'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்த உலகத்தில் ஏழை பணக்காரனாக வாழ ஆசைப்படுவான். பணக்காரன் ஏழையா வாழ ஆசைப்படுவான். கருப்பா இருக்கிறவன் செவப்பா இருக்க ஆசைப்படுவான். குண்டா இருக்கிறவன் ஒல்லியா இருக்க ஆசைப்படுவான். ஆக, தங்களிடம் இல்லாததை நினைத்து ஏங்குறதுதான் மனித வாழ்க்கை. மனித இயல்பு. இதை பேஸ் பண்ணித்தான் எனக்குள் ஒருவன் படத்தோட கதையே இருக்கும். அதனால் அதை தழுவியே நான் வசனம் எழுதியிருக்கிறேன் என்கிறார் வசனகர்த்தா வேல்முருகன்.
தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் சில கேள்விகள்...
நீங்கள் பாடல்கள் எழுதிய படங்கள் பற்றி?
நேரம் படத்தில் காதல் என்னுள்ளே வந்த நேரம் - என்பதுதான் நான் எழுதிய முதல் பாடல். அந்த பாடல் அந்த படம் வெளியான நேரத்தில் பரவலாக மக்கள் மத்தியில் ஒலித்தது. அதையடுத்து சைகை, இரண்டு மனம் வேண்டும், இருவர் உள்ளம் என பல படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறேன்.
டயலாக் ரைட்டரானது எப்படி?
பீட்சா படத்தில் கேமராமேனாக ஒர்க் பண்ணிய கோபி அமர்நாத்தான் எனக்குள் ஒருவன் டைரக்டர் பிரசாத்ராமரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவர் மூலம்தான் எனக்குள் ஒருவன் படத்தில் எனக்கு டயலாக் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், சித்தார்த் என்ற ஒரு பெரிய ஹீரோ நடிக்கிற படத்தில் என்னை வசனகர்த்தாவாக அறிமுகம் செய்ததற்காக கேமராமேன் கோபி அமர்நாத், டைரக்டர் பிரசாத் ராமர் இருவருக்கும் நான் பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
கன்னட ரீமேக்கான எனக்குள் ஒருவன் படத்தில் வசனரீதியாக என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டது?
என்னிடம் டைரக்டர் சொன்ன காட்சிகளுக்கு தேவையான வசனங்களை மட்டுமே நான் எழுதினேன். மற்றபடி ஒவ்வொரு காட்சிகளுக்கும் வசனம் எழுதும்போதும் அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பதை மனதில் கொண்டே டயலாக் எழுதினேன். அதனால் ஆபாசமில்லாத மற்றும் அருவருப்பான வசனங்கள் எதையுமே எழுதவில்லை. படத்தின் கதையும் காட்சிகளும் எப்படி டீசன்டாக இருந்ததோ அதற்கேற்பவே வசனங்களையும் டீசன்டாக எழுதினேன்.
இந்த படத்தில் உங்கள் வசனம் பேசப்பட்ட காட்சிகள் ஏதாவது உள்ளதா?
இந்த உலகத்துல யார் சார் அவனவன் வாழ்க்கையை வாழ ஆசைப்படறாங்க. ஏழை பணக்காரனா வாழ ஆசைப்படுவான். பணக்காரன் ஏழையா வாழ ஆசைப்படுவான். கருப்பா இருக்ககிறவன் செவப்பா இருக்க ஆசைப்படுவான். குண்டா இருக்கிறவன் ஒல்லியா இருக்க ஆசைப்படுவான் ஆக தங்களிடம் இல்லாததை நினைத்து ஏங்குறதுதான் மனித வாழ்க்கை. மனித இயல்பு இதை பேஸ்பண்ணித்தான் எனக்குள் ஒருவன் படத்தோட கதையே இருக்கும். அதனால் அதை தழுவி நான் வசனம் எழுதிய காட்சிகளை குறிப்பிட்டு பலர் பாராட்டினார்கள். அது எனக்கு பெரிய உற்சாகத்தை தந்துள்ளது.
உங்களது டயலாக்கை பேசி நடித்த சித்தார்த் என்ன சொன்னார்?
இந்த படத்தில் நானும் ஒரு உதவி இயக்குனராக வேலை பார்த்ததால், படப்பிடிப்பு தளத்தில் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தபோது, வார்த்தைகளெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு என்று கைகொடுத்து பாராட்டினார். அது ரொம்ப பெருமையாக இருந்தது.
சித்தார்த்தை வைத்து அடுத்து படம் இயக்கும் ஆசை உள்ளதா?
கண்டிப்பாக உள்ளது. இந்த எனக்குள் ஒருவன் படம் மூலம் எனக்கு நல்லதொரு கதவுகளை திறந்து விட்டிருக்கிறார் பிரசாத் ராமர். அதனால் இதுவரை வெறும் பாடலாசிரியராக மட்டுமே இருந்த நான் இப்போது வசனகார்த்தா என்றொரு அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன். அதுவும் சித்தார்த் என்கிற பெரிய நடிகரின் படத்திற்கு எழுதியிருப்பது எனக்கு பெரிய ப்ரமோஷன் கிடைத்தது போல் உள்ளது. இந்த உயர்வை எனக்கு அடுத்தபடியாக படம் இயக்கும் ஆர்வத்துக்கு அடித்தளம் போட்டிருப்பதாகவே கருதுகிறேன்.
பாடல் எழுதுவதற்கும், வசனம் எழுதுவதற்கும் என்ன வித்தியாசத்தை உணருகிறீர்கள்?
பாடல் எழுதுவதை விட வசனம் எழுதுவதுதான் எளிதாக உள்ளது. காரணம் காதல் பாடல் என்றால் காதலைப்பற்றி மட்டும்தான் சொல்ல முடியும். ஆனால் வசனம் என்கிறபோது அந்த காட்சியை சம்பந்தப்பட்ட வேறு சில விசயங்களையும் அதற்குள் கொண்டு வரலாம். அதற்கான சுதந்திரம் உள்ளது.
மேலும் எக்காரணம் கொண்டும் ஆபாசமாக எழுதுவதில்லை என்ற கொள்கையே வைத்திருக்கிறேன். கதைப்படி ஒரு ஆபாசமாக காட்சி என்றாலும் அதில் எந்த அளவுக்கு டீசன்டான வார்த்தைகளை எழுதலாம் என்று யோசித்து எழுதுவேன். எனக்குள் ஒருவன் படத்தைப்பொறுத்தவரை நம்முடைய பெண் குழந்தையை கூட வைத்துக்கொண்டு அந்த படத்தை பார்க்கலாம். அந்த அளவுக்கு காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதனால் எனக்கு இந்த படம் நல்லதொரு களமாகவே அமைந்தது.
ஒரு படத்தில் வசனகர்த்தாவின் பலம் என்று எதை கருதுகிறீர்கள்?
எந்தவொரு கதையாக இருந்தாலும் அதன் ஒவ்வொரு காட்சிகளையும் பார்க்கும்போதே அது என்ன சொல்ல வருகிறது என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் அதில் இடம்பெறும் வசனங்கள் அந்த காட்சியை அதைவிட ஒரு படிஉயர்த்திக்காட்டுவதாக அமைய வேண்டும். அப்போதுதான் அந்த வசனம் பலம் வாய்ந்தது என்று சொல்ல முடியும். அதாவது விசுவலில் டைரக்டர் சொல்வதை விட தாண்டி நம்மால் வார்த்தைகளால் என்ன சொல்ல முடியும் என்று யோசித்து எழுத வேண்டும். அதுதான் அந்த காட்சிக்கு பலம் சேர்க்கும்.
எனக்குள் ஒருவன் படத்தில் காட்சிக்கு பலமாக அமைந்த வசனங்கள் பற்றி?
நடிகராக நடித்துள்ள சித்தார்த் க்ளைமாக்சில் மாடியில் இருந்து கீழே குதித்து விடுவார். அந்த காட்சிக்கு டயலாக் எழுதுவது எனக்கு சவாலாக இருந்தது. அந்த இடத்தில்தான் கதையின் டுவிஸ்ட் உடையும். லைவ்ல இருக்காரா? கனவுல இருக்காரா?என்பதை சொல்ல வேண்டிய இடம். அந்த சீனும் அதற்கடுத்த சில சீன்களும் ரொம்ப கஷ்டமாக இருந்ததால் நானும், இயக்குனரும் நிறைய யோசிக்க வேண்டிய இடமாகவும் அது அமைந்தது. அந்த காட்சிகள் சம்பந்தமாக சில டாக்டர்களிடம் ஆலோசனை செய்து விட்டுத்தான் டயலாக் எழுதினேன்.
சில காட்சிகள் சித்தார்த்தின் நிஜ வாழ்க்கையில் நடந்தது போலவே இடம்பெற்றிருந்ததே?
கன்னடத்தில், அந்த நடிகையை பல கோணங்களில் கிளாமராக போட்டோ எடுப்பவர்களை விரட்டியடித்து உங்களுக்கு வேற வேலை இல்லையா? என்று திட்டுவது போல் அதில் நடித்த ஹீரோ நடித்திருந்தார். அதையே தமிழில் படமாக்கும்போது சித்தார்த்தின் பிரஸ்மீட்களில் நடந்த விசயம். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளையும் சேர்த்து காட்சியாக்கினார் டைரக்டர். இந்த மாற்றத்தை செய்தபோது அதை சித்தார்த்தும் ஏற்றுக்கொண்டார்.
சித்தார்த், சமந்தாவுடன் கொண்ட காதலைத்தான் காட்சிப்படுத்தியிருந்தார்களா?
சித்தார்த் சமந்தாவை காதலித்தாரா என்பது எதுவும் எங்களுக்குத் தெரியாது. அவரே பர்சனல் விசயத்தை கேட்காதீர்கள் என்றுதான் பிரஸ்மீட் காட்சியில் சொல்வார்.