சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
வாமணன் படத்தில் அறிமுகமான ப்ரியா ஆனந்த், அப்போது அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. புகைப்படம், 180, படங்கள் கூட அவருக்கு கைகொடுக்கவில்லை. ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் சிறிய கேரக்டர்தான் என்றாலும் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார். அப்போது ஆரம்பித்த வேகம் இப்போதும் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. எதிர்நீச்சல் அடிக்க தொடங்கியவர் இப்போது வை ராஜா வை என்று பந்தையம் வைக்கிறார். அவர் அளித்த சிறப்பு பேட்டி:
* வை ராஜா வை அனுபவம் எப்படி?
ஐஸ்வர்யாவோட 3 படம் பார்த்து திகைத்து போனவள் நான். முதல் படத்திலேயே ஆழமான ஒரு விஷயத்தை ரொம்ப கேசுவலாக கையாண்டிருப்பார். வை ராஜா வை கதையை என்கிட்ட சொன்னப்போ எதுவுமே பேசாமல் ஓகே சொன்னேன். செட்டுக்கு வந்தால் சூப்பர் ஸ்டாரோட மகள், சூப்பர் ஆக்டரோட மனைவி என்கிற எந்த விஷயமும் அவர்கிட்ட இருக்காது. அவர் கொடுத்த வேலையை பெர்பக்டா முடிக்கணும் நினைப்பார். காம்பரமைஸ் ஆக மாட்டார். சூட்டிங் வரைக்கும் டெரர் லேடியா இருப்பார். பேக் அப் சொல்லிட்டா ரொம்ப ஜாலியாயிடுவார். அவரோட வேலை செய்தது அற்புதமான அனுபவம்.
* படத்தோட கதை என்ன?
இதை டைரக்டர்கிட்டதான் கேக்கணும். என்னோட கேரக்டருக்கு என்னோட சொந்த பெயர் ப்ரியான்னே வைத்தார். பிளாண்ட் ஆர்கிடெக்ட். அதாவது பூங்காக்களில் செடிகளை அழகாக டிசைன் பண்ணுகிற கேரக்டர். பக்கா கமர்ஷியல் படம். காதல், செண்டிமெண்ட், காமெடின்னு ஒரு பெண் இயக்கிய படமான்னு மூக்குமேல விரல் வைக்கிறமாதிரி தூள் கிளப்புற கமர்ஷியல் பார்முலா படம்.
* பெண் இயக்குனர்கள் படத்துல தொடர்ந்து நடிக்கிறீங்களே நீங்க எப்போது படம் இயக்குவீங்க?
அட ஆமா... கவுரி, கிருத்திகா, ஐஸ்வர்யான்னு மூணு பேர்கிட்டேயும் ஒர்க் பண்ணியிருக்கேன். இதை நானே யோசித்து பார்க்கல. மூணு பேருக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கு. அவுங்க படம் பண்றத கவனிச்சிருக்கேன். ஆனால் கண்டிப்பா அதுமாதிரி என்னால பண்ண முடியாது. நிறைய பொறுமை இருக்கணும், கமாண்டிங் பவர் இருக்கணும், முளைய கசக்கி யோசிக்கணும் அதெல்லாம் எனக்கு வராது. அவுங்க இயக்குறாங்கங்றதுக்காக நானும் இயக்கணும்னு நினைக்கிறது ஈகோ. ஒரு வேளை இன்னும் நிறைய அனுபவங்கள் வந்த பிறகு சாத்தியப்படலாம்.
* அஜீத், விஜய் கூட எப்போ நடிக்க போறீங்க?
யார், யார்கூட வேணாலும் நடிக்கலாம். அது எப்போ கூடி வரும்னு யாராலும் சொல்ல முடியாது. ஸ்ரீதேவி கூட நடிப்பேன்னு நான் கனவுகூட கண்டதில்ல. இத்தனைக்கும் அவுங்க சினிமாவை விட்டு விலகி இருந்தாங்க. ஆனா அது நடந்துச்சே. அது மாதிரி நீங்க சொல்றதும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். எதையும் எதிர்பார்த்துக்கிட்டு இருக்க மாட்டேன். அடுத்த படம் அரிமா நம்பி. இயக்குனர் ஆனந்த் சங்கரோட படத்தில் விக்ரமோடு நடிக்கிறேன். சினிமால எது, எப்ப வேணாலும் நடக்கலாம்.
* கவுதம் கார்த்திக்கோடு இணைத்து நிறைய செய்திகள் வருகிறதே?
இது ரொம்ப நாளா வந்துகிட்டுதான் இருக்கு. அது எனக்குத் தெரியும். ஆயிரம் முறை சொல்லிட்டேன் கவுதமும், நானும் சினிமாவுக்கு வராத காலத்துலேருந்தே பிரண்டு. ரெண்டு பேரும் சினிமாவுக்கு வந்தது, இப்போ சேர்ந்து நடிக்கிறதெல்லாமே யதேச்சையா நடக்குது. நான் யார்கிட்டேயும் ஈசியா பழகிடுவேன். கலகலன்னு பேசுவேன், என்னோட இந்த கேரக்டர்தான் இது மாதிரி செய்திகளுக்கு காரணம்னு தெரியும். அதுக்காக என்னோட கேரக்டரை நான் மாத்திக்க மாட்டேன். பேசுறவங்க, எழுதுறவங்க அவுங்க வேலையை செய்யட்டும். நான் என் வேலையை பார்த்துக்கிட்டிருக்கேன்.
* அழகான பொண்ணு, காதலிக்கிற ஹீரோயின் இப்படி சீரியல் டைப்பாவே நடிக்கிறீங்களே?
வித்தியாசமான கேரக்டர் வந்தால் நடிக்க மாட்டேன்னா சொல்றேன். நான் எந்த கேரக்டர்ல நடிக்கணுங்றத இயக்குனர்கள்தான் தீர்மானிக்கிறாங்க. ரத்தம் சொட்ட சொட்ட ஒரு ஹரார் படத்துல நடிக்க ஆசை இருக்கு. உருட்டி மிரட்டி டெரர் வில்லி கேரக்டர்ல நடிக்ணும்னு ஆசை இருக்கு. வாய்ப்பு வரட்டும்னு காத்திட்டிருக்கேன்
* திருமணம் எப்போது?
நடிகை பேட்டினாலே கடைசியில இந்த ஒரு கேள்வியை மறக்காமல் கேட்டுவிடுகிறீர்கள். நாளைக்கே கூட கல்யாணம் பண்ணிக்கலாம் அது பெரிய விஷயமே இல்லை. மிஸ்சஸ் ஆனா சினிமாவை மிஸ் பண்ண வேண்டியது இருக்கும். நான் நேசிக்கிற சினிமாவை மிஸ் பண்ண விரும்பவில்லை.
இவ்வாறு ப்ரியா ஆன்ந்த் கூறினார்.