பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உயிர், சிந்துசமவெளி மாதிரியான படங்களைத்தான் தயாரிப்பாளர்கள் விரும்புறாங்க என்று சர்ச்சை டைரக்டர் சாமி தெரிவித்துள்ளார். மாமனார்- மருமகள் இடையே சந்தர்ப்ப சூழ்நிலையில் ஏற்படும் காதலையும், சல்லாபங்களையும் சிந்துசமவெளி என்ற பெயரில் படமாக்கி சர்ச்சையை சந்தித்திருப்பவர் டைரக்டர் சாமி. இவர் ஏற்கனவே உயிர், மிருகம் ஆகிய படங்களிலும் இதேபோன்ற சர்ச்சையான கதையை சொல்லி சர்ச்சையி்ல் சிக்கியவர். சிந்துசமவெளி படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் படம் ரீலீ்ஸ் ஆன சில தினங்கள் பெரும் கலவரம் நடக்காத குறையாக சாமிக்கு எதிரான சம்பவங்கள் நடந்தேறின
டைரக்டர் சாமி விட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் மர்ம கும்பலால் தாக்கப்பட்டது. டைரக்டர் சாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், படத்தின் நாயகி அனகாவுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுபற்றி டைரக்டர் சாமி அளித்துள்ள பேட்டியில், சிந்து சமவெளி படம் நல்லா ஓடிகிட்டு இருக்கு. கலாச்சார காவலர்கள் என்கிற பேர்ல சில பேர் தியேட்டர் வாசல்ல நின்னுகிட்டு உள்ளே போற பெண்களை போகாதீங்கன்னு தடுக்கிறாங்க. டிக்கெட் கவுண்ட்டரில் பெண்களுக்கு டிக்கெட் கொடுக்காதீங்கன்னு மிரட்றாங்க. இதையெல்லாம் மீறி பல மாவட்டங்களில் படம் நல்லா போயிட்டு இருக்கு. ஆனால் வெளியிடப்பட்ட 130 சென்ட்டர்ல 30 சென்ட்டர்ல மட்டும் படத்தை எடுத்துட்டாங்க. அதுக்கு காரணம் நான் சொன்ன கலாச்சார காவலர்கள்தான்.
விபச்சார தொழில் செய்யுறவங்க, திருடர்கள், கொலைக்காரங்க கூட நிம்மிதியா இருக்கணும்னுதான் நினைப்பாங்க. அவங்களே அப்படி நினைக்கும் போது நான் நினைக்க மாட்டேனா? நான் எங்க போனாலும் உயிர் மாதிரி படம் பண்ணிக் கொடுங்கன்னுதான் கேட்கிறாங்க. இந்த தயாரிப்பாளர்கிட்ட கூட நான் நாலு கதைகள் சொன்னேன். அவரு தேர்ந்தெடுத்த கதைதான் இது. உயிர், மிருகம் மாதிரி இருக்கக் கூடாதுன்னுதான் சரித்திரம் என்றொரு படத்தை இயக்கினேன். சில காரணங்களால் அது அப்படியே நிக்குது. பத்து ரீல் எடுத்தாச்சு. இன்னும் மூணு ரீல் பாக்கி. முப்பது நாட்கள் படப்பிடிப்பு முடிஞ்சா பிரமாதமான படமா வெளியில் வரும். தமிழனின் தற்காப்பு கலைகள் பற்றி சொல்ற படம் அது. அந்த படம் முடங்கியதாலதான் நான் சிந்து சமவெளி எடுக்க வேண்டியதாப் போச்சு.
என்னோட அடுத்த படம் நிச்சயமா சர்ச்சையான கதையா இருக்காது. அது குடும்ப கதையாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாகவும் இருக்கும். சதம் என்று பெயர் வச்சுருக்கேன். நாலைஞ்சு தயாரிப்பாளர்கள் வந்து அப்ரோச் பண்ணியிருக்காங்க. யாருக்கு பண்ணுவேன்னு இனிமேதான் முடிவு பண்ணனும். நடிகர்கள் தேர்வும் இனிமேதான். நான் மிக குறைவான பட்ஜெட்ல நேர்த்தியா ஒரு படத்தை தர்றேன். அதனால தயாரிப்பாளர்கள் என்னைத் தேடி வர்றாங்க, என்று கூறியுள்ளார்.