தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆரஞ்சு மிட்டாய் மூலம் தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்துள்ளார் விஜய் சேதுபதி. முதல் பேட்டியின் போது இருந்த அதே இயல்பான பேச்சு, உண்மையை மறைக்காத பதில். சில இக்கட்டான கேள்வியாக இருந்தால் "அத விடுங்கண்ணே அடுத்ததை பற்றி பேசுவோம்" என்கிற நாகரீக நழுவல் என அப்படியே இருக்கிறார் விஜய் சேதுபதி.
அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி:
நயன்தாராகூட ஜோடியாக நடிக்கிற நேரத்தில் ஆரஞ்சு மிட்டாய் படத்தில் 55 வயது முதியவராக நடிக்கிறீங்களே...?
இப்படித்தான் நடிப்பது, அப்படித்தான் நடிப்பதுன்னு எந்த விதிமுறையும் வச்சிக்ககூடாதுன்னு நினைக்கிறவன் நான். சூது கவ்வும் படத்திலேயே 40 பிளஸ்சா நடிச்சிருக்கேன். எனக்கு இது புதிசில்லை. ஆரஞ்சு மிட்டாயில் ஒரு பெரிய நடிகர்தான் அந்த கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. ரமேஷ் திலக் நடித்துள்ள கம்பவுண்டர் கேரக்டரில் நான் நடிப்பதாக இருந்தது. அந்த நடிகரின் கால்ஷீட் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்தது. ஒரு நாள் என்னோட மேக்அப் மேனை கூப்பிட்டு நான் அந்த கேரக்டர் செய்தா எப்படி இருக்கும்னு கேட்டேன். முயற்சி பண்ணிப் பார்க்கலாமுன்னு சொன்னார். வயதான மேக்அப் போட்டார். அதை படம் எடுத்து இயக்குனர் பிஜுவுக்கு அனுப்பினேன், பிரமாதமா இருக்கு நீங்களே பண்ணிடுங்கன்னு சொன்னார். அப்படித்தான் நான் நடிக்க வேண்டியதாப்போச்சு.
தயாரிப்பாளர் ஆனது எப்படி?
சினிமாவில் நாலு காசு சம்பாதிக்கிறேன். அதுல சின்ன பட்ஜெட்ல நல்ல படம் தயாரிக்கலாமுன்னு நினைச்சேன். சங்குதேவன் படத்தை ஆரம்பிச்சேன். சில காரணங்களால அது டிராப் ஆயிடுச்சு. அந்த நேரத்துலதான் என்னோட பிரண்ட் பிஜு விஸ்வநாத் ஆரஞ்சு மிட்டாய் கதையை என்கிட்ட சொன்னார். பல தயாரிப்பாளர்கிட்ட அனுப்பி வச்சேன். கமர்ஷியல் அம்சம் எதும் இல்லைன்னு திருப்பி அனுப்பினாங்க. அதுக்குள்ள என் கையிலேயும் கொஞ்சம் காசு சேர்ந்தது. நாமே தயாரிச்சிடலாமுன்னு ஆரம்பிச்சேன். அதன் பிறகு என்னோட ஸ்கூல் பிரண்ட் கணேசும் வந்து தயாரிப்பாளரா சேர்ந்துக்கிட்டான்.
ஆரஞ்சு மிட்டாயை தயாரிக்க முன்வந்த காரணம்?
கதைதான். 55 வயதுள்ள ஒரு பிடிவாதக்காரனுக்கு ஹார்ட் அட்டாக் வருது. அவனை ஆம்புலன்சில் ஒரு டிரைவரும், ஒரு கம்பவுண்டரும் அழைத்துப்போகிறார்கள். இந்த மூவருக்குமான உணர்ச்சி போராட்டம்தான் கதை. 48 மணி நேரத்துல நடக்கிற கதை. காமெடி, சென்டிமென்ட் எல்லாமே இருக்கும். ஒவ்வொருத்தரையும் அவுங்களோட தகப்பனை ஒரு நிமிஷம் நினைச்சு பார்க்க வைக்கும். நான் எங்கப்பாவோட நிறைய சண்டை போடடிருக்கேன். எத்தனை சண்டை போட்டாலும் நீ பெரிய ஆளா வருவேடா என்பார். அப்படி வரும்போது அவர் இல்லை. ஆரஞ்சு மிட்டாய் படத்தில் ரமேஷ் திலக்கின் அப்பாவாக என்னுடைய அப்பாவின் படத்தை பயன்படுத்தியிருக்கோம்.
படத்தில் ஹீரோயினுக்கு வேலையே இல்லையா...?
ஆரஞ்சு மிட்டாயை பொருத்தவரை கதைதான் எல்லாமே. நான் உள்பட எல்லோரும் அவர்கள் கேரக்டரை செய்கிறார்கள். அஷ்ரிதா ஹீரோயின்னு வச்சுக்கலாம். ரமேஷ் திலக்கோட காதலியா வர்றாங்க. நான் 55 வயது முதியவன் என்பதால் எனக்கு ஜோடி இல்லை.
திடீர்னு வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர்னு அடுத்தடுத்து அவதாரம் எடுத்திட்டீங்களே...?
இயக்குனர் பிஜுவும் நானும் பேசிக்கிட்டிருக்கும்போது திடீர் திடீர்னு கவுண்டர் டயலாக் போடுவேன். அதை கவனித்தவர் இந்த படத்துக்கு நீயே வசனம் எழுதிடுன்னு சொன்னார். அப்புறம் ஒரு பாட்டு எழுதிக் கொடுன்னார். அப்புறம் நீயே பாடுன்னார் இப்படி எல்லாத்துலேயும் இழுத்துவிட்டார். நானும் சொந்த படம் செலவு குறையட்டுமேன்னு செஞ்சிட்டேன்.
நானும் ரவுடிதான் நயன்தாரா பற்றி சொல்லுங்களேன்?
ஆரஞ்சு மிட்டாய் பற்றி இன்னும் இரண்டு கேள்வி கேட்க மாட்டீங்களா, சொந்த படம் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க. என்ன கேட்டீங்க நயன்தாரா பற்றி கேட்டீங்கல்ல... நீங்க எதிர்பார்க்கிற பதிலை சொல்ல மாட்டேன். அது அவுங்க பர்ஷனல். செட்டுக்கு வந்தால் பெரிய நடிகைங்ற பந்தா துளியும் கிடையாது. எத்தனை வெயில் அடிச்சாலும் கேரவனுக்குள்ள போய் உட்கார மாட்டாங்க மற்றவங்க நடிக்கிறத கவனிப்பாங்க. ரொம்ப சிம்பிள்.
ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிட்டீங்களே?
நான் ஆரம்பிக்கலீங்க. அவிங்களா ஆரம்பிச்சிட்டாங்க. ரசிகர் மன்றங்கள்ல எனக்கு உடன்பாடில்லை. எனக்கு கட்அவுட் வைக்காதீங்க. போஸ்டர் ஒட்டாதீங்கன்னுதான் இப்பவும் சொல்றேன். சில ஊர்கள்ல என்னோட படம் ஸ்பெஷல் ஷோ போடுறதுக்கு இரண்டு குரூப் சண்டை போட்டுகிறதா தொடர்ந்து தியேட்டர் சைடுலேருந்து தகவல் வந்திச்சு. இதை தடுக்கிறதுக்காக ஒரு குரூப்பை அங்கீகரிக்கிறதுன்னு முடிவு பண்ணினேன். அவ்ளோதான்.
தொடர்ந்து படம் தயாரிப்பீங்களா?
கண்டிப்பாக அடுத்துகூட மேற்கு தொடர்ச்சி மலைன்னு ஒரு படம் தயாரிக்கிறேன். அதில் நான் நடிக்கவில்லை.
உங்களின் அடுத்த படம்?