'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு திரை உலகின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிப்பில் உருவாகியுள்ள குமாரி 21F திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் ராஜ் தருண் இயக்குனர் பூரி ஜெகன்நாத் எழுதிய கதையின் நாயகனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இப்படத்தை பிரபல நடிகை ரேவதி இயக்கவுள்ளார். தற்போது பூரி ஜெகன்நாத் மற்றும் ராஜ் தருண் இப்படத்திற்கான கதை விவாதத்திற்காக பேங்காங் சென்றுள்ளனர். இப்படத்திற்காக பூரி ஜெகன்நாத் கதை மற்றும் வசனங்கள் மட்டுமே எழுதவுள்ளார்.ரேவதியே இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை பூரி ஜெகன்நாதே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. நடிகர் வருண் தேஜ் நடிப்பில் லோபர் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.