மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
*இயற்பெயர் சிவாஜிராவ் கெய்க்ட்வாட். ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டியது கே.பாலச்சந்தர். பிறந்தது 1950 டிசம்பர் 12. நேரம் நள்ளிரவு 11.54 மணி. மகரராசி, திருவோண நட்சத்திரம்.
*பெங்களூர் கோவிபுரம் அரசு கன்னட மாதிரி ஆரம்ப பள்ளியில் படிப்பு. ஆச்சார்யா பாடசாலா பப்ளிக் ஸ்கூலில் உயர்நிலை கல்வி. படித்தது பியூசி வரை.
* முதலில் கார்பெண்ட்டர் வேலை. அப்புறம் கண்டக்டர் வேலை.
* பள்ளியில் படிக்கும் போது நாடக நடிப்பு, பிறகு சென்னை திரைப்படக்கல்லூரியில் நடிப்பு பயிற்சி. ராயப்பேட்டையில் நண்பர்களுடன் தங்கி வாய்ப்பு தேடி. பாலச்சந்தர் அலுவலகத்துக்கு நடையாக நடந்து, அவர் கண்ணில் பட்டு நடிகர் ஆனார்.
* பிற்காலத்தில் பல தத்துவ வசனங்களை பேசிய ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானபோது பேசிய முதல் வசனம் பைரவி வீடு இதுதானே என்பதுதான்.
* பல ஸ்டைல்களை காட்டி மக்களை மகிழ்வித்த ரஜினியின் முதல் சிகரெட் ஸ்டைல் அறிமுகமான படம் மூன்று முடிச்சு.
* 16 வயதினிலே படத்தில்தான் ரஜினி முதன் முறையாக பன்ஞ் டயலாக் பேசினார். இது எப்படி இருக்கு என்பது அந்த டயலாக்.
* ரஜினி பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்த படம் ஆடுபுலி ஆட்டம்.
* கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாரான ரஜினி பஸ் டிரைவராக நடித்த படம் ஆறு புஷ்பங்கள். விஜயகுமாருடன் இணைந்து நடித்த முதல் படம்.
* சூப்பர் ஸ்டார் பட்டத்தை பைரவி படத்தின்போது தந்தது கலைப்புலி எஸ்.தாணு. டைட்டில் கார்டில் சூப்பர் ஸ்டார் என்று போடப்பட்டது நான் போட்ட சவால்.
* ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. உடன் நடித்த விஜயகுமாருக்கு ஜோடி லதா.
* ஒன்பது நாட்களில் நடித்து முடித்த படம் மாங்குடி மைனர். 6 நாட்களில் நடித்த படம் அன்புள்ள ரஜினிகாந்த்.
* அக்ரஹாரத்து இளைஞனாக பிராமண லாங்குவேஜ் பேசி நடித்த ஒரே படம் சதுரங்கம். குப்பத்து சென்னை தமிழ் பேசி நடித்த படம் தப்பு தாளங்கள் மற்றும் கொடி பறக்குது.
* ஆங்கிலத்தில் வெளிவரும் கவ்பாய் ஸ்டைலில் நடித்த படங்கள் தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம்.
* சிவாஜியுடன் நடித்த முதல் படம் ஜஸ்டிஸ் கோபிநாத். அதன் பிறகு நான் வாழ வைப்பேன், விடுதலை, படிக்காதவன், படையப்பா படங்களில் நடித்தார்
* மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்ட ரஜினி குணமடைந்த பிறகு நடித்த படம் தர்மயுத்தம். படத்திலும் அதே மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்திருந்தார்.
* இளைஞன், நடுத்தர வயதுகாரர், முதியவர் என்ற மூன்று பருவ கேரக்டரில் நடித்த படம் ஆறிலிருந்து அறுபது வரை. சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை பெற்றுத் தந்த படம.
* முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படமும், முதல் வெள்ளி விழா படமும் பில்லா.
* ரஜினிக்கு பிடித்த நடிகரான எம்.ஆர்.ராதாவுடன் ரஜினி நடித்த ஒரே படம் நான் போட்ட சவால்.
* முதல் சினிமாஸ்கோப் படம் பொல்லாதவன். முதல் எம்எம் படம் மாவீரன்.
* மீசையை மழித்து விட்டு நடித்த முதல் படம் தில்லுமுல்லு. கே.பாலச்சந்தர் படத்தின் கதையைக்கூறி உன் அழகான மீசையை இழக்க வேண்டும் என்றார். மறுநாளே மீசையை மழித்து விட்டு கே.பி. முன்னாடி போய் நின்று நீங்க எதிர்பார்த்த மாதிரி இருக்கிறேனா என்றார். அவ்வளவு குரு பக்தி.
* ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆருக்காக எழுதி வைத்திருந்த கதைதான் ராணுவ வீரன். அவர் முதல்வராகிவிட்டதால். அந்த கதையில் நடிக்க தகுதியானவர் ரஜினிதான் என்று அவரை வைத்து படம் எடுத்தார்.
* ரங்கா 50வது படம். இந்தப் படத்தில் ரஜினியின் அக்காவாக ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் நான் அம்முவை அரசியலில் ஈடுபடுத்தப் போகிறேன். அவருக்கு பதிலாக கே.ஆர்.விஜயாவை நடிக்க வையுங்கள். அவரிடம் நான் பேசி விட்டேன் என்று சொல்லி கே.ஆர்.விஜயாவை எம்.ஜி.ஆர்தான் நடிக்க வைத்தார்.
* ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட படம் எங்கேயே கேட்ட குரல். பண்பட்ட கிராமத்து மனிதராக நடித்திருந்தார். சகோதரி நடிகைகள் அம்பிகாவும், ராதாவும் அக்கா தங்கையாகவும் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்கள்.
* ரஜினியின் சில படங்களின் பெயர்கள் மாற்றப்பட்டது. நானே ராஜா நீயே மந்திரி என்ற பெயர் தம்பிக்கு எந்த ஊர் என்று மாறியது, நான் காந்தி அல்ல படம் நான் மகான் அல்ல என்று ஆனது. காலம் மாறிப்போச்சு தர்மதுரை ஆனது.
* அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என்று செல்லமாக அழைத்த குழந்தை நட்சத்திரம் மீனா. எஜமான் படத்தில் ஜோடியாக நடித்தார்.
* தன்னை பேட்டி எடுக்க வந்த மாணவி உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி அமைய வேண்டும் என்று கேட்க? உங்களைப்போல் சிம்பிளாக இருந்தால் போதும் என்று ரஜினி சொல்ல. என்னை கட்டிக்குவீங்களா என்று மாணவி கேட்க. காதல் மலர... கல்யாணம் நடந்தது. அந்த மாணவி லதா ரஜினிகாந்த்.
* தர்மதுரை படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படம் தாமதமாகி பொங்கலுக்கு வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் ரசிகர்கள் தமிழ் நாடெங்கும் தர்மதுரையை வரவேற்று போஸ்டர் ஒட்டிவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்று கருதி 72 மணிநேரம் தொடர்ந்து நடித்து பொங்கலுக்கு படத்தை வெளியிடச் செய்தார்.
* மூன்று முடிச்சு, மாப்பிள்ளை, மன்னன், படையப்பா படங்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. மூன்றிலுமே ரஜினியோடு மோதுபவர்கள் பெண்கள்.
* பாண்டியன் படம் தன்னை வைத்து 27 படங்கள் இயக்கிய எஸ்.பி.முத்துராமன் குழுவிற்காகவும், அருணாச்சலம் படம் பல்வேறு காலகட்டங்களில் தனக்கு உதவிய நண்பர்களுக்காவும், அன்புள்ள ரஜினிகாந்த், வள்ளி படங்கள் தன் நண்பர் நட்ராஜுக்காகவும், குசேலன் படம் பாலச்சந்தருக்காகவும், சிவாஜி படம் ஏவிஎம் நிறுவனத்துக்காகவும், லிங்கா படம் நண்பர் ராக்லைன் வெங்கடேசுக்காகவும் ரஜினி நடித்துக் கொடுத்த படம்.
* ஒரு பிரச்னையில் ரஜினிக்கு விநியோகஸ்தர்கள் சங்கம் ரெட் போட்டது. இதனால் உழைப்பாளி படம் வெளிவந்தபோது அதை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை. ரஜினி தானே சொந்தமாக வெளியிட்டார். படம் 100 நாட்கள் ஓடியது. விநியோகஸ்தர் சங்கம் பகிரங்க மன்னிப்பு கேட்டது. தயாரிப்பாளர்கள் நேரடியாக படத்தை திரையிடும் வழியையும் திறந்து வைத்தது. படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க முடியாத சோகத்தில் இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
* முதன் முறையாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட படம் முத்து. ஜப்பானில் அவருக்கு பெரிய ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தியது. முத்துவின் ஜப்பானிய பெயர் டான்சிங் மகராஜா.
* ரஜினி தயாரித்த முதல் படம் மாவீரன். ரஜினி திரைக்கதை வசனம் எழுதியது வள்ளி. பாடிய படம் மன்னன்.
* அதிக நாட்கள் ஓடியது சந்திரமுகி, அதிக பட்ஜெட்டில் உருவானது எந்திரன். முதல்
அனிமேஷன் படம் கோச்சடையான்.
* 6 மாதத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் லிங்கா.
*எந்த அடையாளமும் இல்லாமல் ஊர்சுற்றுவது பிடிக்கும், நீண்ட தூர கார் பயணம் பிடிக்கும். கையேந்தி பவனில் சாப்பிட பிடிக்கும்.
* தனக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களை அழைத்து தங்க சங்கிலியும், ராகவேந்திரர் படமும் பரிசளிப்பது ரஜினியின் பாலிசி. அவரிடம் அதிக முறை தங்கச்சங்கிலி வாங்கியவர் கவிஞர் வைரமுத்து.
* ரஜினி காலில் விழுந்து வணங்கும் மூன்று பேர் அண்ணன் சத்யநாராயராவ், இயக்குனர் கே.பாலச்சந்தர், அமிதாப் பச்சன். ஆட்டோகிராப் வாங்கிய ஒரே நபர் கன்னட நடிகர் ராஜ்குமார்.
* மூன்று முறை தனது சுயசரிதையை எழுத முயற்சித்து பாதி எழுதிய நிலையில் கிழித்து போட்டு விட்டார். பொய்யாக என்னால் சுயசரிதை எழுத முடியவில்லை. உண்மையை எழுதினால் பலர் மனது புண்படும் என்று கூறிவிட்டார். ரஜினியை பற்றி இதுவரை 140 வரலாற்று புத்தங்கள் வெளிவந்துள்ளது. "அவற்றில் பாதிதான் உண்மை. என் நிஜ வரலாறு எனக்கு மட்டுமே தெரியும்" என்பார் ரஜினி.
எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, தன் வசீகர முத்தாலும், தனித்தன்மையாக அமைந்த ஸ்டைலாலும், கடுமையான உழைப்பாலும் தமிழ மக்களின் மனங்களில் இடம்பிடித்து இன்று உலகம் முழுவதும் அன்பு உள்ளங்களை பெற்றிருக்கிற சூப்பர் ஸ்டார் கடந்த வந்த பாதை கடுமையானது. ஒரு இரவில் அவர் சூப்பர் ஸ்டார் ஆகிவிடவில்லை. அத்தனைக்கும் காரணம் அவரது உழைப்பு, நல்ல உள்ளம், பரந்த மனப்பாண்மை. இப்போது சொல்லுங்கள் ரஜனி ஒரு தனிமனித சரித்திரம்தானே...!!
இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டாரையும், அவரது லிங்காவையும் வாழ்த்துவோம்.