‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
சின்னத்திரையில் இளமை புதுமை, காமெடி டைம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் அர்ச்சனா. திருமணத்திற்கு பிறகு மீண்டும் மீடியாவில் என்ட்ரியாகியிருக்கும் அவர், சினிமா, சின்னத்திரை, எப்எம் என மூன்று மீடியாக்களிலும் பிசியாக தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
அவரிடத்தில், தினமலர் இணையதளத்திற்காக பேட்டி கண்டபோது அவர் அளித்த பதில்கள் இங்கே இடம்பெறுகிறது.
தற்போது என்னென்ன நிகழ்ச்சிகளில் உங்களது பங்களிப்பு உள்ளது?
ஜீ தமிழில் முற்றிலும் பெண்களுக்கான அதிர்ஷ்டலட்சுமி -என்ற பெயரில் ஒரு கேம் ஷோ நடத்துகிறேன். செப்டம்பர் 2-ந்தேதி முதல் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பெண்களின் அழகு, அறிவு, ஆற்றல், அதிர்ஷ்டம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும் இந்த கேமில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் உண்டு.
அதோடு எப்எம்மில் டாப் 10 என்ற சினிமா நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறேன். அதோடு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் ஆம்பூர் அனு என்றொரு கலக்கலான வேடத்திலும் நடிக்கிறேன்.
சின்னத்திரை பிரபலமான நீங்கள், டிவி சீரியல்களில் நடிக்காமல் சினிமாவுக்கு வந்தது ஏன்?
சீரியல்களில் நடிக்க என்னை யாரும் அழைக்கவில்லை. வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்க அழைத்தபோதுகூட எனக்கு நடிக்க தெரியாது என்று தயங்கினேன். ஆனால் ஷாஜி கைலாஷ் சார்தான் இந்த கேரக்டருக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள். அதனால் உங்களை நான் நடிக்க வைக்கிறேன் என்று சொன்னார். அவரும், ஆர்கே சாரும் கொடுத்த உற்சாகத்தில்தான் அந்த படத்தில் நடித்தேன்.
வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் எந்த மாதிரியான ரோலில் நடிக்கிறீர்கள்?
இந்த படத்தில் 5 நாயகிகளில் ஒருவராக நடிக்கும் இனியாவின் அக்காவாக நடிக்கிறேன். இனியா இந்த படத்தில் நடிகையாகவே நடிக்கிறார். அதனால் அவர் கூடவே படப்பிடிப்புகளுக்கு வரும் நான் பெரிய அளவில் அலம்பல் செய்கிற கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படம் ரிலீசாகும்போது நான் நடித்துள்ள ஆம்பூர் அனு கேரக்டர் பேசப்படும். அதையடுத்து சினிமாவில் நான் பிசியான கேரக்டர் நடிகையாகி விடுவேன்.
எந்த மாதிரியான கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுப்பீர்கள்?
எனக்கு வரையறை கிடையாது. என்னைப்பொறுத்தவரை பார்பாமென்ஸ் பண்ணுவதற்கு ஸ்கோப் இருந்தால் பாட்டி வேடம் கிடைத்தாலும் நடிப்பேன். இந்த விசயத்தில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை.
நடிப்பதை விட நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதுதான் கடினம் என்கிறார்களே?
அப்படியெல்லாம் இல்லை. நடிப்பதிலும் கஷ்டம் உள்ளது. என்னைக்கேட்டால் நடிப்பது, தொகுத்து வழங்குவதை விட ரேடியோ ஜாக்கியாக ஒர்க் பண்ணுவதுதான் ரொம்ப கஷ்டமான விசயமாக நினைக்கிறேன். நமக்கு முன்னாடி யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால், லட்சக்கணக்கானோர் இருப்பது போன்ற மனநிலையுடன் தனி அறையில் அமர்ந்து பேச வேண்டும். அதற்கு ரொம்பவே பொறுமை தேவை.
சினிமாவில் பிசியாகி விட்டால் சின்னத்திரையை தவிர்த்து விடுவீர்களோ?
அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். என்னை மக்களுக்கு அடையாளம் காட்டியதே சின்னத்திரைதான். இளமை புதுமை, காமெடி டைம் போன்ற நிகழ்ச்சிகள் என்னை பெரிய அளவில் பிரபலப்படுத்தின. இப்போதும் சின்னத்திரை தொகுப்பாளினி என்ற பெயர்தான் எனக்கு அடையாளமாகியிருக்கிறது. அதனால் சினிமா, சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் எனது கலைப்பயணம் தொடரும்.