Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அரிசி சாதம் சாப்பிட்டு ரொம்ப வருசமாச்சு...! : சாட்டை யுவன் பேட்டி

25 ஜன, 2015 - 10:48 IST
எழுத்தின் அளவு:

கதை ஸ்ட்ராங்கா இருக்கணும். கதைக்குள்ள நான் இருக்கணும். எனக்காக கதை இருக்கக்கூடாது. மேலும், இந்த மாதிரியான கதைகளுக்கு மட்டும்தான் யுவன் சூட்டாவார் என்று இல்லாமல் எல்லாவிதமான கதைகளுக்கும் பொருந்தக்கூடிய ஆர்ட்டிஸ்டாக இருக்கணும் என்பதே எனது நோக்கமாக உள்ளது என்கிறார் யுவன்.




தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...




நடித்து வரும் படங்கள் பற்றி?


கமர்கட்டு, திருட்டு பசங்க, அய்யனார் வீதி உள்பட 4 படங்களில் நடிக்கிறேன். இதில் கமர்கட்டு படத்தில் சாட்டைக்கு பிறகு ஸ்கூல் மாணவனா நடிக்கிறேன். கமர்கட்டு என்கிற ஸ்வீட் மாதிரியான ஒன்லைன் தான் இந்த படத்தின் கதை. ஆனால் கடினமான அந்த ஸ்வீட்டை பாத்து சாப்பிடணும், இல்லேன்னா பல்லு ஒடஞ்சிடும் என்பது போன்றும் கதையோட்டம் செல்லும். அதோடு காமெடியும் கலந்திருக்கும். சாட்டை ஒரு நல்ல மெசேஜ் சொன்ன படம். ஆனால் இது எண்டர்டெய்ன்மென்ட் படம். அனைவரும் பேமிலியோட உட்கார்ந்து பார்க்கக்கூடிய படமாக இருக்கும்.


ஆனா இந்த படத்துல எந்த காமெடியனும் கிடையாது. ஸ்கிரிப்டிலேயே வரக்கூடிய காமெடி என்பதால் நாங்களே காமெடியும் செய்திருக்கிறோம். இதற்கு முன்பு நான் நடிச்ச படங்கள்ல கொஞ்சம மூடியா, இறுக்கமான மனநிலையுடன் நடித்திருந்தேன். ஆனால் இந்த படத்துல ரொம்ப ஓப்பனா நடித்திருக்கிறேன். அதாவது கலகலப்பான யுவனாக மாறியிருககிறேன். அதனால் இதுவரை நான் நடித்த படங்களில் இருந்து இந்த படம் என்னை வித்தியாசப்படுத்திக்காட்டும்.




இளமி என்ற படத்துக்காக எந்த மாதிரி கெட்டப் சேஞ்ச் செய்கிறீர்கள்?


இளமி படத்தில் 18ம் நூற்றாண்டு கதையில் நடிக்கிறேன. ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட கதை. அந்த படத்துக்காக எனது பாடிலாங்குவேஜையே மாற்றுகிறேன். அதனால் அந்த படத்தில் நடித்து முடித்த பிறகுதான் மற்ற படங்களில் நடிப்பேன். அந்த அளவுக்கு வித்தியாசமாக எனது கெட்டப்பை மாற்றப்போகிறேன். ஜல்லிக்கட்டுக்கு தடை வந்திருக்கும் இந்த நேரத்தில் இனிமேல் அதை மக்கள் பார்க்க முடியுமா? முடியாதா? என்று நினைத்துககொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நாங்கள் அதையே படமாக எடுக்கிறோம்.


தலையில் முடி, முகத்தில் தாடி வளர்த்து உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் என்னை தயார்படுத்த வேண்டும். அதனால் தற்போது நான் நடித்து வரும் 4 படங்களுமே முடியும் தருவாயில் இருப்பதால் அதையடுத்து அந்த படத்துக்காக தயாராகி விடுவேன்.




ஜல்லிககட்டுக்கு தடை வந்திருக்குமே நேரத்தில் காளையுடன் மோதுகிறீர்களா?


இப்போது ஜல்லிக்கட்டுக்கு தடை வந்திருப்பதால் காளையை அடக்குவது போன்ற காட்சிகள் இருக்காது. அதற்கு வேறு விசயங்களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், எனனை மாற்ற யாரையும் ரோல்மாடலாக கொள்ளவில்லை. அந்த நூற்றாண்டில் உள்ள மனிதர்களின் போட்டோக்களைப்பார்த்து அதைப்போன்று என்னை மாற்றிக்கொள்ளப்போகிறேன். அது இந்த நூற்றாண்டு ரசிகர்களுக்கு ரொம்ப புதுசாக இருக்கும். அதேசமயம் அந்த நூற்றாண்டு விசயங்களை அப்படியே பின்பற்றாமல் இன்றைய ரசிகர்கள் ரசிக்கும் வகையிலும் மாற்றங்கள் செய்யப்படுகிறது. அந்த படத்தில் கிஷோர் சார் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.




இளமிக்குபிறகு எந்த மாதிரியான கதைகளுக்கு முதலிடம் கொடுப்பீர்கள்?


எப்போதுமே நான் பர்பார்மென்ஸ் கதைகளுக்குத்தான் முதலிடம் கொடுப்பேன். குறிப்பாக, கதை ஸ்ட்ராங்கா இருக்கனும் கதைக்குள்ள நான் இருக்கனும். எனக்காக கதை இருக்கக்கூடாது. மேலும் இந்த மாதிரியான கதைகளுக்கு மட்டும்தான் யுவன் சூட்டாவார் என்று இல்லாமல் எல்லாவிதமான கதைகளுக்கும் பொருந்தக்கூடிய ஆர்ட்டிஸ்டாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. அதனால் நல்ல கதைகள் எந்த மாதிரியான கதைக்களமாக இருந்தாலும் நடிப்பேன்.


நீங்கள் யாருடைய ரசிகர்?


நான் புரூஸ்லியின் பயங்கர பேன். அவர் படங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவேன். அநதவகையில் நான் ஆக்சன் பட ரசிகன்தான். அதன்காரணமாகவே கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியிருககிறேன். கிக்பாக்சிங்கும் கற்றுள்ளேன். அதற்காக ஆக்சன் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைக்கவிலலை. தேவைப்படும்போது நான் பயின்ற விசயங்களை பயன்படுத்திக்கொள்வேன்.


விஜய் அஜீத், சூர்யா,விக்ரம் என எல்லோரையும் ரசிப்பேன். குறிப்பாக, விஜய்யின் நடனம் ரொம்ப பிடிககும். அவரைப்போன்று அதிரடி நடனங்கள் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மற்றபடி பிடித்த நடிகை என்றால், காஜல் அகர்வால் பிடிக்கும். விஜய் சாருடன் துப்பாக்கி, ஜில்லாவில் அவர்களது ஜோடிப்பொருத்தமும் அற்புதமாக இருந்தது. அந்த வகையில், விஜய் மட்டுமின்றி, காஜல்அகர்வாலின் பர்பார்மென்ஸையும் நான் ரசித்தேன்.


மேலும், கெளதம்மேனன் படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களை சொல்லலாம்.


இன்னும் படித்துக்கொண்டிருக்கிறீர்களாமே?


நான் 9ம் வகுப்பு படித்தபோது பாசக்கார நண்பர்கள் படத்தில் நடித்தேன். அதன்பிறகு கீரிப்புள்ள, சாட்டை படங்களில் நடித்தேன். இப்போது ப்ளஸ் -2 முடித்து விட்டு சட்டக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன். ஆனால், ரெகுலர் கிளாஸ் என்றபோதும் தொடர்ந்து படப்பிடிப்பு இருப்பதால் என்னால் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. அதனால் இந்த வருடத்தோடு டிசியை கையில் கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.


உடம்பு வெயிட் போடாமல் இருக்க என்னென்ன விசயங்களில் கட்டுப்பாடாக இருக்கிறீர்கள்?


சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நான் எப்படியிருந்தேன் என்று எனக்குத்தான் தெரியும். ஆனால் வந்த பிறகு நிறையவே மாறியிருக்கிறேன். முன்பெல்லாம் நல்லா சாப்பிடுவேன். அதனால் இப்ப இருக்கிறதோடு டபுள் மடங்கு வெயிட் இருந்தேன். ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக விடாத உடற்பயிற்சி, டயட்ஸ் கடை பிடித்துதான் என் உடம்பை கம்மி பண்ணினேன். ஆனால், இந்த உடம்பை அப்படியே வைததிருக்க வேண்டும் என்பதற்காக நான் அரிசி சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப வருசமாசசு. பிரியாணி மட்டும் எப்போதாவது ஆசைக்காக சாப்பிடுவேன். ஆக,சினிமாவுக்காக உணவு விசயத்தில் நிறைய கட்டுபபாடுகளை கடைபிடித்து வருகிறேன்.


சமீபத்தில் நீங்கள் பார்த்து வியந்த படம் எது?


ஷங்கர் சார் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம்தான். அந்த படத்துக்காக விக்ரம் தனது உடம்பை ஆணழகனாக மாற்றியது. அடுத்து ஸ்லிம்மாக மாற்றி நடித்ததைப்பார்த்து அசந்து விட்டேன். அந்த மாதிரி எனக்கும் கதைகள் கிடைத்தால் உட்லை வருத்தி நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்படுகிறது. காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.


அடுத்து, பார்த்திபன் சாரின் கதையே இல்லாத கதை திரைக்கதை வசனம் இயககம் படம் பிடிக்கும். அதற்கடுத்து பாலா சாரின் பரதேசி. அந்த படத்தில் அதர்வாவை டோட்டலாக மாற்றியிருந்தார். குறிப்பாக, பீரியட் பிலிம்களில் கதைக்காக நடிகர்களை மாற்றுவார்கள். அந்த மாதிரியான கதைகளை நான் அதிகமாக ரசிப்பேன். அதனால் அந்த மாதிரி கதைகளில் அதிகமாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஏற்பட்டிருக்கிறது. எனது அந்த ஆசையை நிறைவேற்றத்தான் இப்போது இளமி படம் கிடைத்திருக்கிறது என்கிறார் யுவன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in