலம் நடிகராகியுள்ளார்.
மற்றுமொரு எழுத்தாளரான ராஜு முருகன், குக்கூ படத்தை இயக்கினாலும் அவருக்குள்ளும் நடிகன் ஆசை உண்டு. குக்கூ படத்தில் பத்திரிகையாளராகவே நடித்தார். ஷோபா சக்தி என்ற எழுத்தாளர் திலீபன் என்ற படத்தில் நடித்துள்ளார். இலங்கை தமிழர்கள் பற்றிய இந்தப் படம் பல விருதுகளை பெற்றுள்ளது. மனுஷ்யபுத்ரன் சமீபத்தில் ஒரு படத்தில் நீதிபதியாக நடித்தார். எழுத்தாளர் ஏகாதசியும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இன்னும் பல எழுத்தாளர்கள் நடிகராகும் ஆசையில் இருக்கிறார்கள். குறைந்த உழைப்பு, கைநிறைய சம்பளம். நடிகன் என்பதால் கிடைக்கும் விளம்பரம், புகழ் வெளிச்சம் இவை எவ்வளவு பெரிய எழுத்தாளருக்கும் கிடைக்காது. காரணம் இது எழுத்துக்களை விட சினிமாவை நேசிக்கிற நாடு இது. அதனால் காலத்துக்கு ஏற்ற மாதிரி எழுத்தாளர்களும் தங்களை மாற்றிக் கொண்டு நடிகராக ஆர்வம் காட்டுகிறார்கள்.