Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பயத்துடன் காத்திருக்கிறேன்...! பாடலாசிரியர் கருணாகரன் பேட்டி

04 மே, 2015 - 15:18 IST
எழுத்தின் அளவு:
Lyricist-Karunakaran-interview

கெளதம்மேனன் படத்தில் பெஸ்ட் பாடலை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் இப்போது அவர் எந்த மாதிரியான சூழலில் பாடல் எழுதச்சொல்லப்போகிறாரோ என்று பயத்துடன் காத்திருக்கிறேன். இந்த பயம் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே என்பதில் ஏற்பட்டதுதான் என்கிறார் பாடலாசிரியர் கருணாகரன்.


தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...




சினிமா என்ட்ரி குறித்து?


வல்லவன் படத்தில்தான் முதன்முதலாக பாடல் எழுதினேன். யுவன் சார்தான் எனக்கு வாய்ப்புக்கொடுத்தார். முன்னதாக நான் எழுதிய சில கவிதைகளையும் கொடுத்தேன். அது சிம்பு சாருக்கு ரொம்ப பிடித்திருந்தது. அப்படித்தான் வல்லவன் படத்தில் எனக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பாடலுக்குப் பிறகுதான் எனது பேமிலி, நண்பர்கள் வட்டாரத்தில் என்னை பாடலாசிரியராக ஏற்றுக்கொண்டார்கள். அந்த வகையில், அந்த படம் எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்த படம் என்றுதான் சொல்வேன். அதுவரை மற்றவர்களின் பாடலை ஸ்கிரீனில் பார்த்து வந்த எனக்கு, முதன்முதலாக எனது பாடலை ஸ்கிரீனில் பார்த்தபோது ரொம்ப சந்தோசமாக இருந்தது.


யாரை குருவாகக் கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினீர்கள்?


கண்ணதாசன்தான் எனது மானசீக குருநாதர். சில கவிஞர்கள் காதல் பாடல்களை நன்றாக எழுதுவார்கள். சிலர் தத்துவ பாடல்களை எழுதுவார்கள். சிலர் கானா பாடல்களை எழுதுவார்கள். ஆனால் கண்ணதாசன் எல்லாவிதமான பாடல்களையும் எழுதுவார் என்பது நான் அறிந்த விசயம். எனக்குத் தெரிந்து சினிமாவில் பல முத்திரைகளை பதித்த ஒரே கவிஞர் எனது குருநாதர் கண்ணதாசன்தான். அதே மாதிரி வாலியையும் பிடிக்கும். இளமையாக பாடல்கள் எழுதக்கூடியவர். அவரது பாடல்கள் சின்ன புள்ளைங்களுக்குகூட பிடிக்கும். அந்த அளவுக்கு அப்டேட்டில் இருந்து பாடல் எழுதியவர். ஆக இவர்கள் இருவருமே என்னை அதிகமாக பாதித்த கவிஞர்கள். இவர்களை மனதில் கொண்டுதான் நான் பாடல்களை எழுதி வருகிறேன்.


வல்லவனுக்கு பிறகு பாடல் எழுதிய படங்கள்?


ஏ.வெங்கடேஷ் இயக்கிய வல்லக்கோட்டை பிறகு மதில் மேல் பூனை உள்பட 20 படங்களுக்கு எழுதினேன. அதில் பல சிறிய படங்கள் திரைக்கு வரவில்லை. அதன்பிறகுதான் பெரிய ஹீரோ படங்களுக்கு பாடல் எழுதினால்தான் நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று பெரிய ஹீரோக்களிடம் சான்ஸ் கேட்கத் தொடங்கினேன்.


அப்போதுதான் சூர்யா சாரை பார்க்க அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஆனால் நான் செல்வதற்குள் சூர்யா சார் படப்பிடிப்புக்கு கிளம்பி விட்டார். அப்போது கார்த்தி சார்தான் இருந்தார். நான் வந்த விசயத்தை கேட்டறிந்தார். நான் பாடல் எழுதிய படங்களைப்பற்றி சொன்னதும், அடுத்து நான் அலெக்ஸ் பாண்டியன்கிற ஒரு படம் பண்றேன். அதுல கண்டிப்பாக பாட்டெழுத சான்ஸ் தர்றேன்னு சொன்னார். அதே மாதிரி பேட் பாய் -என்ற பாடலை எழுத வாய்ப்புக் கொடுத்தார். அது எனக்கு இன்னொரு திருப்புமுனையை கொடுத்தது. ஆக இப்போது பல முன்னணி டைரக்டர்கள், நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறேன்.


சென்னைவாசியான நீங்கள் சென்னை தமிழில் கானா பாடல்கள் எழுதியிருக்கிறீர்களா?


கானா பாடல் எழுதுவதும் ஒரு கலைதான். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இருந்தாலும் அதிகமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. காரணம் எனக்கு அதில் திருப்தி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேசமயம் டைரக்டர்கள் இப்படியொரு பாடல் வேண்டும் என்று சொன்னால் எழுதித்தான் ஆக வேண்டும். என்றாலும, எந்த பாடலாக இருந்தாலும் நான் முழுவிருப்பத்துடன் எழுத வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். மேலும், நானும் டமால் டுமீல் படத்துக்காக தமன் இசையில், கொட்டுதடா காந்தி காசு, அள்ளிக்கடா மொக்க ராசு -என்ற ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். உஷா உதூப் பாடியிருந்தார்கள். அந்த பாடல் ஹிட்டானது. இருப்பினும் கானா மீது எனக்கு அதிக ஈடுபாடு இல்லாத காரணத்தினால் சில வாய்ப்புகளை தவிர்த்திருக்கிறேன்.


புதிதாக உங்கள் பாடல்கள் மூலம் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?


இதற்கு முந்தைய கவிஞர்கள எல்லா விசயங்களையும் சொல்லிவிட்டார்கள். அதனால் சில சமயங்களில் நானும் அதுபற்றி யோசிப்பேன். எல்லா விசயங்களையும் சொல்லி விட்டுப் போய்விட்டார்கள். நீ புதிதாக என்ன சொல்லப்போகிறாய் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


தற்போது தரமான பாடல்கள் எழுத களம் கிடைக்கிறதா?


எப்போதும் போலவே இப்போதும் நல்ல பாடல்களை எழுத களம் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதோடு அனைத்து டைரக்டர்களும், இசையமைப்பாளர்களும், நடிகர்களும் எந்தவித ஈகோவும் இல்லாமல் நட்பாக பழகுகிறார்கள். நாம் சொல்வது கருத்து நல்லதாக இருந்தால் ஏற்றுக்கொள்கிறார்கள். இதுவே நல்ல ஆரோக்யமான விசயம்தான்.


வா பட ஆடியோ மேடையில் கெளதம்மேனனிடம் சான்ஸ் கேட்டது பற்றி?


நான் காலேஜ் முடித்த நேரம்தான் அவர் இயக்கிய காக்க காக்க என்ற படம் வந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற உயிரின் உயிரே என்ற பாடல் என்னை ரொம்பவே பாதித்தது. விசுவலில் காட்சியமைப்பைப் பார்த்தபோது, பியூச்சரில் இந்த டைரக்டர் படத்தில் கண்டிப்பாக பாடல் எழுத வேண்டும் என்று எனக்குள்ளே தோன்றியது. அதற்கு முன்பே மின்னலே உள்ளிட்ட கெளதம்மேனனின் பல படங்கள் என்னை பாதித்திருந்தாலும் இந்த காக்க காக்க படம்தான் என்னை புரட்டிப்போட்டது.


இந்த திரையுலகில் என் மேல் அதிக அன்பு வைத்திருப்பவர் மதன் சார். அவர்தான் கெளதம்மேனன் சாரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அதிலிருந்தே நான் அவரை பாலோ பண்ணி வந்தேன். ஒரு நல்ல நேரம் வரும் அப்ப உன்னை கண்டிப்பாக கூப்பிடுவேன் கருணா என்று சொல்லிக்கொண்டே வந்தார். அவர் மனதில் எனக்கும் ஒரு இடம் உண்டு என்பது எனக்கும் தெரியும். அந்த உரிமையில்தான், வா படத்தின் ஆடியோ மேடையில் அவரிடம் சான்ஸ் கேட்டேன். அவரும், அச்சம் என்பது மடமையடா படத்தில் ஒரு பாடல் எழுத வாய்ப்பு தருவதாக சொன்னார். அது எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தைக் கொடுத்துள்ளது.




அச்சம் என்பது மடமையடா படத்துக்கு பாடல் எழுதி விட்டீர்களா?


இன்னும் கெளதம் சார் அழைக்கவில்லை. ஆனால் விரைவில் அழைப்பார். அதேசமயம், கெளதம்மேனன் படத்தில் பெஸ்ட் பாடலை நாம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் அவர் எந்த மாதிரியான சூழலில் பாடல் எழுதச்சொல்லப்போகிறாரோ என்று பயத்துடன் காத்திருக்கிறேன். அவர் கொடுக்கும் வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் என்னிடம் உள்ளது. அந்த வகையில், பல வருடங்களாக நான் அவரை பாலோ பண்ணியது பெரிய விசயமல்ல, அவர் எனக்கு சான்ஸ் கொடுத்ததுதான் பெரிய விசயமே.




நீங்கள் பாடல் எழுத ஆசைப்படும் இசையமைப்பாளர்கள்?


எனது குருநாதர் கண்ணதாசன் அதிகமான பாடல்கள் எம்.எஸ்.வியின் இசையில்தான் எழுதியிருக்கிறார் அதனால் எனக்கும் எம்எஸ்வி இசையில் பாடல் எழுத ஆசையாக உள்ளது. அதேபோல் தற்போது பீல்டில் இருக்கிற அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்கள் எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம்.


பாடல் துறையில் யாரை போட்டியாக கருதுகிறீர்கள்?


தற்போதைய பாடலாசிரியர்களில் யுகபாரதி, நா.முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோரின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் யுகபாரதி எழுதிய கூடமேல கூட வச்சி என்னை அதிகம் கவர்ந்த பாடல்.


மற்றபடி எனக்கு போட்டி என்று சொன்னால் அது கருணாகரன்தான். வேறு யாருமல்ல. மேலும் இது திரைத்துறை இங்கே திறமையானவர்கள் ஜெயிப்பார்கள். அனைவருமே கலைத்தாயின் பிள்ளைகள்தான் என்கிறார் பாடலாசிரியர் கருணாகரன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in