Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பொன்விழா படங்கள்: படகோட்டி: மீனவர்களுக்கு அடையாளம் கொடுத்த எம்.ஜி.ஆர்.

18 டிச, 2014 - 13:33 IST
எழுத்தின் அளவு:

1964 காலகட்டம் என்பது கருப்பு வெள்ளை படங்களும், வண்ணப்படங்களும் மாறி மாறி வெளிவந்து கொண்டிருந்த நேரம். சிவாஜி கருப்பு வெள்ளை படத்தில் அழுது, உருகி உருண்டு பிரண்டு நடிப்பார். அதுவும் ஓடும், எம்.ஜி.ஆர். நான்கு பைட்டு, நான்கு பாட்டு, நாட்டுக்கு நல்ல விஷயங்கள் சொல்வார் அதுவும் ஓடும். ஒரு பக்கா கமர்ஷியல் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சரியான உதாரணம் படகோட்டி.


தமிழ் நாட்டின் நீண்ட கடற்கரையில் வாழ்ந்த லட்சக்கணக்கான மீனவ சமுதாய மக்களுக்கு தனி அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் -ஏற்படுத்திக் கொடுத்த படம். கடற்கரையை தாண்டி அடுத்து உள்ள மக்களுக்கு மீனவர்கள் பற்றி அதிகம் தெரியாது. அவர்களுக்கு அந்த சமுதாயத்தை அறிமுகப்படுத்தியது படகோட்டி.


கதை


கடற்கரையில் திருக்கை மீனவர்கள், சுறா மீனவர்கள் என்ற இரண்டு தரப்பினர் வாழ்கிறார்கள். இரு தரப்புக்கும் எப்போதும் மோதல்தான். அப்படி மோத வைத்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருப்பவர் அந்த ஊர் ஜமீன்தார் நம்பியார். திருக்கை மீனவர்களின் தலைவராக இருப்பவர் எம்.ஜி.ஆர். சுறா மீனவர்களின் தலைவராக இருப்பவர் எஸ்.வி.ராமதாஸ். எம்.ஜி.ஆரின் தந்தை இரு தரப்பு மீனவர்களையும் சமாதானமாக வழி செய்யும்போது அவர் கொல்லப்பட்டு விடுகிறார்.


தந்தை கொண்டுவர நினைத்த சமானத்தை நான் கொண்டு வருவேன் என்று எம்.ஜி.ஆர் சவால்விட்டு. இரு மீனவர்களின் ஒற்றுமைக்காக போராடுகிறார். எதிர் தரப்பைச் சேர்ந்த எஸ்.வி.ராமதாசின் மகள் சரோஜாதேவியை எம்.ஜி.ஆர் காதலிக்க பிரச்னை இன்னும் பெரிதாகிறது. இதற்கிடையில் திடீரென காணாமல் போகும் எம்.ஜி.ஆர் முதியவராக மாறுவேடத்தில் சென்று எதிர் அணியினருக்கு உதவுகிறார். அவர்கள் சார்பில் படகு போட்டியில் பங்கேற்று வெல்கிறார். இந்த உண்மை எம்.ஜி.ஆர் தரப்புக்கு தெரிய வர அவர்களும் அவரை ஒதுக்குகிறார்கள்.


இதற்கிடையில் எஸ்.வி.ராமதாஸ் நம்பியாரிடம் வாங்கிய கடனுக்காக அவர் மகளை திருமணம் செய்து கேட்கிறார். அவர் மறுக்கவே சரோஜாதேவியை கடத்தி அடைத்து வைக்கிறார். சரோஜாதேவியை மீட்டு எம்.ஜி.ஆர் மீனவர்களை எப்படி ஒற்றுமைப்படுத்துகிறார் என்பதுதான் கதை.


மீனவர்களின் வாழ்க்கை


பக்காவான கமர்ஷியல் படம். ஆனால் அந்த கமர்ஷியலுக்குள் மீனவர்களின் துயரமான வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கும். படத்தில் எம்.ஜி.ஆர் அணியும் உடைகள் யதார்த்தத்தில் மீனவர்கள் அணியும் உடை அல்ல. ஆனாலும் மக்கள் அதனை ரசித்தார்கள். கொண்டாடினார்கள். பிற்காலத்தில் எம்.ஜி.ஆருக்கு மீனவ சமுதாய மக்களிடையே கணிசமான வாக்கு வங்கியை உருவாக்கி கொடுத்ததும் படகோட்டிதான். இந்த படத்தின் வெற்றியை கருத்தில் கொண்டு பின்னாளில் மீனவ நண்பன் என்ற படத்தையும் எடுத்தார்.


சரவணா பிக்சர்ஸ் சார்பில் ஜி.என்.வேலுமணி தயாரித்திருந்தார். சக்தி டி.கே.கிருஷ்ணசாமியின் கதையை டி.பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். நாகேஷ் காமெடியனாக படம் முழுக்க வலம் வந்தார்.


இன்னிசை சித்திரம்


விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் தாலாட்டியது, தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்... நான் ஒரு குழந்தை நீயொரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி... ஆகிய டூயட்டுகள் அன்றைய இளைஞர்களை கிரங்க வைத்தது. தரைமேல் பிறக்க விட்டான் எங்களை தண்ணீரில் மிதக்க விட்டான்... பாடல் இன்றைக்கு மீனவர்களின் சோகத்தை காற்றில் சுமந்து கொண்டிருக்கிறது. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான்... தத்துவ பாடலாக காலத்தை கடந்து நிற்கிறது. கல்யாண பொண்ணு கண்ணாடி வளையல்... துள்ளல் பாடலாக இப்போதும் ரசிக்கப்பட்டு வருகிறது. என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி... பாடலை இப்போது கேட்டாலும் அதன் சோகத்தை உணர முடியும். அத்தனை பாட்டுக்கும் வாலி சொந்தக்காரர்.


வண்ண சினிமாவின் தொழில்நுட்பத்தில் இந்தப் படம் முக்கியமானதாகும், தெளிவான வண்ணத்தில் எடுக்கப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர் போன்றவர்கள் இப்போது இயக்கும் சமூக பிரச்னைகள் பற்றிய படங்களுக்கு முப்பாட்டன் இந்த படகோட்டி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in