ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கோலிவுட்டின் ஜாலி பார்ட்டி, ஆர்யா. ஒரு நடிகை கூட, நம்மை ஏறெடுத்து பார்க்கவில்லையே என, மற்ற ஹீரோக்கள் புலம்பும் போது, பிரியாணி கொடுத்தே, அனைத்து நடிகைகளையும் உஷார் பண்ணும் காதல் மன்னன். மீகாமன் தந்த வரவேற்பின் உற்சாகத்தில் இருக்கும் அவரிடம் பேசியபோது...
* முன்னணி நடிகைகளுடன் உங்களை இணைத்து அடிக்கடி கிசு கிசு வெளியாகிறதே?
நான் சினிமாவில் இருக்கிறேன். அந்த துறையில் இருப்பவர்களுடன் தானே பேச முடியும்; மற்றவர்களிடம் எப்படி பேச முடியும்? சக நடிகைகள் சினிமா குறித்து ஏதாவது கேட்டால், அதற்கு பதில் சொல்ல வேண்டும். நல்ல அபிப்ராயத்தில் பேசுவதால், சக நடிகைகள் என்னுடன் நட்பாக பழகுகின்றனர். இதை மற்றவர்கள் பார்க்கும்போது, கிசு கிசுவாக மாறி விடுகிறது.
* இப்போது போட்டி அதிகமாகி விட்டது. உங்களுக்கு பயமாக உள்ளதா?
சினிமாவில் தொடர்ந்து, பிசியாக இருப்பது சாதாரண விஷயமல்ல. கடந்த, 2005ல் சினிமாவுக்கு வந்தேன். என்னால் சினிமாவில் இத்தனை ஆண்டு தாக்குபிடிக்க முடிகிறது என்றால், அதற்கு காரணம் உண்டு. என் ரசிகர்கள் ஜாலியானவர்கள். என் படத்தை பார்க்க வருவோர், பெரிதாக ஏதோ சொல்லப் போகின்றனர் என்ற நினைப்பில் தியேட்டருக்கு வருவது இல்லை; இரண்டரை மணி நேரம் ஜாலியாக பொழுதுபோக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான விஷயங்களை என் படங்களில் வைக்க முயற்சிக்கிறேன்.
* மற்ற நடிகைகளை விட நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அவரை காதலிப்பதாகவும் பேச்சு உள்ளதே?
நயன்தாரா நல்ல தோழி. நயனின் அணுகுமுறை பிடிக்கும். அன்பாக பழகுவதிலும், நட்புக்கு மரியாதை கொடுப்பதிலும் நயனை அடிச்சுக்க முடியாது. நண்பர் என்ற முறையில் தான் என்னிடம் பேசுகிறார்; இதில் என்ன தவறு? நயன்தாரா என்னிடம் பேசினால் மற்றவர்களுக்கு என்ன வந்தது? மற்றபடி, எங்கள் இருவருக்கும் காதலும் இல்லை; கத்திரிக்காயும் இல்லை.
* உங்களுக்கு பிடித்த நடிகைகள்...?
யாரோட பெயரையாவது சொல்லிடுவேன்னு நினைக்காதீங்க. அதில் எந்த ரகசியமும் இல்லை. சினிமாத்துறை பெரிய கடல் போன்றது; ஜெயிப்பது சாதாரணமான விஷயமல்ல. நல்ல படம்கூட வெற்றியடைய நிறைய போராட வேண்டியிருக்கு. இதுபோன்ற சூழ்நிலையில், நடிகைகள் பற்றி சொல்லித் தான் ஆக வேண்டுமா? வேறு ஏதாவது கேளுங்க பாஸ்.
* மீகாமன் பட தயாரிப்பாளருக்கு நீங்கள் ஆறு கோடி ரூபாய் கொடுத்ததாக...?
மீகாமன் படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தயாரிப்பு செலவு அதிகமாகி விட்டது.தயாரிப்பாளர் என் நண்பர்; நானும் கொஞ்சம் செலவு செய்ய வேண்டியதாகிவிட்டது. மீடியாக்களில், ஆறு கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக எழுதிவிட்டனர். இது என் படம்; படம் வெளியாவது தாமதமாகி விடக்கூடாது என, நினைத்து உதவி செய்தேன். படம் ஹிட்டானது சந்தோஷமாக இருக்கிறது.
* சினிமா தயாரிப்பாளர் என்ற முறையில் உங்கள் கருத்து?
அமர காவியம் படத்தை தயாரித்தேன்; எதிர்பார்த்த வருவாய் இல்லை. சினிமாவில் ஜெயிப்பது, தோற்பது பெரிய விஷயமில்லை. ஒரு படத்தில் தோற்றால், சினிமாவே லாயக்கில்லை என, நினைப்பவர்களால் சினிமாவில் சாதிக்க முடியாது. ஒரு படத்தில் தோற்றால், மறு படத்தில் ஜெயிக்க வேண்டும் என, நினைப்பவர்களால் தான் சினிமாவில் நிற்க முடியும்.
* பல படங்கள் வெளியிட முடியாமல் கிடப்பில் கிடக்கிறதே?
தற்போது, 150 படங்களின் படப்பிடிப்புகள் நடக்கின்றன; 50 படங்கள் வெளியிட தயாராக உள்ளன. சினிமா தெரியாத தயாரிப்பாளர்கள் இப்போது அதிகமாக வருகின்றனர். போட்ட பணத்தை எடுக்கவும் முடியாமல், படத்தை ரிலீஸ் செய்யவும் முடியாமல், கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு, பல கோடி ரூபாயை இழந்து நிற்கின்றனர். வரும் 2015ம் ஆண்டில், இந்த நெருக்கடி குறையும்.