சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
பாலில் தேய்த்து எடுத்த முத்துகளைப் போல, வெள்ளை வெளேர் முகம்; பளிச் என பேசும் குணம்; பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும் சிரிப்பு. தொடர் படப்பிடிப்பு, தொடர்ந்து வரும் வீடியோ தொல்லைகள், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தவரை தேடிப் பிடித்து, தொடர்பு கொண்டு பேசினோம். இனி, ஹன்சிகா பேசுவார்.
சின்னத் திரையில் அறிமுகமாகி, புகழ்பெற்ற நடிகையாகி, 30 குழந்தைகளை தத்தெடுத்து பராமரிக்கும் நிலையில், உங்களின் இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
ரொம்பவே இனிமையாக இருக்கிறது. எனக்கு கிடைத்ததை ஒரு வகையில் அதிர்ஷ்டம் என்று கூட சொல்லலாம். ஒரு நடிகையாகி, நானும் சினிமாவில் இருக்கிறேன் என்பது பெருமையாக உள்ளது. குழந்தைகள் நலனில், ரொம்பவே அக்கறை எடுக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர்களோடு இருக்க விரும்புகிறேன்; ஒரு சுகமான அனுபவம் அது.
எந்தமாதிரி காஸ்ட்யூம் அணிந்து நடிக்க ஆசை?
பாவாடை - தாவணியில் ஹோம்லியாகவும், மாடர்ன் உடைகளில் கிளாமராகவும் நடிக்க ஆசை. ஆனால், பொட்டு, பூ வைத்து, பாவாடை - தாவணியில், அரண்மனையில் வந்த செல்வி கேரக்டரை மறக்க மாட்டேன்; ரசிகர்களும் அவ்ளோ சீக்கிரம் மறக்க மாட்டாங்க. திரும்பவும் அந்த மாதிரி கேரக்டரில் நடிக்க ஆவலோடு இருக்கேன்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை தொடர்ந்து, ரோமியோ ஜூலியட் படத்திலும் விமான பணிப்பெண்ணாக நடித்துள்ளது பற்றி?
இந்த ரோலை மிகவும் விரும்புகிறேன். கதைக்கு அப்படி ஒரு ரோல் தேவைப்படுது. இயக்குனர்கள் அந்த கேரக்டருக்கு, நான் சரியாக இருப்பேன்னு நினைக்கிறாங்க. எனக்கும் அது வசதியா இருக்கு; ஆடியன்ஸ், அந்த ரோலில் என்னை ஏற்றுக் கொண்டதும் ஒரு காரணம். ரொம்ப ஸ்டைலா வரக்கூடிய ரோல் அது.
உங்களை சின்ன குஷ்பூ என்று கொண்டாடும் தமிழ் ரசிகர்களை பற்றி?
தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இங்க இருக்கற மக்கள் ரொம்ப அன்பா, பாசமா, என்னையும் அவங்க குடும்பத்தில் ஒருத்தியா நினைத்து, எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணிருக்காங்க, என் படங்கள் அத்தனையும் வெற்றி பெற்றிருக்கு. இதுக்கெல்லாம் பெரிய காரணம் ரசிகர்கள் தான்; என்றும் நான் தமிழ் ரசிகர்களை மறக்க மாட்டேன்.
படப்பிடிப்பில் கலகலப்பாக பேசும் ஹீரோ யார்?
சிவகார்த்திகேயன். அவர் இருந்தால், செட், ரணகளப்படும்; அவரை பார்த்தாலே சிரிச்சுடுவேன். ஜெயம் ரவி கூட பார்க்க அமைதி; ஆனா, பயங்கர காமெடி ஆளு.
ரோமியோ ஜூலியட்டில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம்?
ரோமியோ ஜூலியட் வரலாற்றுப்பதிவுகளில் ஒரு சோக முடிவு இருக்கும். ஆனால், இந்த படத்தில் கொஞ்சம் சந்தோஷமாக முடித்திருப்பர். என் ரோலை ரொம்பவே அனுபவித்து நடித்தேன்.
இரண்டு ஹீரோயின்கள் படங்களில் அதிகமாக நடிப்பது பற்றி?
எத்தனை ஹீரோயின்கள் இருந்தாலும் எனக்கு கவலையில்லை. ஆம்பள படத்தில் எத்தனை ஹீரோயின்கள் நடித்தாங்க; எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே. என் கேரக்டர் எனக்கு
பிடிக்கணும்; அது, மக்களிடம் பேசப்பட வேண்டும் என, நினைப்பேன்; அவ்வளவு தான். மற்றபடி, எத்தனை ஹீரோயின்கள் இருந்தாலும், நான் தனியே தான் தெரிவேன்.
முப்பதுக்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டீர்கள்; இதுவரை நீங்கள் கற்றுக் கொண்டது?
தெலுங்கு, தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கிறேன். தமிழில் வித்தியாசமான கேரக்டர்கள் கிடைச்சிருக்கு. என் பயணம் இன்னும் நிறைய இருக்கு. தமிழ் சினிமாவில் நிறைய கத்துக்கிட்டு வர்றேன்; என்னை இந்த அளவு உயரத்துக்கு கொண்டு சென்றதற்கு, தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ரசிகர்களுக்கு நன்றி கூற வேண்டும்.
புலியில் விஜய் கூட நடிக்கிறீங்களே?
விஜய், பழகுறதுக்கு ரொம்ப இனிமையானவர், கடின உழைப்பாளி. விஜய் ரசிகர்களுக்கு, புலி படம் ரொம்ப பிடிக்கும்; இது, என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம். ஸ்ருதி, ஸ்ரீதேவி மேடம், இப்படி நிறைய பேர், புலி படத்தில் நடிப்பது இனிமையான அனுபவத்தை தந்துள்ளது.
சர்ச்சைக்குரிய அந்த வீடியோ பற்றி...
சாரி...