Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

எங்க அம்மாதான் எனக்கு ரஜினிகாந்த்...! : நடிகர் ப்ளாக் பாண்டி பேட்டி

07 ஜன, 2015 - 14:49 IST
எழுத்தின் அளவு:

சட்டை பட்டனை கழறறி விட்டு காலரை தூக்கி கெத்து காட்டினோம்னா சட்டை கழண்டிடும். அப்புறம் போடுறதுக்குகூட சட்டையே இருக்காது என்று ரஜினி சார் சிம்பாலிக்கா சொன்ன அட்வைஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார் நடிகர் ப்ளாக் பாண்டி.




தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...




தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி சொல்லுங்கள்?


இப்போது மொத்தம் 10 படங்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன். அதில், சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் அப்பாடக்கர் படத்தில் பூஜை படத்துல எப்படி சூரியுடன் இணைந்து நடித்தேனோ அதற்கு இணையான வேடம் பண்றேன். சூரி அண்ணன் மூலமாத்தான் அந்த வாய்ப்பு எனக்கு கெடைச்சது. மேலும், அலையே அலையே, நகர்ப்புறம், வெத்துவேட்டு, அகத்திணை என பெரிய படம், சின்ன படம்னு கலந்து நடிக்கிறேன். இதுதவிர சில படங்களுக்கு இனனும் டைட்டில் வைக்கல.


எந்த மாதிரி கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்?


அங்காடித்தெருவுக்கு அப்புறமா சாட்டையில ஷோலோ காமெடியனா பண்ணினேன். பிறகு நீர்ப்பறவையில் ஷோலோவாத்தான் நடிச்சேன். மேலும், எதுவும் நம்ம கையில இல்ல. கதாபாத்திரங்கள் அமையுறதுலதான் இருக்கு. அதோட, கதை எழுதும்போதே இந்த இடத்துல பாண்டி வரனும்னு நெனச்சிட்டாங்கன்னா நமக்கு கணடிப்பா அந்த சான்சு கெடைக்கும். என்னைப்பொறுத்தவரை எந்த வேடமா இருந்தாலும் அதுல முழு ஈடுபாடு காட்டித்தான் நடிப்பேன். என் நடிப்ப பார்த்துட்டு பாண்டிய அடுத்த படத்துலயும் நடிக்க வைக்கலாம்னு டைரக்டருங்க நெனைக்கிற அளவுக்கு என் வேலை இருக்கும். பிடிச்சிருந்தா எல்லா கேரக்டர்களிலும் நடிப்பேன்.


நீங்கள் கலைக்குடும்பத்தை சேர்ந்தவராமே?


ஆமா, எங்க அப்பா மதுரையில லைட் மியூசிக் நடத்தியவர். பாரதி சேகர்ன்னு சொன்னா நிறைய பேருக்கு தெரியும். எங்க அப்பாவோட இசை நிகழ்ச்சிகள்ல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜோட அப்பாவெல்லாம் இசைக்கருவி வாசிக்கிருக்காங்க. அதே மாதிரி, எங்க தாத்தா டி.ஆர் மகாலிங்கத்துடன் நடிச்ச பபூன் சொக்கலிங்கம். எம்ஜிஆர் எங்க தாத்தாவோட நாடகத்தை பார்த்து ரசிப்பாராம். அந்த அளவுக்கு பெயர் பெற்றவர் எங்க தாத்தா. மேலும், சென்னை வரும்போது சிவாஜி அய்யாவோட வீட்டில்தான் தங்கி விட்டு செல்வாராம்.


அவங்க நாடகத்துறையிலேயே கவனம செலுத்தினதாலதான் பெரிய அளவில வளர முடியல. அதனால் மூன்றாவது தலைமுறையான நான் சினிமாவுக்கு வந்தேன். ஆனா எனது பூர்வீகம் பற்றி இன்னும் யாருக்கும தெரியல. அதனால் கூடிய விரைவில ஒரு பிரஸ்மீட் வச்சி என்னைப்பற்றிய விசயங்களை தெரிவிக்கப்போறேன்.


நீங்கள் இயக்கிய குறும் படம் பற்றி?


தேவை என்ற பெயரில் ஒரு குறும் படம் இயக்கியுள்ளேன். அதில் நடித்துள்ள கார்த்திக் என்ற கேரக்டரின் தேவைகள் என்னென்ன என்பதை பற்றி படம். நடிப்பு என்பதுதான் மெயின் தொழில் என்றபோதும் எங்க அப்பாவின் கனவுகளை மெய்ப்பிக்கும் வகையில், இதுபோன்ற குறும் படங்கள் இயக்குவது, ஆல்பங்களுக்கு இசையமைப்பது மூலம் நனவாக்கி வருகிறேன். அந்த வகையில இதுவும் எனது கலைப்பயணததில் ஒரு ஓரத்தில இருந்து கொண்டேயிருக்கும்.


விஜய் டிவி ஆர்ட்டிஸ்ட் என்ற முத்திரை இனனும் உங்கள் மீது உள்ளதா?


பாலுமகேந்திரா சார் படத்துல நடிச்சாச்சு. மணிரத்னம் சார் நிறுவனத்தில் சீரியல்ல நடிச்சாச்சு. கனா காணும் காலங்கள் சீரியலில் நடிச்சு நான் வெளிய வந்து இத்தனை காலம் ஆனபிறகும் என்னை விஜய் டிவி ஆர்ட்டிஸ்ட் என்ற கணக்கிலேயே பார்க்கிறார்கள. ஆனால் இப்போதுதான் அதை உடைத்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை எல்லோருக்கும் நான் உபயோகப்பட வேண்டும். விஜய் டிவி கூப்பிட்டாலும் போய் நடிக்கணும். எல்லா சேனலகளிலும் நான் நடிக்கணும்னுதான் ஆசைப்படுறேன். எல்லார் கிட்டயும் சகஜமா இவன் வேலை பார்ப்பவன் அப்படிங்கிற ஒரு பேரு வாங்கத்தான் ஆசைப்படுகிறேன்.


உங்களது நிஜப்பெயரே பளாக் பாண்டிதானா?


என்னோட நிஜப்பேரு லிங்கேஸ்வரன். கனா காணும் காலங்கள் தொடர்ல நான் நடிச்ச ப்ளாக் பாண்டி என்ற கேரக்டர் பேருதான் இப்ப என்னோட பெயராகிடுச்சு. அதோட ஒரு நாளைக்கு 24 மணி நேரம்னா அந்த சீரியலுக்காக 22 மணி நேரம் உழைச்சோம். அதுக்கான பலனையும் அந்த சீரியல் கொடுத்துச்சு.


சினிமாவில் உங்கள் வளர்ச்சிக்கு யாராவது உறுதுணையாக இருக்கிறார்களா?


எனது வளர்ச்சியில எப்பவுமே சினிமா நண்பர்கள் ரொம்ப உறுதுணையா இருக்காங்க. சென்னையில நான் தொடங்கியிருக்கிற ஸ்டுடியோ திறந்து வைச்சது டைரக்டர் சமுத்திரகனி அண்ணன். அதே மாதிரி என வளர்ச்சியில என்னோட உடன்பிறவா அண்ணன்கள் 3 பேர் முக்கிய பங்கு வகிச்சிட்டு வர்றாங்க.


எனக்கு பக்கபலமாக இருப்பது எனது நண்பர்களும், பேமிலியும்தான். 10 ரூபாய்சம்பாதிச்சபோதும் தட்டிக்கொடுத்தவர்கள் 10 லட்சம் சம்பாதிக்கும்போதும் அதே மனநிலையுடன் தட்டிக்கொடுத்துட்டு வர்றாங்க. என்னோட மனநிலையை ஒரே லெவலில் வச்சிக்கிட்டு வர்றாங்க.


யாருடைய அறிவுரைகளை ஏற்றுக்கொள்வீர்கள்?


கும்கி படத்தின் ஆடியோ விழாவில் விக்ரம் பிரபுவிடம், சட்டை பட்டனை கழறறிக்கிட்டு காலரை தூக்கி கெத்து காட்டினோம்னா அப்புறம் போடுறதுக்குகூட சட்டையே இருக்காது கழண்டுடும் என்று ரஜினி சார் சிம்பாலிக்கா அட்வைஸ் கொடுத்தாரு. அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.


மேலும் என்னைப்பொறுத்தவரை எங்க அம்மாதான் எனக்கு ரஜினிகாந்த். என்னோட வளர்ச்சியில கண்ணும் கருத்துமா இருக்கிற அவங்களோட அறிவுரையின்பேரில்தான் நான் செயல்படுகிறேன். அதோடு, சினிமாவுல நெறையபேர் குடும்பத்தை விட்டுட்டு வந்துதான் ஜெயிச்சிருப்பாங்க. ஆனா ஜெயிச்சிட்டு திரும்பி பார்க்கிறப்ப குடும்பமே இருந்திருக்காது. ஆனா நான் வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் குடும்பத்துடன்தான் இருக்கணும்னு முடிவு செய்து, மதுரையில இருநது சென்னைக்கு வரும்போது குடும்பத்துடன்தான் வந்தேன். சினிமாவுக்கு வந்து 10 வருசத்துக்கு பிறகு பார்க்கிறப்ப. ஒரு நல்ல இடத்துலதான் இருக்கேன். இன்னும் பத்து வருசம் கழிச்சி பார்க்கிறப்ப இதைவிட ஒரு பெரிய இடத்துலதான் இருப்பேன். அந்த அளவுக்குத்தான் அந்த கலைத்தாய் நம்மளை வச்சிருப்பாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.


காமெடியன் என்கிற வட்டத்தை தாண்டி எந்த மாதியான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?


எனக்கு எல்லாவிதமான கேரக்டர்களும் பண்ணத்தான் ஆசை. அநத காலத்துல இருந்தே அதாவது சந்திரபாபு, நாகேஷ்ன்னு எடுத்துக்கிட்டா எல்லாவிதமான கேரக்டரும் பண்ணியிருக்காங்க. காமெடியனால எல்லா விதமான கேரக்டரு பண்ண முடியும்னு நிரூபிச்சிருக்காங்க. இப்பகூட சந்தானம் வரை ஹீரோ, குணசித்ரம்னு எல்லா வேடங்கள்லயும நடிக்கிறாங்க. நானும் அங்காடித்தெரு படத்தில் கேரக்டர், காமெடி இரண்டையும் கலந்து நடிச்சிருப்பேன் அது மாதிரி பல படங்கள்ல நடிச்சிருக்கேன்.


உங்கள் திறமையை வெளிக்கொண்டு வந்த டைரக்டர்கள் யார்?


கனா காணும் காலங்கள் டைரக்டர் பிரபு ராதாகிருஷ்ணன், படத்துல வசந்தபாலன் சார், சீனுராமசாமி சார், எல்லா டைரக்ர்களுமே எனனை நல்ல யூஸ் பண்ணியிருப்பாங்க அதில அதிகமாக என்னை யூஸ் பண்ணினவர் வசந்தபாலன் சார்தான். அதுக்கு பிறகு இன்னும் அந்த படம் மாதிரி எந்த படத்திலயும்நான் உழைக்கலன்னுதான் சொல்வேன். அதேமாதிரி சாட்டை அன்பழகனும் நல்ல ரோல் கொடுத்தார்.


அநத வகையில், இந்த மாதிரியான ரோல்களில் மட்டும்தான் பாண்டி நடிப்பார் என்பது இல்லாமல், எந்த மாதிரியான வேடங்களிலும் நடிக்கக்கூடிய நடிகர் என்று பெயரெடுக்கத்தான் ஆசைப்படுறேன். மேலும், எனக்கு சின்ன குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகளில் நடிக்க ரொம்ப ஆசை.


உங்களை அதிகம் இம்ப்ரஸ் பண்ணிய காமெடியன்கள்?


தஙகவேலு, சந்திரபாபு, நாகேஷ. வடிவேலு, சந்தானம், சூரி, சாமிநாதன் என எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் எனனை இம்பரஸ் பண்ணியிருக்கிறார்கள்.


காமெடிகளில் மெசேஜ் செர்ல்ல நினைப்பதுண்டா?


நேபாளியில கருப்பா இருக்கிற வெள்ளைக்காரன்னு நான் வசனம் பேசி நடிச்சிருப்பேன். அந்த மாதிரி என் உருவத்துக்கு மெச்சூரிட்டிக்கு என்ன சொல்லணுமோ அதை சொன்னாதான் மக்கள் ஏத்துக்குவாங்க. மேலும், மக்களை நான் மூணாந்தாரமாத்தான் சந்திக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால் எனக்கு வாய்ப்பு கொடுக்கிற டைரக்டர், தயாரிப்பாளரை நான் முதலில் திருப்திபடுத்த வேண்டும. முக்கியமாக, நடிக்கிறதுக்காக அவங்ககிட்ட நான் பத்து ரூபாய் சம்பளம் வாங்கினாலும்.என் நடிப்பப் பார்த்துட்டு, பாண்டிக்கு இன்னும் 5 ரூபாய் சேர்ததுக கொடுத்திருக்கலாமேன்னு அவங்க நினைக்கிற அளவுக்கு நடந்துக்கனும்னு நெனைக்கிறேன்.


ஹீரோ வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?


எத்தனையோ காமெடியன்கள் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்களே. அதனால் எனக்கு பொருத்தமான கதைகள் வந்தால் நடிப்பேன். என்னைப்பொறுத்தவரை கதைகள்தான் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அப்படி அமைகிற பட்சத்தில் ஹீரோவாகவும் நடிப்பேன். அதற்காக ஹீரோவாக நடித்து விட்டேன் இனிமேல் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன். சினிமாவில் இருக்கிற காலம் வரை எல்லாவிதமான கேரக்டர்களிலும் கலந்து நடித்துக்கொண்டேயிருப்பேன் என்கிறார் பிளாக் பாண்டி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in