Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஹன்சிகாவுக்கு முன்னாடி யாருமே அழகியில்லை: சொல்கிறார் இயக்குநர் ஏ.ராஜசேகர்

01 ஜூலை, 2015 - 18:05 IST
எழுத்தின் அளவு:
No-one-can-beauty-infront-of-hansika-says-Director-Rajasekar

தமிழில் சத்யம் தெலுங்கில் சல்யூட் படங்களை இயக்கிய ஏ.ராஜசேகர் இப்போது இயக்கியுள்ள படம் உயிரே உயிரே. ஜெயப்பிரதாவின் மகன் சித்து நாயகனாக நடிக்க ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டுவிழா பல்வேறு விதத்தில் சர்ச்சையாக மாறியது. விழா திசைமாறி விவாத மேடையாக உருவாகி விட்டது. இந்நிலையில் உயிரே உயிரே இயக்குநர் ஏ.ராஜசேகரைச் சந்தித்த போது...


படம் எப்படி ஒப்பந்தமானது?


ஜெயப்பிரதா தன் திரையுலக நண்பர்கள், குடும்ப நண்பர்கள் அனைவரையும் அழைத்து ஒரு விருந்து கொடுத்திருக்கிறார். தன் மகனை நாயகனாக்குவது தெலுங்கில் வந்து வெற்றி பெற்ற இஸ்க் படத்தை ரீமேக் செய்வது என்று முடிவில் இருந்திருக்கிறார். தமிழில் யாரை வைத்து இயக்குவது என்று கேள்வி இருந்திருக்கிறது. பலரும் பலமாதிரி கூறியுள்ளனர். அப்போது அந்த ஹோட்டலிலுள்ள டிவியில் ஜெமினி சேனலில் நான் இயக்கிய சல்யூட் படம் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது. அதைப் பார்த்து இந்த மேக்கிங் நல்லாருக்கே இவரைப் பிடியுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். விஷால் தானே அந்தப் படத்தின் ஹீரோ அவரது அப்பாவைத் தொடர்பு கொண்டு என் நம்பரைக் கேட்டு வாங்கி என்னை அழைத்தார்கள்.


முடியுமா என்ற போது பையனைப் பார்க்காமல் நான் முடிவு செய்ய முடியாதே என்றேன். ரெயின் ட்ரீ ஓட்டலுக்கு வரச் சொன்னார்கள் போய்ச் சந்தித்த போது பையனுக்கு வட இந்திய சாயல் இருந்தாலும் காதல் கதைதான் என்பதால் செய்ய முடியும் என்று நம்பிக்கை வந்தது. மறுநாள் ஜெயப்பிரதா மேடத்தைச் சந்தித்த போது இரண்டு நிபந்தனைகள் போட்டேன்.


ஒன்று பையன் புதிது என்பதால் டாப் ஹீரோயின் இருந்தால்தான் சரிப்பட்டு வரும் என்றேன். தெலுங்குப் படத்தில் நித்யாமேனன் நடித்திருந்தார். அவரைவிட ஹன்சிகா இருந்தால்தான் சிறப்பாக இருக்கும் என்றேன். இன்னொன்று நான் சொல்கிற கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர்தான் வேண்டும் என்றேன். நான் இப்படிக்கேட்ட இரண்டு நிபந்தனைகளையும் ஒப்புக் கொண்டார். உடனடியாக வேலைகள் தொடங்கின.


ரீமேக் என்பது எளிதா? சவாலா?


நிச்சயம் ஒரு மொழியில் ஓடிய படத்தை ரீமேக் செய்வது சவாலான ஒன்றுதான் என்னைப் பொறுத்தவரை இஸ்க் படத்தை ரீமேக் செய்வது நிச்சயமாக சவால்தான். இஸ்க் படத்தை விக்ரம் குமார் இயக்கியிருந்தார். அவர் இப்போது சூர்யாவின் 24 படத்தை இயக்குகிறார்


தெலுங்கு இஸ்கில் நிதினும், நித்யாமேனனும் நடித்து இருந்தார்கள். நிதின் சுமார் 20 படங்கள் நடித்தவர். அவர் வரும் காட்சிகளுக்கான அறிமுகம், பேச்சு, உடல் மொழியைத் தமிழில் அப்படியே நாம் செய்து விடமுடியாது. ஒரு புதுமுக நடிகர் என்றால் எல்லாமும் மாற்ற வேண்டும் அவருடன் இணைந்துள்ளது ஹன்சிகா என்கிற பெரியஸ்டார். இருவரிடையே ஒரு சகஜநிலை வரவேண்டும். அதற்கான பேச்சு மொழி உடல் மொழி என எல்லாவற்றையும் மாற்றவேண்டும் அதே கதையை வேறு விதத்தில் ரசிக்கும்படி ரசவாதம் செய்ய வேண்டும். இப்படி நிறைய மாறுதல் செய்ய வேண்டி இருந்தது. அவ்வளவையும் செய்தோம், படத்தை 65 நாளில் முடிப்பதாகக் கூறினேன் 62 நாட்களில் முடித்தேன்.


தயாரிப்பாளராக ஜெயப்பிரதா எப்படி ?


எனக்கு இயக்குநருக்குரிய எல்லா சுதந்திரமும் கொடுத்தார். படப்பிடிப்பை எந்த வெளிநாட்டில் எடுக்க வேண்டும் சொல்லுங்கள் என்றார். எந்த வெளிநாடும் போக வேண்டாம் இந்தியாவிலேயே எவ்வளவோ இடங்கள் உள்ளன அங்கெல்லாம் எடுக்கலாம் என்றேன். அப்படி இமயமலைராணி எனப்படும் வரிக்குதிரை பனிமலையில் ஒரு பாடல் காட்சி எடுத்தோம். அங்கு வாகனங்கள் போக முடியாது. குதிரையில்தான் போகமுடியும். குதிரையில் போய் எடுத்தோம். ஆலப்புழாவில் ஒரு காட்சி சூரிய உதயம் மற்றும் சூரியமறைவு காட்சி காலை 4,30 முதல் 6 மணிவரை மாலை 6 மணி என்றெல்லாம் எடுத்தோம் நீருக்கடியில் கூட பாடல் காட்சி எடுத்தோம்.


இப்படி எல்லாமே பதற்றமின்றி 100 பேர் கொண்ட குழுவாக ஒரு சுற்றுலா செல்வது போல ஜாலியான பிக்னிக் போவது போல படப்பிடிப்பு நடந்தது. சித்து எளிமையானவர். ஹன்சிகாவும் வெகு இயல்பானவர். தயாரிப்பாளராக ஜெயப்பிரதா எதிலும் தலையிடவே யில்லை.


ஆடியோ விழா சர்ச்சையைத் தொடர்ந்து இந்தக் கேள்வி, யார் அழகி நித்யா மேனனா? ஹன்சிகாவா?


என் படத்து நாயகிகள் எல்லாருமே அழகிகள் தான் சத்யம் படத்தின் போது நயன்தாரா அழகி. இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஹன்சிகாவுக்கு முன்னாடி யாருமே அழகியில்லை. என் கதாநாயகியை நான் கொண்டாடாமல் யார் கொண்டாடுவது? மறுபடியும் சொல்கிறேன் ஹன்சிகாவுக்கு முன்னாடி யாருமே அழகியில்லை. அவர் படப்பிடிப்பில் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது. எத்தனைமுறை காட்சிகளை எடுத்தாலும் சலிக்காமல் நடித்துக் கொடுத்தார் அவரிடம் ஒரு கெட்ட பழக்கம் ஏதாவது ஜோக் சொல்லி சிரித்தால் அரைமணி நேரம் சிரித்துக் கொண்டே இருப்பார்.


உங்கள் படவிழாவில் ராதிகா பேசியது பற்றி வருத்தப் பட்டீர்களாமே?


ஆமாம் அவர் அப்படி பேசியதில் வருத்தம் தான் அவர் சிறந்த நடிகை என்பதால் அவர்மீது எனக்கு மதிப்பு மரியாதை இருந்தது. இன்னொருவர் சம்பந்தப்பட்ட விழாவில் இளையதலைமுறை நடிகர்களைப் பற்றிப் பேசியது தவறல்லவா? தன் சுயவிளம்பரத்துக்காக இப்படிச் சம்பந்தம் இல்லாமல் பேசினார். உயிரே உயிரே படவிழாவுக்கு வந்தவர் உயிரே உயிரே தொடர்புடைய தயாரிப்பாளர், நடிகர், நடிகைகளை வாழ்த்துவது நாகரிகம், அதுதான் முறையும்கூட. ஆனால் அவர் எதையோ மனதில் வைத்துக் கொண்டு பேசி தன் கண்ணியத்தை மட்டுமல்ல அந்த மேடையின் அழகையும் கெடுத்துவிட்டார்.


அது அழகான சாதனையாளர்களின் ஒரு சரித்திரமேடை. அதுதான் அனில்கபூர் கலந்து கொண்ட முதல் தமிழ்ப்பட விழாமேடை. தெலுங்கு திரையுலக பெரிய நட்சத்திரம் மோகன்பாபு வந்திருந்தார், கன்னடத்திரையுலம் சார்பில் அம்பிரிஷ் கலந்து கொள்ள முடியாததால் அவர் மனைவி சுமலதா வந்திருந்தார். இப்படி பல சாதனையாளர்கள். கலந்து கொண்ட விழாவில் அவர் அநாகரிகமாகப் பேசி விட்டார். இவ்வளவு பேரையும் வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டு வானத்தின் மீது எச்சில் துப்புவதாகக் கூறினார். உண்மையில் அவர்தான் அப்படித் துப்பியுள்ளார். இப்படிப் பேசினால் வெளியூரிலிருந்து வந்திருப்பவர்கள். என்ன நினைப்பார்கள்?


விஷால் உங்களை இயக்குநர் ஆக்கியதால் நீங்கள் கோபப்படுகிறீர்களா?


விஷால் என்னை இயக்குநராக்கியது உண்மைதான் அவரால் இயக்குநராக விட்டாலும் இதுதான் என் கருத்தாக இருக்கும்.


இப்போது நடிகர்களிடம் ஒற்றுமை இல்லையா? நாகரிகம் இல்லையா?


விக்ராந்த் படம் ஜெயிக்க விஷால் விஷ்ணு, ஆர்யா போல நடிகர்கள் பாடல் காட்சியில் நடிக்கிறார்கள். தனுஷ் தயாரித்த காக்கா முட்டையில் படத்தில் தன்னை விமர்சித்தாலும் சிம்பு நடித்து கொடுக்கிறார். ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் படத்தில் ஆர்யா வந்து தோன்றுகிறார். ஜீவா படத்தில் ஆர்யா வந்து தோன்றுகிறார். இப்போது சொல்லுங்கள் நடிகர்களிடம் ஒற்றுமை இல்லையா? நாகரிகம் இல்லையா?


ஆர்யா,விஷால், ஜெயம்ரவி, சூர்யா போன்ற பலரும் நட்பாக ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். தனக்கு வரும் படங்களை கூட அடுத்தவருக்குச் சொல்லிவிடுகிறார்கள். இது ராதிகாவுக்குத்தெரியவில்லையா? இது அவரது கணவரின் பிரச்சார மேடையல்ல என்பது ராதிகாவுக்குத் புரியவில்லையா? இது மாதிரி சம்பந்தமில்லாமல் பேசுவதைவிட விழாவுக்கு வராமலிருப்பதே நல்லது.


இவ்வாறு ராஜசேகர் பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in