டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாயும் புலி படத்தில், நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ள காஜல் அகர்வால் பேட்டி:
பாயும் புலி படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?
சவுமியா என்ற பெயர்; ரொம்ப பவர்புல் கதை. என் ரோலும், படத்தில் சும்மா வந்திட்டு போகிற மாதிரி இருக்காது; எல்லாருக்கும் பிடிக்கிற பொண்ணா இருப்பேன்.
எப்படி கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள்?
என்னோட முழு கவனமும் கதையில் தான் இருக்கும். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தா, கண்டிப்பா அந்தக் கதையை விட மாட்டேன்.
இயக்குனர் சுசீந்திரன் பற்றி?
அவரது இயக்கத்தில், நான் மகான் அல்ல படத்திற்கு அடுத்து நான் நடிக்கும், இரண்டாவது படம் இது. ரொம்ப வேகமாக இயங்கும் இயக்குனர்; ஆனால், எளிமையானவர்; எல்லாருக்குமே அவரோடு வேலை பார்க்க பிடிக்கும்.
ஜில்லா படத்தில், அந்த கண்ணுக்கு ஐந்து லட்சம் தரேன்டி... அந்த நெஞ்சுக்கு சொத்த எழுதித் தரேன்டி...ன்னு, வைரமுத்து உங்களை வர்ணித்து எழுதியிருந்தாரே; ரசிகர்கள் எப்படி உங்களை ரசித்தனர்?
ரசிகர்கள் என் கண்களை பற்றி அதிகம் வர்ணிச்சிருக்காங்க. அழகு ராஜா படத்தில், சித்ரா தேவி என்ற கேரக்டரில் நான் நடித்த போது, சந்தானம், கார்த்தி என்னை கிண்டல் அடிப்பாங்க. மற்றபடி, வைரமுத்து சார் என்னை, கொஞ்சம் ஓவராகவே வர்ணித்து, அந்த பாட்டை எழுதிவிட்டார்.
பாயும் புலி படத்திலும், சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா என, எழுதியிருக்கிறார்; எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு.
புது இயக்குனர்களின் படங்களில் நடிக்க மாட்டீர்களா?
அப்படி எல்லாம் இல்லை. கதை எனக்கு பிடித்திருந்தால், புது இயக்குனர், பழைய இயக்குனர் என்று பார்க்காமல், கண்டிப்பாக நடிப்பேன். சொல்லப்போனால், புது இயக்குனர்கள் என்னிடம் அதிகமாக கதை சொல்ல வரவில்லை.
பயணம் செய்வது உங்களுக்குப் பிடிக்குமே; எந்த நாட்டிற்கு அதிகமாக போய் வந்தீர்கள்?
சுவிஸ் எனக்கு ரொம்ப பிடித்த, நான் ரசித்த நாடு; லண்டன் கூட பிடிக்கும். நம் நாட்டில் கோவா.
தமிழ், தெலுங்கில் பிசியா இருக்கீங்க; எந்த மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
தமிழ், தெலுங்கு, இந்தி என, எந்த மொழியானாலும், அந்த சமயத்தில் வரும் கதைகளைப் பொருத்தே, நடிக்க ஒப்புக் கொள்கிறேன். மற்றபடி மொழி பார்ப்பது இல்லை.
உங்கள் தங்கை நிஷாவுடன் சேர்ந்து, தங்க நகைக் கடை துவக்கியுள்ளீர்களாமே, இந்த செய்தி உண்மையா?
அய்யோ இல்லை... நானும், என் தங்கையும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தோம்; எங்கள் கடை சாதாரண கடை தான். எங்கள் போட்டோவைப் பார்த்து பலரும் அப்படி எழுதி விட்டனர்.
இயக்குனர் ராஜமவுலியின், மகதீரா படத்தில் நடித்தீர்கள். ஆனால், பாகுபலியில் அந்த வாய்ப்பு ஏன் உங்களுக்கு கிடைக்கவில்லை?
எனக்கும் அந்த கவலை இருக்கு. ஆனால், இயக்குனருக்கு எந்த கதாபாத்திரத்திற்கு, யார் பொருத்தமாய் இருப்பர் என்று நல்லாவே தெரியும். இன்னும் நிறைய டைம் இருக்கு. அடுத்தடுத்த படங்களில் பார்ப்போம்.
தமிழ், தெலுங்கு இதில், எந்த மொழியில் உங்களுக்கு அதிகம் போட்டி இருக்கு?
தமிழ், தெலுங்கு என்று இல்லை; எல்லா மொழிகளிலுமே போட்டி இருக்கு. எனக்கு மட்டும் அல்ல, எல்லா கதாநாயகிகளும் இதை உணர்வாங்க. ஒருபக்கம் நல்ல நல்ல கதைகளா அமையும்; யாருக்கு என்ன வாய்ப்பு கிடைக்குதோ, அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விஷால் பற்றி?
விஷால் கூட முதல் முறையாக, பாயும் புலி படத்தில் நடிச்சிருக்கேன்; அவர் கடின உழைப்பாளி. கேமரா முன்னாடி வந்துட்டார்னா, சுத்தமா மாறிடுவார்; உடன் இருக்கும் எல்லாருக்குமே எனர்ஜி தருவார். அப்படி பேசுவார்; அவரோடு நடித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம்.
உங்களுக்கு ரொம்ப பிடித்த, ஹீரோ?
ரஜினி சார் ரொம்ப பிடிக்கும்.
பிடித்த, ஹீரோயின்?
ஜோதிகா.
- நமது நிருபர் -