டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியாவில் தாடி என்றால் நினைவுக்கு வருகிறவர்கள் இரண்டு பேர் ஒன்று ரவீந்திரநாத் தாகூர், அடுத்தது கே.ஜே.யேசுதாஸ். முன்னவர் கவிஞர், பின்னவர் அந்த கவிதைக்கு குரல் மூலம் உயிர் கொடுக்கிறவர். கட்டசேரி ஜோசப் யேசுதாஸ், கே.ஜே.யேசுதாஸ் ஆனதும், சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறை பெற்றதும், மாநில விருதுகளை 43 முறை பெற்றதும், ஒரே இரவில் நடந்துவிட்ட மாயாஜாலமில்லை. அது யேசுதாஸ் என்ற தனிமனிதனின் உழைப்பு, ஒழுக்கம், நேர்மை, இசை மீது கொண்டிருந்த பக்தி.
யேசுதாசின் பிறப்பிலேயே இசை இருந்தது. தந்தை அகஸ்டின் ஜோசப் மேடை பாடகராகவும், நாடக நடிகராகவும் இருந்தவர். வீட்டுக்கு மூத்த பிள்ளை என்பதால் யேசுதாசுக்கு முறையாக கர்நாடக இசை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். மெல்லிசையின் நுணுக்கங்களை தானே கற்றுக் கொடுத்தார். இசையின் அடிப்படை விஷயங்களை அறிந்து கொண்ட பிறகு குஞ்சன் வேலு ஆசான், பி.எக்ஸ் ஜோசப், சிவராமன் நாயர், ராமகுட்டி பாகவதர், கே.ஆர்.வைத்தியநாத பாகவதர் பல்லவி நரசிசிம்ம ஆச்சார்யா ஆகியோரிடம் இசை பயின்றார். இத்தனை குருக்களும் இணைந்து யேசுதாஸ் என்ற மகத்தான பாடல் கலைஞனை இசை உலகிற்கு வார்த்து தந்தார்கள்.
கொச்சி செயிண்ட் செபாஸ்டியன் பள்ளியில் படிக்கும்போது பாடகராக வெளி உலகம் அறியப்பட்டார். பள்ளி வழியாக எந்த பாட்டு போட்டி நடந்தாலும் கோப்பையின் பெயரில் முன்னரே யேசுதாசின் பெயர் எழுதப்பட்டு விடும். பள்ளிகளுக்கு இடையேயான மாநில போட்டியில் முதலிடம் பெற்றதும், கத்தோலிக்க இளைஞர் விழாவில் தங்கப் பதக்கம் வென்றதும் யேசுதாசை நாட்டுக்க அறிமுகப்படுத்தியது. இது நடந்துது 1958ல்.
கொச்சி அருகே உள்ள திரிப்புனித்துரா ஆர்.எல்.வி மியூசிக் அகாடமியில் சேர்ந்தார். கானபூஷனம் (வாய்ப்பாட்டு) பாடப் பிரிவில் சேர்ந்தார். அங்கு டபுள் புரமோசனில் சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு திருவனந்தபுரம் ஸ்ரீ சுவாதிக் திருநாள் மியூசிக் அகாடமியில் இசையின் உயர்படிப்பு படித்தார். கல்லூரி படிப்பை தொடர நினைத்தவருக்கு அது சில காரணங்களால் முடியாமல் போகவே திரைப்பட வாய்ப்பு தேடியானர்.
1961ல் முதல் வாய்ப்பு அமைந்தது. கால்பாடுகள் என்ற படத்தில் "ஜாதி பேத மத துவேஷம் ஏதுமில்லா..." என்ற பாடல்தான் யேசுதாசின் முதல் பாடல். படமும், பாடலும் ஹிட்டாக வாய்ப்புகள் குவிந்தது. அன்று துவங்கிய அவரது இசைப் பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வீணை எஸ்.பாலச்சந்திரின் பொம்மை படத்தில் இடம் பெற்ற நீயும் பொம்மை நா-னும் பொம்மை பாடல் தமிழில் அவருக்கு முதல் பாடல். அதன் பிறகு தெய்வம் தந்த வீடு வீதியிருக்க, அதிசய ராகம் அபூர்வ ராகம். விழியே கதை எழுது, செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல், என் இனிய பொன் நிலாவே, கண்ணை கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே என சாகாரவம் பெற்ற நூற்றுக் கணக்கான பாடல்களை தமிழுக்கு தந்தார்.
1970 முதல் இந்திப் படங்களிலும் தன் இசைப் பயணத்தை தொடங்கினார், அதன் பிறகு இந்திய மொழிகள் அனைத்திலும் பாடியதோடு, மலாய், ரஷ்யன், அரபி. இலத்தீன், ஆங்கிலம், மொழிகளிலும் பாடினார். இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிக் குவித்துள்ளார் யேசுதாஸ்.2006 மாவது ஆண்டில் சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரே நாளில் 16 பாடல்களை பாடியது சாதனை அளவாகும்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன், உள்ளிட்ட நூற்றுக் கணக்கான விருதுகளை யேசுதாஸ் பெற்றிருந்தாலும் அதையெல்லாம் விட அவரை பெருமைப்படுத்தும் விஷயம் சில உண்டு. கிறிஸ்தவ மதத்தில் பிறந்தாலும் திருவாரூர் தியாகராயர் ஆராதனை விழாவுக்கு ஆண்டுதோறும் வந்து அந்த இசை மகானின் சன்னிதியில் மனம்விட்டு பாடுவார், சபரிமலையில் அவரது "அரிவராசனம்..." பாடலுடன்தான் தினந்தோறும் நடை திறக்கப்படுகிறது, சாத்தப்படுகிறது. திருச்சியில் உள்ள அய்யப்பன் கோவிலில் மன்னன் படத்தில் இடம்பெற்ற அவரது பாடலான "அம்மா என்றழைக்காத உயிரில்லையே..." என்ற பாடல் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும். வேளாங்கண்ணி மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்தின் போதும் ஒலிக்கும் பாடலும் கே.ஜே.யேசுதாசுனடையது. இது உலகில் வேறெந்து பாடகனுக்கும் கிடைத்திராத பெரும் பாக்கியம்.
தமிழ் திரையுல் 50 ஆண்டுகள் தன் இசைப் பயணத்தை நிறைவு செய்திருக்கும் யேசுதாசுக்கு தமிழக திரையுலம் இணைந்து வருகிற 25ந் தேதி பாராட்டு விழா நடத்துகிறது. காந்தகுரலோனின் இசைப் பயணம் தொடர நாமும் வாழ்த்துவோம்.