டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒரு பூ எந்த பூவுடனும் காம்படிசன் வைத்து மலர்வது கிடையாது. அதுவாக மலரும். அதுதான் அதுக்கு அழகு. அதேமாதிரிதான் என்னோட பெஸ்ட் எதுவாக இருக்க முடியுமோ அதைத்தான் கொடுப்பேன். யாரையும் பின்பற்றவோ, போட்டி போடவோ மாட்டேன் என்கிறார் ஜெய்குஹெய்னி.
தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...
நடித்துள்ள படங்கள் பற்றி?
இதுவரைக்கு நான் ஆரோகணம், மெய்யழகி, சார்லஸ் ஷாபிக் கார்த்திகா, இதுதவிர இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிச்சி முடிச்சிருக்கேன். ஆனா இந்த நாலு படத்தோடு வாய்ப்பும் தேடி வந்ததுதான். நானாக நடிக்கணும்னு யாருகிட்டேயும் சான்ஸ் கேட்டதில்லை. டைரக்டர் ஆகணும்னு ஆசைப்பட்ட நான் நடிக்க வாய்ப்பு தேடி வந்ததால நடிகையாகிட்டேன்.
அதாவது லட்சுமிராமகிருஷ்ணன்கிட்ட நான் உதவி இயக்குனரா வேலை செய்யத்தான் போனேன். ஆனா எனக்கு ஏற்கனவே பரதநாட்டியம் தெரியும்ங்கிறதால என்னோட ஆரோகணம் படத்துல ஒரு நல்ல கேரக்டர் இருக்கு பண்றியான்னு கேட்டாங்க. எனக்கு நடிக்கத்தெரியாது டான்ஸ் பண்ண மட்டும்தான் தெரியும்னு சொன்னேன். அதுபோதும் நான் நடிப்பு சொல்லித்தர்றேன்னு சொல்லி நடிக்க வச்சிட்டாங்க. இப்படி ஏதேச்சையாகத்தான் நான் நடிகையானேன். அந்தவகையில் நான் நடிக்க வந்தது ஒரு எதிர்பாராத விபத்துதான். அதேசமயம், நான் டைரக்ஷன் படிச்சிருந்தது நடிப்பதற்கு ரொம்ப யூஸ்புல்லா இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் எந்த மாதிரி வைக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு நான் என்னை ரெடி பண்ணிக்கிட்டேன்.
டைரக்ஷன் கோர்ஸ் படிக்க என்ன காரணம்?
சொசைட்டிக்கு ஏதாவது செய்யணுங்கிற எண்ணம் எனக்கு சின்ன வயசுலேயே இருந்தது. அப்பா வளர்த்த விதம் அப்படின்னுகூடசொல்லலாம். ஆனா அப்படி சொசைட்டிக்கு ஏதாவது செய்யணும், சொல்லணும்னா மீடியா வேணும். அப்பத்தான் நாம சொல்றது போய் சேரும். அதுக்கு அப்புறம்தான் டைரக்ஷன் பண்ணணும்னு ஆசை வந்தது. 90 சதவீதம் மக்கள் சினிமா பார்க்கிறவங்கதான். அந்த அளவுக்கு சினிமா மக்களை கவர்ந்துள்ளது. அதனால்தான் சினிமாவில் டைரக்டராகி அதன்மூலமாக சமுதாயத்துக்கு நல்ல விசயங்களை செய்யலாமுன்னு இந்த துறைக்கு வந்தேன்.
உங்களை பாதித்த டைரக்டர் யார்?
நான் வந்து எல்லாமே அழகா இருக்கணும்னு பார்ப்பேன். குப்பை போட்டாகூட அதுலயும் ஒரு அழகு இருக்கணும்னு நெனைப்பேன். அந்த மாதிரி மணிரத்னம் சார் படங்கள்ல அழகியல் இருக்கும். அவரது எல்லா படங்களுமே பிடிக்கும்னாலும் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ரொம்ப பிடிக்கும். இப்ப கெளதம்மேனன் படம் ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் நான் திருப்பித்திருப்பி பார்த்த ஒரு படம்னா அது என்னை அறிந்தால். இதுக்கு முன்னாடி எவ்ளோ பிடிச்ச படமா இருநதாலும் அடுத்த முறை இரண்டு மாதத்துக்கு பிறகுதான் பார்த்திருக்கேன். ஆனா இந்த படத்தை திருப்பித்திருப்பி 6 தடவை பார்த்துட்டேன் நான். என்னை அறிந்தால் அவ்ளோ பிடிச்சிருந்தது. இப்ப உள்ள டைரக்டர்கள்ல கெளதம்மேனன் என்னோடபேவரிட் டைரக்டர்.
கெளதம்மேனன் படத்துல நடிக்க முயற்சி எடுப்பீர்களா?
நான் முன்னமே சொன்ன மாதிரி எந்த படத்துக்காகவும் ட்ரை பண்ணினதில்ல. நான் நடிச்சு அடுத்தடுத்து ரெண்டு படங்கள் வெளியாகப்போவுது. அந்த படங்கள்ல என்னோட நடிப்ப பார்த்துட்டு சான்ஸ் வரும்ன்னு எதிர்பார்க்கிறேன்.
டைரக்டர் ஆகும்போது எந்தமாதிரி கதைகளை படம் பண்ணுவீங்க?
இப்ப டைரக்டர் ஆகிற ஆசை எதுவும இல்லை. ஆனா ஒரு பத்து வருசம் கழிச்சு படம் டைரக்ட்டு பண்ணுவேன்.அதுவரைக்கும் சினிமாவ நல்லா தெரிஞ்சிக்குவேன். அப்படி நான் படம் டைரக்ட் பண்ணும்போது, வெட்டு, குத்து, கொலை, சைக்கோ இதுமாதிரியான படங்கள்தான் பண்ணுவோம். ஏன்னா எனக்கு அந்த மாதிரியான படங்கள்தான் பிடிக்கும். நான் முன்னாடி காலேஜ் ப்ராஜக்ட்டுக்காக ஒரு ஆல்பம் பண்ணினேன் அதுலயும் மனைவி கணவனை கொலை செய்யுற மாதிரி கதையைதான் டைரக்டர் பண்ணியிருந்தேன். என்னோட லைக்கிங் இதுதான். எனக்கு சுட்டு போட்டாலும் காமெடியெல்லாம் வராது.
மேலும், பெண்கள் இங்கே இன்னும் நசுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் தங்களை கொலை செய்யத்துணியும் ஒரு ஆணை, ஒரு பெண்ணால் திருப்பி அடிக்கவும் முடியும். கொலை செய்யவும் முடியும். அதை சொல்லத்தான் அந்த மாதிரியொரு கதையை பண்ணினேன். பெண்கள் பொறுத்து பொறுத்து போறதுனால அதை ஆண்கள் ஒரு அட்வான்டேஜா எடுத்துக்கிறாங்க. வீட்டுல, ரோட்டுல, ஸ்கூல்ல இப்படி ஒவ்வொரு எடத்துலயுமே ஆணாதிக்கம் நம்ம நாட்டுல கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கு. அதனால் அதை தட்டிக்கேட்கிற மாதிரி படமெடுப்பேன். சம உரிமைங்கிறது கெடைச்சிட்டதா சொல்றாஙக. ஆனா என்னைக்கேட்டா அது கெடைச்சிக்கிட்டே இருக்கு. இன்னும் முழுசாக கெடைக்கலன்னுதான் சொல்வேன்.
உங்க நடிப்புக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?
ஆரோகணம் படத்திற்கு பிறகு நடிச்ச மெய்யழகி படத்துல நடிக்கிறப்ப எனக்கு 19 வயது. ஆனா நான் 30 வயது கேரக்டர் பண்ணினேன். 10 கிலோ எடைய அதிகப்படுத்தி நடிச்சேன். முக்கியமா நான் எப்பவுமே அழகா டிரஸ் பண்ணி நீட்டா இருப்பேன். ஆனா அந்த படத்துக்காக நான் இருக்கிறதை விட அழகை கம்மி பண்ணி நடிச்சேன். அதேசமயம், சென்னையிலேயே வளர்ந்த நான், அந்த படத்துக்காக முதன்முறையாக கிராமத்துக்கு போனேன். தேனில போய் 40 நாள் ஷூட் பண்ணினாங்க. அக்னி நட்சத்திரம் வெயில்ல நடிச்சேன். கால்ல செருப்பே போடாம நடிச்சேன். சென்னைக்கு வந்த பிறகு என் கால்ல இருந்து 3 முள்ளு எடுத்தாங்க. ரொம்ப உடல் உழைப்ப கொடுத்தேன். இதுக்கு அப்புறம் நாம நடிக்கணுமா, டைரக்சன் பண்ணத்தானே வந்தோம் என்றுகூட நான் தயங்கினேன்.
ஆனா அந்த படத்துல நடிச்சதுக்கு நல்ல பெயர் கிடைச்சது. சிலர், ஏன் இப்படி வயசை அதிகப்படுத்தி நடிச்சீங்க. சான்ஸ் கெடைக்காமத்தான் இப்படியெல்லாம் நடிச்சீங்கன்னு நெனைப்பாங்கன்னும் சொன்னாங்க. அதோட, இனிமே இதே மாதிரி கிராமத்து படங்களாத்தான் வரும்னு சொன்னாங்க. ஆனா இப்ப என்னை நல்ல அழகா காட்டுற மாதிரியான ரெண்டு நல்ல படம் கெடைச்சிருக்கு. அதனால் இந்த படங்கள்ல் ரொம்ப உற்சாகமா நடிச்சிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கேன்.
சார்லஸ் ஷபிக் கார்த்திகா படத்தில் எந்த மாதிரி வேடம்?
மெய்யழகி முடிச்சிட்டு நடிப்புல பெருசா ஆர்வம் இல்லாம இருந்தபோதுதான் இந்த பட வாய்ப்பு வந்தது. அவங்களே நடிக்க கூப்பிட்டதால ஆடிசனுக்கு போனேன். ஓகே பண்ணினாங்க.அப்புறம் கதை சொன்னாங்க. வித்தியாசமான இருந்துச்சு. இதற்கு முன்னாடி நான் நடிச்ச ஆரோகணம், மெய்யழகிய விட புதுமையான கதைங்கிறதால எனக்கே ஆர்வம் வந்திருச்சு. இந்த படத்துல எப்படியாவது நடிக்கணும்னு முடிவு செஞ்சேன். எனக்கு இந்த படத்துல ரொம்ப சேலஞ்சிங்கான வேடம். திரில்லர் சப்ஜெக்ட். ஒரு குட்டி லவ் ஸ்டோரி. இந்த படத்துல ஒரு புதுமையான ஜெய்குஹெய்னிய பார்க்கலாம்.
இந்த படத்திற்கு பெரிய ஹீரோ படங்களை எதிர்பார்க்கிறீங்களா?
நான் வந்து எதையும் எதிர்பார்க்கிற பொண்ணே இல்லை. லைப் எப்படி வருதோ அதற்கேற்ப என்னை தயார்படுத்திக்குவேன். ஆனா அடுத்தபடியாக பெரிய படங்கள் பண்ணனுங்கிற ஆசை எனக்கும் இருக்கு. என்னை அறிந்தால் படம் பார்த்துட்டு அஜீத்தோட நடிக்கணுங்கிற ஆசை அதிகமாயிடுச்சு. அவர் மட்டுமின்றி இப்ப இருக்கிற எல்லா ஹீரோக்களுமே நல்ல டேலன்டாதான் இருக்காங்க. அதனால் மார்க்கெட்டுல இருக்கிற எல்லா ஹீரோக்களுடனும் ஒரு பெரிய ரவுண்டு வரணுங்கிறதுதான் இப்போதைய ஆசையே.
உங்களது கிளாமர் எல்லை எதுவரை?
எனக்கு கிளாமராக நடிப்பது பற்றி எந்த ப்ராபளமும் இல்லை. ஆனா வல்கரா நடிக்க மாட்டேன். அழகா என்னை வெளிப்படுத்தணும் அவ்வளவுதான். இந்த கிளாமருல எனக்கு ரேஞ்செல்லாம் கிடையாது. நான் போடுற டிரஸ் அழகா வெளிப்படுத்தணும். மற்றபடி கிளாமருங்கிற பேருல அசிங்கப்படுத்துறத நான் ஒத்துக்கமாட்டேன்.
அதோடு, எனக்கு ரெண்டு ட்ரீம் ரோல் உண்டு. ஒன்று அருந்ததியில் அனுஷ்கா பண்ணின மாதிரி, இன்னொன்னு நான் கடவுள் படத்துல பூஜா நடிச்ச மாதிரி ரோல். இந்த மாதிரி சேலஞ்சிங்கான கேரக்டர்கள்ல நடிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்.சும்மா ஏதோ வந்தோம் போனோம்னு இல்லாம வந்தோம் நடிச்சோம் போனோம்னு இருக்கணும். குறிப்பாக என்னை ஹீரோயினின்னு தலையில தூக்கி வச்சி கொண்டாடா விட்டாலும் பரவாயில்ல. அந்த கதைக்கு நான் ஏதாவது பண்ற மாதிரியான ரோலா இருக்கணும். மற்றபடி ஒரு பாட்டுக்கு நடனமாடுற மாதிரி ஐடியாயெல்லாம் இப்ப எதுவும் இல்லை.
உங்களுக்கு போட்டியாக யாரை நினைக்கிறீர்கள்?
அதாவது, ஒரு பூ எந்த பூவுடனும் காம்படிசன் வைத்து மலர்வது கிடையாது. அதுவாக மலரும். அதுதான் அதுக்கு அழகு. அதேமாதிரிதான் என்னோட பெஸ்ட் எதுவாக இருக்க முடியுமோ அதைத்தான் கொடுப்பேன். யாரையும் பின்பற்றவோ, போட்டி போடவே மாட்டேன். அதோடு, எப்படியாவது வாழணும்னு இல்லாம இப்படித்தான் வாழணும்னு ஒரு கொள்கையோட வாழணும். நாமளும் வளரணும் நம்மளை சுத்தியிருக்கவங்களும் நல்லது செய்யணும். நம்ம சுத்தியிருக்கிறவங்களுக்காவது நாம நல்லவங்கன்னு தெரியணும். என்னோட அவுட்புட் எவ்ளோ பெஸ்டா கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கணும். எவ்வளவு பெஸ்டா வாழ முடியுமோ அபபடி வாழணும். நம்மளால முடியுறத செய்யணும் இதுதான் என்னோட நோக்கமே. மற்றபடி மத்தவங்களோட கம்பேர் பண்றது எனக்கு புடிக்காத விசயம்.
அடுத்தகட்டத்துக்கு செல்ல எடுக்கும் முயற்சி?
முயற்சியெல்லாம் எதுவும் எடுக்கல. எனக்கு கிடைக்கிற வாய்ப்புகளை சரியா பயன்படுத்திக்கிட்டு வர்றேன். இப்போது நடித்துள்ள படங்கள் திரைக்கு வரும்போது கண்டிப்பாக எனக்கு இதைவிட நல்ல படங்கள் தேடி வரும்ங்கிற நம்பிக்கை இருக்கு.
இதுவரை ஹீரோ வேல்யூ இல்லாத படங்கள்ல நடிச்ச நான், இனிமேல் ஹீரோ, டைரக்டர் வேல்யூ உள்ள படங்கள்ல நடிக்க ஆசைப்படுகிறேன. முக்கியமாக என்னை கவர்ந்த அஜீத், விஜய், சூர்யான்னு எல்லா ஹீரோக்களுடனும் ஒரு பெரிய ரவுண்ட் வர வேண்டும் என்கிற ஆசை நிறைய இருக்கு. என்னோட ஆசையை காலமும் நேரமும் நிறைவேற்றி வைக்கும்ங்கிற நூறு சதவிகித நம்பிக்கையில் இருக்கேன் என்கிறார் ஜெய் குஹெய்னி.