‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஸ்டண்ட் நடிகராக இருந்த ராஜேந்திரன், பாலாவின் நான் கடவுள் படம் மூலம் கொடூர வில்லனாக அறிமுகமானார். முதல்படத்திலேயே ரசிகர்களை மிரட்டிய ராஜேந்திரன், அப்போது முதல் நான் கடவுள் ராஜேந்திரனாக மாறினார். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்தவர் இப்போது காமெடியிலும் அசத்தி வருகிறார். இவர் நடித்துள்ள டார்லிங் படம் இந்த பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள நிலையில், அவர் தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* உங்களைப்பற்றி...?
35 வருடமாக சண்டைக்காட்சிகளில் சுமார் 1000 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். நிறைய படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராகவும் இருந்துள்ளேன். என் உருவத்தை பார்த்து பாலா சார், நான் கடவுள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கில் வெங்கடேஷ், பவன் கல்யாண், மலையாளத்தில் மம்மூட்டி உள்ளிட்ட பல நடிகர்களுடன் சண்டை போட்டுள்ளேன்.
* இதுவரை எத்தனை படங்களில் நடித்துள்ளீர்கள்.?
தமிழில், இதுவரை 45 படங்களில் நடித்துள்ளேன். மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறேன்.
* எந்த மாதிரி ரோலில் நடிக்க ஆசை..?
நான் என்ன ஆசைப்படுகிறேன் என்பதை விட இயக்குநர் என்னை வைத்து எந்தமாதிரியான ரோலில் நடிக்க வைக்க விரும்புகிறார்களோ அதை செய்கிறேன். திருடன் போலீஸ் படத்தில் பெண் கேரக்டரில் நடித்தேன். இப்போது எனக்கு கொஞ்சம் வித்தியாசமான ரோல்களில் எல்லாம் நடிக்க வாய்ப்பு வருகிறது.
* வில்லனாக நடித்து வந்த நீங்கள் காமெடிக்கு மாறியது ஏன்.?
வில்லனாகத்தான் நடித்து வந்தேன். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில், ராஜேஷ் தான் என்னை வேறு டிராக்கிற்கு மாற்றிவிட்டார். அதைத்தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல பட வாய்ப்புகள் அமைந்தது, அந்த படங்களும் வெற்றியை கொடுத்திருக்கிறது. இப்போது ஜெயம் ரவியின்அப்பாடக்கடர், தண்ணில கண்டம், காலகட்டம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறேன். என்னால் நான்கு பேரை சிரிக்க வைக்க முடிகிறது என்று எண்ணும்போது எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது.
* உங்களுக்கு டான்ஸ் ஆட தெரியுமா..?
நமக்கு டான்ஸ் எல்லாம் வராது, ஆனாலும் வாலிப ராஜா, பாலக்காட்டு மாதவன் போன்ற படங்களில் ஆடியிருக்கிறேன். டான்ஸ் மாஸ்டர் சொல்வதை கேட்டு ஏதோ ஆடுகிறேன்.
* மொட்டையே உங்களுக்கு அடையாளமாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டீர்களா.?
நான் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கும் போது அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்துவிட்டேன். விழுந்தபிறகு தான் தெரிந்தது அது ஏதோ கெமிக்கல் கலந்த தண்ணீர் என்று... அப்போதிருந்து எனக்கு தலையில் முடியே வளரவில்லை. பிதாமகன் படத்தில் பாலா சாரை சந்தித்தேன். அந்தப்படத்தில் ஒரு பைட் சீன் கொடுத்தார். என்ன இவன் ஒரு டைப்பா இருக்கான் என்று அவரே நான் கடவுள் படத்தில் எனக்கு பெரிய ரோல் கொடுத்தார். எல்லாமே இந்த மொட்டை கெட்டப்பால் வந்தது.
* உங்களுக்கு பிடித்த காமெடி நடிகர் யார்.?
எனக்கு எப்பவும் சந்திரபாபு தான் பிடிக்கும். அவர் படங்களை அடிக்கடி பார்த்து சில ஜிமிக்ஸ் வேலை எல்லாம் கற்று கொண்டேன்.
* எந்த இயக்குநர் கூட நடிக்க ஆசைப்படுறீங்க.?
அந்த அளவு எல்லாம் நான் யோசிக்கவில்லை. ஆனாலும் திரும்பவும் பாலா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கு.
* உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார்.?
எனக்கு பிடித்த ஹீரோயின் பத்மினி தான். இப்போது இருக்கிற ஹீரோயின்களில் நயன்தாராவை ரொம்ப பிடிக்கும். அவர் கூட நான் இரண்டு-மூன்று படங்கள் பண்ணிவிட்டேன். ஆனால் இன்னும் நெருக்கமான காம்பினேஷனில் நடிக்கவில்லை.
* நீங்கள் சட்டையை கழற்றினால் சல்மான் கான், ஷாரூக்கான் எல்லாம் உங்க கூட தோற்றுபோவார்களாமே...?
நீண்ட வருடங்களாக உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக வைத்து வருகிறேன். பைட்டராக இருந்தபோதே எனது உடம்பை நான் சரியாக பார்த்து வந்தேன். என்னுடைய அப்பா நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளார், அதை தவறாமல் கடைபிடித்து வருகிறேன்.
* மேனேஜர் வைத்து தான் நீங்கள் பண வரவு-செலவு கணக்கு பார்த்து வருகிறீர்களாமே..?
ஆமாம், சம்பளம் விஷயத்தில் எனக்கு அந்தளவு பேச வராது. அதனால் மேனேஜர் மூலமாக சம்பளத்தை பேச வைத்துள்ளேன். அவ்வளவு தான்.
* என்ன படித்துள்ளீர்கள்..?
நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். அதுக்கு மேல் படிப்பு வரல. நான்கு-ஐந்து பாடங்களில் பெயில் ஆகிவிட்டேன், அதனால் இந்த படிப்பே போதும் என்று படிப்பை நிறுத்திவிட்டேன்.
* பத்தாம் வகுப்பு பாடத்தில் மொத்த 5 படங்கள் தானே.?
தமிழ், வரலாறு பாடம் மட்டும் தான் பாஸ் ஆனேன். மற்ற எல்லா பாடமும் பெயில் தான். 1972-ல் படித்தேன். அப்போது சரியாக எனக்கு படிப்பு வராது. நம்ம தொழிலுக்கு இதுவே அதிகம் என்று நினைத்து விட்டுவிட்டேன்.
* சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.?
எங்களது பரம்பரை தொழிலே பைட் தான். இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எங்காவது சைக்கிள் கடை இல்லையென்றால் மெக்கானிக் ஷெட்டில் வேலைக்கு சேர்ந்திருப்பேன். சினிமாவில் இப்போது நான் வாங்கும் சம்பளம் மிகவும் திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது.
இவ்வாறு கூறினார் நான் கடவுள் ராஜேந்திரன்.