இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ள ஐ திரைப்படத்தில் திருநங்கைகள் இழிவு செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
அதன் காரணமாக கொதித்துப்போயிருக்கிறார்கள் திருநங்கைகள். ஐ படத்தில் திருநங்கைகளுக்கு எதிராக இடம்பெற்றுள்ள காட்சிகளையும், வசனங்களையும் நீக்கும்படி வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சென்னையில் உள்ள திருநங்கைகள் அறிவித்தநிலையில், மதுரையில் ஐ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இனி வரும் நாட்களில்...ஐ படத்துக்கு எதிரான திருநங்கைகளின் போராட்டம் தீவிரமடையக்கூடும்.
ஐ பட விவகாரம் ஒரு பக்கம் இருக்க, பொதுவாகவே திருநங்கைகள் குறித்த தமிழ்சினிமாக்காரர்களின் பார்வை எப்படி இருக்கிறது?
கடந்த காலங்களில் வெளியான திரைப்படங்களை நம் நினைவில் நிறுத்திப் பார்க்கும்போது, ஒரு உண்மை, பொட்டில் அறையும். அதாவது, எந்தக்காலத்திலுமே தமிழ்சினிமாக்கள் திருநங்கைகளை மனிதாபிமானத்தோடு பார்த்ததில்லை.... அணுகியதில்லை...என்பதே அது. பல வருடங்களுக்கு முன்பு வரை மாற்றுப்பாலினமான அவர்களை அலி என்றும், ஒன்பது என்றும் மிகவும் தரக்குறைவாகவும், அவர்களை காயப்படுத்தும்படியும் தமிழ்சினிமாக்களில் சித்தரிக்கப்பட்டனர்.
சில வருடங்களுக்கு முன்பு அரசு ஆணையின் மூலம் அவர்கள் திருநங்கைகள் என கௌரவமாக அழைக்கப்படத் தொடங்கினர். சமூகத்திலும் இந்த பெயர் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்டு சொல்வது என்றால்....இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு அலி என்ற வார்த்தை திருநங்கைகளை குறிக்கும் என்ற கடந்தகால அருஞ்சொற்பொருள் அறவே தெரியாது. அந்தளவுக்கு சமூகம் மாறி வந்திருக்கிறது. ஆனால் சமூகத்தின் பிரதிபலிப்பு என்று சொல்லி எடுக்கப்பட்டு வரும் தமிழ்சினிமா இன்னும் மாறவில்லை. அவற்றை எடுக்கும் இயக்குநர்களின் சிந்தனையிலும் மாற்றம் இல்லை. இன்னமும் எளிய மக்களை எள்ளி நகையாடுவதை எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தொடர்ச்சியாய் செய்து கொண்டே இருக்கிறார்கள்.குறிப்பாக திருநங்கைகளை அசிங்கப்படுத்துவதையும், இழிவுபடுத்துவதையும் அவர்கள் விடவே இல்லை. பல படங்கள் திருநங்கைகளுக்கு எதிரான மனப்போக்கையே கொண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டுகளில் வெளியான தமிழிசினிமாக்களில் திருநங்கைகளை மனிதாபிமானத்தோடு சித்தரித்த திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் 1995 ஆம் ஆண்டு வெளியான பம்பாய் படம் மிக முக்கியமானது. பம்பாய் மதக் கலவரத்தில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை காப்பாற்றி பாதுகாப்பு தரும் மிக உன்னதமான உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் திருநங்கைகள் சித்தரிக்கப்பட்டனர். அதன் பிறகு ஏறக்குறைய 16 வருடங்களுக்குப் பிறகு காஞ்சனா திரைப்படத்தில்தான் திருநங்கைகள் சிறப்பானமுறையில் சித்தரிக்கப்பட்டனர். அது மட்டுமல்ல, காஞ்சனா என்ற டைட்டில் ரோலே திருநங்கையை குறிப்பிடுவதாக அமைந்திருந்தது. அதாவது காஞ்சனா படத்தின் பிரதான பாத்திரமே திருநங்கைதான். இந்த கதாபாத்திரத்தில் சரத்குமார் மிக அற்புதமாக நடித்திருந்தார். இடையில் 2008 ஆம் ஆண்டு ஜீவாவின் நடிப்பில் வி.வி.கதிர் இயக்கத்தில் வெளியான தெனாவெட்டு என்ற படத்திலும் திருநங்கைகளுக்கு முக்கியத்துவத்துடன் கூடிய கௌரவமான கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது.
1931 தொடங்கி 2015 வரை ஆயிரக்கணக்கான தமிழ்த்திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆண்டுக்கு 200 படங்கள் வெளியாகின்றன. இவற்றில் திருநங்கைகளை மானுடக்கரிசனத்தோடு அணுகிய படங்களை இரண்டு கைவிரல்களில் அடக்கிவிட முடியும். ஏனைய படங்கள் அவர்களை அசிங்கப்படுத்துவதையே தொடர்ச்சியாய் செய்து வருகின்றன.
திரைப்படங்களில் இழிவாக சித்தரிக்கப்படும் திருநங்கைகள் நிஜத்தில் வியத்தகு வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் அடைந்துள்ளனர்.