தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களும், கவிஞர்களும் பணியாற்றுவது புதிய விஷயமில்லை. கவிஞர் பாரதிதாசன் சொந்த படம் தயாரித்தார். ஜெயகாந்தன் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தை இயக்கினார், சமீபத்தில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பூமணி கருவேலங்காடு என்ற படத்தை இயக்கினார். தாமரை மணாளன், தாமரை செந்தூர் பாண்டி போன்றவர்கள் படம் இயக்கினார்கள். பல திரைப்படங்களுக்கு சுஜாதா வசனம் எழுதினார். அவரது பல கதைகள் படமானது.
இது அவ்வப்போது நடக்கிற விஷயம். ஆனால் சமீபகாலமாக எழுத்தாளர்கள், இயக்குனர்களாக, பாடலாசிரியர்களாக, கதாசிரியர்களாக, வசனகர்த்தாக்களாக, நடிகர்களாக தங்கள் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
* எழுத்தாளர்கள் சுபா, கே.வி.ஆனந்த்தின் கதை இலாகாவில் இணைந்து அவருடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
* ஜெயமோகன், பாலாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
* ராஜேஷ்குமார் சண்டமாருதம் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
* எஸ்.ராமகிருஷ்ணன் பல படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்.
* தாமிரா, ரெட்டைச்சுழி படத்தை இயக்கினார். அடுத்த வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
* தபுசங்கர் படித்துறை படத்தை இயக்கினார். அது வெளிவராத சூழ்நிலையிலும், அடுத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
* அஜயன்பாலா, மெட்ராஸ் கலையரசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
* மீரா கதிரவனும் படம் இயக்குகிறார்.
* சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவல்தான் அரவாண் படமானது. இப்போது அசோக மித்ரனின் தண்ணீர் நாவலை, வசந்த் இயக்குகிறார்.
* இன்னும் சில எழுத்தாளர்கள் படங்களுக்கு பாடல்கள் எழுதுகிறார்கள். தமிழச்சி தங்கபாண்டியன், மனுஷ்யபுத்ரன், ஆண்டாள் பிரிதர்ஷினி அவர்களில் முக்கியமானவர்கள்.
* சில எழுத்தாளர்களுக்கு நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. சாரு நிவேதிதா யுத்தம் செய்யும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்தார். எனக்கு நடிக்க சான்ஸ் கொடுங்க என்ற வெளிப்படையாகவே கேட்கிறார்.
* ஜோமல்லூரி கும்கி படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
* ம.கி.சிவபாலன் ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
* வேல ராமமூர்த்தி மதயானைக்கூட்டம் படத்தில் வில்லனாக நடித்தார்.
இன்னும் பல எழுத்தாளர்களுக்கு நடிகராகும் ஆசை இருக்கிறது. இப்படி சினிமாவின் பல கிளைகளிலும் எழுத்தாளர்கள் நுழைந்திருக்கிறார்கள்.