Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உயிர் மாதிரி படங்களைத்தானே விரும்புறாங்க - சாமி

13 செப், 2010 - 12:30 IST
எழுத்தின் அளவு:

உயிர், சிந்துசமவெளி மாதிரியான படங்களைத்தான் தயாரிப்பாளர்கள் விரும்புறாங்க என்று சர்ச்சை டைரக்டர் சாமி தெரிவித்துள்ளார். மாமனார்- மருமகள் இடையே சந்தர்ப்ப சூழ்நிலையில் ஏற்படும் காதலையும், சல்லாபங்களையும் சிந்துசமவெளி என்ற பெயரில் படமாக்கி சர்ச்சையை சந்தித்திருப்பவர் டைரக்டர் சாமி. இவர் ஏற்கனவே உயிர், மிருகம் ஆகிய படங்களிலும் இதேபோன்ற சர்ச்சையான கதையை சொல்லி சர்ச்சையி்ல் சிக்கியவர். சிந்துசமவெளி படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் படம் ரீலீ்ஸ் ஆன சில தினங்கள் பெரும் கலவரம் நடக்காத குறையாக சாமிக்கு எதிரான சம்பவங்கள் நடந்தேறின

டைரக்டர் சாமி விட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் மர்ம கும்பலால் தாக்கப்பட்டது. டைரக்டர் சாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், படத்தின் நாயகி அனகாவுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுபற்றி ‌டைரக்டர் சாமி அளித்துள்ள பேட்டியில், சிந்து சமவெளி படம் நல்லா ஓடிகிட்டு இருக்கு. கலாச்சார காவலர்கள் என்கிற பேர்ல சில பேர் தியேட்டர் வாசல்ல நின்னுகிட்டு உள்ளே போற பெண்களை போகாதீங்கன்னு தடுக்கிறாங்க. டிக்கெட் கவுண்ட்டரில் பெண்களுக்கு டிக்கெட் கொடுக்காதீங்கன்னு மிரட்றாங்க. இதையெல்லாம் மீறி பல மாவட்டங்களில் படம் நல்லா போயிட்டு இருக்கு. ஆனால் வெளியிடப்பட்ட 130 சென்ட்டர்ல 30 சென்ட்டர்ல மட்டும் படத்தை எடுத்துட்டாங்க. அதுக்கு காரணம் நான் சொன்ன கலாச்சார காவலர்கள்தான்.

விபச்சார தொழில் செய்யுறவங்க, திருடர்கள், கொலைக்காரங்க கூட நிம்மிதியா இருக்கணும்னுதான் நினைப்பாங்க. அவங்களே அப்படி நினைக்கும் போது நான் நினைக்க மாட்டேனா? நான் எங்க போனாலும் உயிர் மாதிரி படம் பண்ணிக் கொடுங்கன்னுதான் கேட்கிறாங்க. இந்த தயாரிப்பாளர்கிட்ட கூட நான் நாலு கதைகள் சொன்னேன். அவரு தேர்ந்தெடுத்த கதைதான் இது. உயிர், மிருகம் மாதிரி இருக்கக் கூடாதுன்னுதான் சரித்திரம் என்றொரு படத்தை இயக்கினேன். சில காரணங்களால் அது அப்படியே நிக்குது. பத்து ரீல் எடுத்தாச்சு. இன்னும் மூணு ரீல் பாக்கி. முப்பது நாட்கள் படப்பிடிப்பு முடிஞ்சா பிரமாதமான படமா வெளியில் வரும். தமிழனின் தற்காப்பு கலைகள் பற்றி சொல்ற படம் அது. அந்த படம் முடங்கியதாலதான் நான் சிந்து சமவெளி எடுக்க வேண்டியதாப் போச்சு.

என்னோட அடுத்த படம் நிச்சயமா சர்ச்சையான கதையா இருக்காது. அது குடும்ப கதையாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாகவும் இருக்கும். சதம் என்று பெயர் வச்சுருக்கேன். நாலைஞ்சு தயாரிப்பாளர்கள் வந்து அப்ரோச் பண்ணியிருக்காங்க. யாருக்கு பண்ணுவேன்னு இனிமேதான் முடிவு பண்ணனும். நடிகர்கள் தேர்வும் இனிமேதான். நான் மிக குறைவான பட்ஜெட்ல நேர்த்தியா ஒரு படத்தை தர்றேன். அதனால தயாரிப்பாளர்கள் என்னைத் தேடி வர்றாங்க, என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

dubaakoor - nager coil.,இந்தியா
21 செப், 2010 - 15:28 Report Abuse
 dubaakoor ஏன்டா தருதல உனக்கு கலியாணம் ஆயருச்சா? உன் பொண்டாட்டி ஓட மாமனார் எப்டி? உன் பொண்டாட்டி? இத படிக்கிறப்ப உனக்கு எவ்ளோ கோவம் ரோசம் மானம் இருக்கோ அதே தாண்ட இந்த தமிழ் ரசிகர்களுக்கும். திருந்து டா. மிச்சம் மீதி இருக்கிற நல்ல மனுஷனும் இல்லாத அளவு பண்ணிராத.
Rate this:
dubaakoor - nager coil.,இந்தியா
21 செப், 2010 - 15:28 Report Abuse
 dubaakoor ஏன்டா தருதல உனக்கு கலியாணம் ஆயருச்சா? உன் பொண்டாட்டி ஓட மாமனார் எப்டி? உன் பொண்டாட்டி? இத படிக்கிறப்ப உனக்கு எவ்ளோ கோவம் ரோசம் மானம் இருக்கோ அதே தாண்ட இந்த தமிழ் ரசிகர்களுக்கும். திருந்து டா. மிச்சம் மீதி இருக்கிற நல்ல மனுஷனும் இல்லாத அளவு பண்ணிராத.
Rate this:
வாஸ். - abudhabi nettu chanthu abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21 செப், 2010 - 12:50 Report Abuse
 வாஸ். அடேய் சாமி உன் மூஞ்சில என் பீச்சான் கைய வைக்க. முண்டம் மக்கள் கருத்து 90 % உன் கதை எதிர்த்து தண்டா. திருந்து டா. இது போல் படம் எடுத்து தவறுகள் இப்டி எல்லாம் இருக்குனு மனசுல நஞ்சு விதைக்குற நிறைய நல்ல உள்ளங்களுக்கு. கலாச்சார்த்தின் சீர் கேடு நீ. இந்த தமிழ் திரை உலஹதுக்கு தேவை இல்லாத ஆள் நீ. திருந்து இல்லேன பேசாம ஒதுங்கு. வெட்டி நியாயம் பெசவேனம் ராமாயணம் மஹா பாரதம் பாலச்சந்தர் நு. அடங்குடா
Rate this:
venkat - mahalapye,போஸ்ட்வானா
21 செப், 2010 - 01:12 Report Abuse
 venkat உங்க வீட்டு சமாசாரம் படம் வேண்டாம் சாமீ. நீ எப்பே படம் எடுத்தாலும் உன் குடும கத தான உனக்கு வரும் இல்லையா.
Rate this:
raja - dubai kurukkutheru,ஐக்கிய அரபு நாடுகள்
20 செப், 2010 - 18:41 Report Abuse
 raja ஹலோ டைரக்டர் சாமி நான் படித்தேன் உன் அடுத்த சினிமாஉக்காக இன்னும் மூன்று கதை கைவசம் உள்ளது என்று...ப்ளீஸ் அந்த கதை எல்லாத்தையும் நம்ம ராமேஸ்வரம் கடலுக்கு கொண்டுபோய் அத்தனை கதைகளையும் தீ வைத்து கடலில் கரைத்து நீ குளித்தால் உன் தமிழ் நட்டு பாவம் எல்லாம் மாறும்..
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in