பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காதலிகளுக்கு 'கல்தா' கொடுக்கும் 'காமெடி' காதலன்; நயன்தாராவுக்கு கோவில் கட்டத் துடிக்கும் 'நல்லவன்'; வட்டியையும், முதலையும் வம்பு செய்து வாங்கும் 'கறார்' ராஜா; அசத்தல் சேதுவை அசால்ட்டாக பிரதிபலித்து, தனது வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களை வீழ்த்தும்... பாபி சிம்ஹா.
தற்போது, 'உறுமீன்', 'பாம்பு சட்டை', 'வல்லவனுக்கு வல்லவன்', 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது', 'இறவி' என்று வரிசைக் கட்டிக் கொண்டு நிற்கும் படங்களால், இந்த ஆண்டு முழுவதும் நிரம்பி வழிகிறது 'ஹீரோ' பாபியின் கால்ஷீட் டைரி. சென்னை பட்டினப்பாக்கத்தில், 'உறுமீன்' படப்பிடிப்பில் இருந்தவரை, இடைமறித்து எடுத்த பேட்டியிலிருந்து...
நகைச்சுவை நடிகர் - வில்லன் - கதாநாயகன்; மூணே வருஷத்துல இந்த வளர்ச்சி எப்படி?
''நான் ஒரு நடிகன். அவ்வளவுதான்! எனக்கு கிடைக்கிற விதவிதமான கதாபாத்திரங்களைத் தாண்டி, அங்க என் நடிப்புதான் பேசப்படணும். 'சூது கவ்வும்' பகலவனாகட்டும், 'நேரம்' வட்டி ராஜாவாகட்டும், 'ஜிகர்தண்டா' 'அசால்ட்' சேதுவாகட்டும், அந்தந்த கதாபாத்திரத்துக்கு என்ன நடிப்பு தேவையோ, அதைத்தான் நான் கொடுத்திருக்கேன். மற்றபடி, என் வளர்ச்சிக்கு காரணமானவர்கள் இயக்குனர்களே!''
உங்களுக்கு 'அசால்ட்' சேது வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருந்தால்...?
'''ஜிகர்தண்டா'வை பொறுத்தவரைக்கும், 'அசால்ட்' சேதுவா நடிக்க இருந்தது விஜய் சேதுபதி! 'பொன்ராம்' கேரக்டர்தான் எனக்கு! ஆனா, கதை கேட்டதுல இருந்தே, சேது கேரக்டர் மேல, எனக்கு காதல். என் அதிர்ஷ்டம், விஜய் சேதுபதியோட கால்ஷீட் கிடைக்காததனால, என்னை 'அசால்ட்' சேதுவா மாத்திட்டாங்க! ஆயிரம் சொல்லுங்க... 'அசால்ட்' சேதுவை அடிச்சிக்க முடியாது!''
நீங்களும், கார்த்திக் சுப்புராஜும்?
'''ஜிகர்தண்டா' பட ஷூட்டிங். ராத்திரி, தொடர்ந்து 6 மணி நேரம் படம் பிடிக்க வேண்டிய சூழல்! ஒரு கட்டத்துல, கார்த்திக் சொன்ன டயலாக் எதுவும் என் காதுல விழலை. ஆக்ஷன் சொன்னதும், 'திருதிரு'னு முழிக்க ஆரம்பிச்சுட்டேன். அப்ப கார்த்திக் என்கிட்டே வந்து, 'இந்த படம் என் வாழ்க்கை. இதுல தோத்துட்டா, நான் அவ்வளவுதான்'னு சொன்னான். அன்னைக்கு, எழுந்தவன்தான், இப்பவரைக்கும் நிற்காம ஓடிட்டு இருக்கேன்! ம்ம்ம்... எனக்கு வாழ்க்கை கொடுத்தவன் சுப்புராஜ்! அவனுக்காக, நான் என்ன வேணும்னாலும் செய்வேன்!''
வயதான கதாபாத்திரங்கள்ல நடிக்கிறப்போ, 'இமேஜ்' பற்றிய பயம்...?
'''நாயகன்' கதாபாத்திரம் மூலமா கமல்ஹாசனும், 'நெற்றிக்கண்' கதாபாத்திரம் மூலமா ரஜினிகாந்தும் உச்சத்துக்கு போயிருக்காங்க; இதைப் பார்த்த பிறகும், சிம்ஹாவுக்கு பயம் இருக்குமா என்ன?''
இப்போ, மலையாளப் படங்கள் பக்கம் உங்க கவனம் திரும்பியிருக்கு போல...
''மலையாள படங்கள் மேல, எனக்கு எப்பவுமே ஒரு மதிப்பு உண்டு. என்னோட 'நேரம்' படத்துக்கு, அங்கே நல்ல வரவேற்பு கிடைச்சது. அதுக்கப்புறம், 'பிவேர் ஆப் டாக்ஸ்'ன்னு ஒரு படம் பண்ணுனேன். என்னைப் பொறுத்தவரைக்கும், எல்லா மொழி படங்களும் பண்ணணும். நடிப்புக்கு மொழியெல்லாம் இல்லீங்க; நடிப்பே ஒரு மொழிதான்!''
'அசால்ட்' சேது, 'பதினாறு வயதினிலே' பரட்டையை ஞாபகப்படுத்தியதாக ரஜினி சொன்னது...?
''என் வாழ்க்கையில மறக்கமுடியாத தருணம்! பாராட்டை தாண்டி, அற்புதமா ஒரு அட்வைஸும் கொடுத்தாரு... 'ஒரு நடிகன் எப்பவும் சும்மா இருக்கக்கூடாது; அப்படி இருந்தா, பைத்தியம் பிடிச்சிடும்'. எப்படி, நம்ம தலைவரோட 'பன்ச்'?''
நிஜத்தில் பாபி சிம்ஹா?
''அவன் ரொம்ப கோபக்காரன். பொய் சொன்னா அவனுக்கு சுத்தமா பிடிக்காது. அதேபோல, அவனை யாராச்சும் கோபப்படுத்துற மாதிரி கேள்வி கேட்டா 'அசால்ட்' பண்ணிடுவான்!''