Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

யாருடைய இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது! - நடிகர் ஆடுகளம் நரேன் பேட்டி

12 ஜன, 2015 - 12:25 IST
எழுத்தின் அளவு:

லூஸ் மோகன் என்றொரு நடிகர் இருந்தாரே அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியுமா? அதே மாதிரி பசி நாராயணன் என்ற ஒருவர் இருந்தார். அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியுமா? முடியவே முடியாது. அவங்க அவங்கதான். அதேமாதிரி இன்னும் பத்து வருடம் கழிச்சு இவங்களை நாம பேசுறது மாதிரி. என்னை பத்தியும் யாராவது பேசினாங்கன்னா. எனக்கும் ஒரு இடம் இருந்துருக்குன்னு நினைத்துக்கொள்ளலாம் என்கிறார் நரேன்.


தினமலர் இணையதளததிற்காக அவர் அளித்த பேட்டி...




இப்போது என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?


கணிதன், ஈட்டி , புலி, வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான், சந்தானம் ஹீரோவாக நடிக்கும படம் என பல படங்களில நடிக்கிறேன். இதில் ஈட்டியில் கோச்சாக பண்றேன். புலியில்,ஸ்ருதிஹாசனின் அப்பாவாக நடிக்கிறேன்.


அப்பா வேடங்களில் எந்த அளவுக்கு திருப்தியாக உள்ளது?


நான் பேசிக் ஆக டைரக்டர். அதனால் நான் எந்த வேடமாக இருந்தாலும் அதை எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியும் என்பதை மட்டும்தான் பார்ப்பேன். குறிப்பாக, இயக்குனர்களின் எதிர்பார்ப்பை விட சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில்தான் எனது கவனம் இருக்கும். அந்த வகையில், நான் நினைக்கிற மாதிரி வேடம் என்பதை விட வர்றதில் நலல வேடங்களாக நடிக்கிறேன்.


அதோடு எனக்கு சேலஞ்சிங் ரோல், அந்த ரோல், இந்த ரோல் என்று வெரைட்டியான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதை விட யதார்த்தமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே விருப்பம். அதனால், செயற்கைத்தனம் இல்லாமல் இயற்கையான நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதை டார்கெட்டாக வைத்துதான் செயல்படுகிறேன். முக்கியமாக கிடைக்கிற கதாபாத்திரங்களில் முடிந்தவரை நல்ல நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று மெனக்கெடுகிறேன். அதற்காக ஒவ்வொரு வேடங்களில் நடிப்பதற்கு முன்பும், நிறைய ஹோம் ஒர்க் செய்கிறேன். அந்த வகையில், டைரக்டர்கள், ரசிகர்கள் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.




உங்களை பாதித்த அப்பா நடிகர் யார்?


ரங்காராவ் எனக்கு மிக பிடித்தமான நடிகர். அவரும், சாவித்ரியும் நடித்தால் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது போல் இருக்கும். அந்த அளவுக்கு போட்டி போட்டு நடிப்பார்கள். அதேபோல் டி.எஸ். பாலையாவும் அற்புதமாக நடிப்பார். அவரையடுத்து மோகன்லாலின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னை வெகுவாக பாதித்த நடிகர் அவர். அதேபோல் இன்னும் நிறைய நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள். சின்னச்சின்ன வேடங்களில் வந்தாலும் ஏதோ ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்து விடுகிறார்கள்.


வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களிடமும் ஒர்க் பண்ணுகிறீர்கள்? புதிதாக வருபவர்களிடமும் ஒர்க் பண்ணுகிறீர்கள்? அந்த அனுபவம் எப்படி உள்ளது?


நான் பெரியவங்க, சின்னவங்க என்றெல்லாம் பார்ப்பதில்லை. யாராக இருந்தாலும் நமக்கு என்ன வேடம் தருகிறார்கள். கதையில் நம்முடைய பங்கு என்ன என்பதை மட்டுமே கருத்தில் கொள்வேன். மேலும், ஷங்கரோ, வெற்றிமாறனோ யாராக இருந்தாலும் என் பாணியில் நடித்துக்காட்டுவேன். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அதன்படி நடிப்பேன். காரணம், எந்த நடிகராக இருந்தாலும் கதையை கேட்கும்போதே நமக்குள் அதை எப்படி பிரதிபலிக்கலாம் என்பது தோன்றும். அப்படி நாம் செய்து காட்டும்போது அவர்களும் அது எதிர்பார்த்தபடி இருந்தால் ஏற்றுக்கொள்கிறார்கள்.


ஆனால், புதிதாக வருபவர்கள் அப்படியல்ல. நாம் செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முதல் படம் என்பதால் அப்படி பண்ண வேண்டும் இப்படி பண்ண வேண்டும் என்று யோசித்து விட்டு வருவார்கள். நாம் என்ன செய்து காட்டினாலும். இல்லை சார் உங்களை வேற மாதிரி காண்பிக்கபோறேன் என்பார்கள். அதனால் புதியவர்களை சமாளிப்பது ரொம்ப கஷ்டமாக உள்ளது.


அதிகமான படங்களில் அப்பாவாக நடிப்பது போரடிக்கவில்லையா?


உண்மைதான். என்னதான் நான் யூத்தாக என்னை காட்டிக்கொண்டாலும், ஸ்பாட்டிற்கு சென்றதும் தலையில் வெள்ளை அடித்து என்னை வயதான அப்பாவாக்கி விடுகிறார்கள். இது அதிகமான படங்களில் தொடர்வதால் எனக்கு போரடிக்கிறது என்பதை விட ஆடியன்சுக்கு போரடிக்கலாம். அதனால் ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் இனி வருங்காலங்களில் எனனை வித்தியாசமான வேடங்களில் வெளிப்படுத்துவேன்.




நீங்கள் ஹீரோவாக நடிக்கத்தான் சினிமாவுக்குள வந்ததாக கூறப்படுகிறதே?


யாராக இருந்தாலும் சினிமாவுக்குள் வரும்போது ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் டார்கெட்டாக இருக்கும். எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் பின்னர் நான் நடிப்பு கோர்ஸ் படிக்க சென்றபோது, ஹீரோவாக நடிப்பது ரொம்ப கஷ்டம் என்பதை உணர்ந்தேன். காரணம் ஒரு இரண்டரை மணி நேரமும் ஆடியன்சை ரசிக்க வைக்க வேண்டும். அது சாதாரணமான விசயமல்ல என்பது தெரிந்ததால், ரூட்டை மாற்றினேன். அதோடு ஹீரோ என்கிறபோது ஒரு லிமிட்டேசன் உள்ளது. படம் முழுக்க நல்லவனாகவே நடிகக வேண்டும் என்கிற கட்டாயம். நான் சினிமாவுக்குள் வந்த காலத்தில் இருந்தது. அதனால்தான் நான் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினேன்.


இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஹீரோ என்றால் நல்லவனாக மட்டுமே நடிக்க வேண்டும். வில்லன் என்றால் கெட்டவனாகவே நடிக்க வேண்டும். ஆனால் கேரக்டர் நடிகர் என்றால் நல்லவனாகவும், கெட்டவனாகவும் அல்லது வேறு மாதிரியாகவும் மாறி மாறி நடிக்கலாம். அதனால் படத்துக்குபபடம் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தலாம்.


விருது ஆசைகள் உள்ளதா?


விருது என்பது ஒரு அளவுகோல் மாதிரிதான். விருதுக்காகவே நடிக்கிறேன் என்று சொல்ல முடியாது. அது நடிப்பவர்களுக்கு ஒரு அங்கீகாரம். அதனால் விருது கிடைத்தால் சந்தோசம், கிடைக்காவிட்டாலும் வருத்தமில்லை காரணம், அதை நான் எதிர்பார்ப்பதில்லை.


உங்கள் நடிப்புக்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது?


ரொம்ப நன்றாக நடிப்பதாக சொல்கிறார்கள். நல்ல அப்பாவாக இருக்கிறீர்கள் என்கிறார்கள். அதனால் ராவாக இருந்த நான் கல்ச்சருக்கேற்ப என்னை மாறறிக்கொண்டு வருகிறேன்.மேலும், படங்களில் எப்படி நல்ல அப்பாவாக நடிக்கிறேனோ அதே மாதிரி வீட்டிலும் நான் நல்ல அப்பாதான். எங்க அப்பாவிடம் எனக்கு பயம் இருந்தது. ஆனால் என் பிள்ளைகளிடம் நான் ஜாலியாக பழகுகிறேன். சினிமாவில் அப்பாவாக நடிக்கும் என்னை எப்படி ஆடியன்சுக்கு பிடிக்கிறதோ, அதேபோல் வீட்டிலும் நிஜ அப்பாவான என்னை என் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


நேட்டிவிட்டி கதைகளுக்கேற்ப எப்படி உங்களை மாற்றிக்கொள்கிறீர்கள்?


முதலில் நான் சென்னைத்தமிழ்தான் பேசுவேன். அதனால் ஆடுகளம் படம் பண்ணும்போது, எப்படி மதுரை தமிழ் பேசி நடிக்கப்போகிறோம் என்று பயந்திருக்கிறேன். வெற்றிமாறனும் சென்னைப்பக்கம்தான். ஆனால், மதுரைக்கு சென்றபோது அவர் மதுரை பாஷையில் பேசினார். அதோடு அவரும், மதயானைக்கூட்டம் பட டைரக்டர் சுகுமாரனும் சேர்ந்து எனக்கு மதுரை தமிழில் பேச பயிற்சி கொடுத்தனர். அதோடு, அந்த படத்தில் என் கேரக்டருக்காக மதுரை தமிழில் 30 நாள் டப்பிங் பேசினேன். இப்போது என்னை சென்னைக்காரன் என்றால் யாரும நம்ப மறுக்கிறார்கள். அந்த அளவுக்கு எனது தமிழ் மாறி விட்டது.


அதேமாதிரி ஒஸ்தி படத்துக்காக திருநெல்வேலி தமிழ் பேசி நடித்தேன். இவ்வளவு சீக்கிரத்தில் பிக்கப் பண்ணிவிடடீர்களே என்று அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். அந்த அளவுக்கு நேட்டிவிட்டி கதைகளிலும், வட்டார வழக்கு தமிழை பேசுவதிலும் நான் தேர்ச்சி பெற்று விட்டேன். இபபோது நேட்டிவிட்டி கதைகளில் நடிப்பதே எனக்கு அதிகமாக பிடிக்கிறது.




நீங்கள் நெகட்டிவ் ரோலில் நடித்தால் ரசிகர்கள் ஏற்பார்களா?


இப்போதைய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். காரணம், சினிமாவை சினிமாவாக பார்க்கும் மனநிலைக்கு வந்து விட்டார்கள். அதேசமயம் இன்னும் சினிமா வில்லனை, வில்லனாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள் என்றாலும் அந்த சதவிகிதம் குறைந்துள்ளது. காரணம், நான் ஒரு டிவி சீரியலில் வில்லனாக நடித்ததைப்பார்த்து என்னை அடிக்ககூட வந்திருக்கிறார்கள்.


ரங்காராவ் செண்டிமென்டான நடிகர் என்றலும், வில்லனாகவும், காமெடியனாகவும்கூட நடித்திருக்கிறார். அப்போதைய ரசிகர்கள்கூட அவரை அந்த கேரக்டர்களாகவேதான் பார்த்தனர். அதனால் அந்தந்த கதாபாத்திரங்களாக மாறி நடிக்கும்போது பெருவாரியான ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நான்கூட கலியுகம் என்றொரு படத்தில் வித்தியாசமான வில்லன் ரோலில் நடித்திருக்கிறேன். அந்த படம் திரைக்கு வரவில்லை. வரும்போது என்னையும் ஏற்றுக்கொள்வார்கள்.


சமீபகாலமாக படங்களில் இடம்பெறும் பார் சீன்கள் பற்றி?


முன்பெல்லாம் பத்து பேரில் 2 பேர் குடிப்பாங்க. இப்போது பத்து பேரில் 8 பேர் குடிக்கிறாங்க. அதனால்தான் அந்த கோணத்தில் காட்சிகளை அமைக்கிறார்கள். இன்றைய மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் கதைகளை எடுக்கிறார்கள். அதனால் பார் காட்சிகள் தவிர்க்க முடியாததாகி வருகிறது.அதோடு இப்பல்லாம் பெண்கள்கூட குடிககிறார்கள். நிலைமை அப்படியாகி விட்டது. அதனால் சினிமாவில் அந்த மாதிரி காட்சிகளை திணிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. மனித வாழ்க்கையின் அங்கமாகி விட்ட விசயங்களை டைரக்டர்கள் பிரதிபலிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.


ரங்கராவின் இடம் இன்னும் காலியாகத்தானே உள்ளது?


அப்படியெல்லாம் சொல்ல முடியாது. யாருடைய இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது. லூஸ்மோகன் என்றொரு நடிகர் இருந்தாரே அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியுமா? அதே மாதிரி பசி நாராயணன் என்ற ஒருவர் இருந்தார் அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியுமா? முடியவே முடியாது. அவங்க அவங்கதான். அதேமாதிரி இன்னும் பத்து வருடம் கழிச்சு இவங்களை நாம பேசுறது மாதிரி. என்னை பத்தியும் யாராவது பேசினாங்கன்னா. எனக்கும் ஒரு இடம் இருந்துருக்குன்னு நினைத்துக்கொள்ளலாம்.


உங்களுக்கான இடம் தமிழ் சினிமாவில் கிடைத்து விட்டதா?


ஒரு சின்ன இடம் கெடைச்சிருக்கு. அதாவது, இப்பத்தான் ஒரு அரை க்ரவுண்ட் வாங்கியிருக்கிறேன். இன்னும் ஒரு ரெண்டு க்ரவுண்டு வாங்கி அதில் ஒரு வீடு கட்டுற அளவுக்கு நான் வளரும்போதுதான் என் இடம் கிடைத்து விட்டதாக கருதுவேன் என்கிறார் நரேன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in