இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவில் ஒரு அழகான ஆச்சரியம். ஓரிரு படங்களுடன், மார்க்கெட் இழந்து, மூட்டை முடிச்சுகளுடன் ஓடும் ஹீரோயின்களுக்கு மத்தியில், 12 ஆண்டுகளாக, சினிமா ரசிகர்களின் டார்லிங்காக வலம் வரும் மூன்றெழுத்து ஹைக்கூ. சமீபகாலமாக, திருமணம் தொடர்பாக தொடர்ந்து துரத்தும் கிசு கிசுவால் வாடிப்போயிருக்கிறார். இது தொடர்பாக, நம்முடன் அவர் பேசியதிலிருந்து...
1 ஹீரோயினாக, 12 ஆண்டுகள் தொடர்ந்து தாக்குப்பிடிப்பது எப்படி சாத்தியம்?
கடவுள் புண்ணியம் தான் அதற்கு காரணம். சரியான படங்களை தேர்வு செய்தது, நம்முடைய நடவடிக்கைகள், அப்புறம் கொஞ்சம் அதிர்ஷ்டம் இதெல்லாமும் ஒரு காரணம். என்ன தான் சிரமப்பட்டு நடித்தாலும், திறமை இருந்தாலும், படம் ஜெயிக்கணும்; பெரிய நடிகர்கள், பெரிய பேனர்களில் நடிக்கணும். பணத்துக்கு ஆசைப்பட்டு, தவறான படத்தில் நடித்தால், காலியாகி விடுவோம்.
2 த்ரிஷா எப்படிப்பட்ட பொண்ணு?
02)எந்த ஒரு விஷயத்தையுமே, தைரியமாக எதிர்கொள்ளும் மனப் பக்குவம் உள்ள பொண்ணு நான். எங்க வீட்டில், அம்மா, பாட்டி எல்லாருமே தைரியமானவங்க தான். எதற்காகவும், அழுது புலம்புவது இல்லை. என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் எழுதலாம்; ஆனால், அதற்கு ஒரு லிமிட் வேண்டும் அல்லவா? லிமிட் தாண்டினால் கண்டிப்பாக கோபம் வரும்.
3 சினிமா வேண்டாம் என, எப்போதாவது நினைத்தது உண்டா?
ஒரு நாளும் இல்லை. நானே விரும்பி வந்த தொழில் இது. நேரத்துக்கு துாங்க முடியாது; சாப்பிட முடியாது; எந்த ஒரு விழாவுக்கும் போக முடியாது. ஆனாலும், எத்தனை கஷ்டம் வந்தாலும், சினிமாவை விட்டு போக வேண்டும் என்ற எண்ணம் வந்தது இல்லை.
4 எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க ஆசை?
வில்லியாக நடிக்க வேண்டும். அதேபோல், மகாராணியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. வரலாற்றை பின்னணியாக கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
அப்புறம், பார்வை திறனற்ற பெண் வேடத்திலும் நடிக்க ஆசை உள்ளது.
5 அஜித் கூட, 4 படங்களில் நடித்துள்ளது பற்றி...
அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர், வெளிப்படையாக பேசும் மனிதர். பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது, அவருக்கு நன்றாக தெரியும். யாராக இருந்தாலும் மரியாதையுடன் பழகுவார். முகத்துக்கு நேரில் ஒன்று, மறைமுகமாக ஒன்று என, பேசமாட்டார். அவருடன் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகவே நினைக்கிறேன்.
6 நடிகைகளின் திருமணம் மட்டும் ஏன் சர்ச்சைக்குரியதாகவே இருக்கு?
இப்பத்தான், பாயின்டுக்கு வர்றீங்கனு நினைக்கிறேன். இதற்கான பதிலைத் தானே அனைவரும் எதிர்பார்க்கிறீர்கள். நடிகைகள் மீது உள்ள புகழ் வெளிச்சம் தான் இதற்கு காரணம். நடிகைககளாக இல்லாதவர்களும், காதலிக்கின்றனர்; கல்யாணம் செய்கின்றனர். அதில்
சர்ச்சையும் ஏற்படுகிறது. ஆனால், அது, அதிகமாக வெளியில் தெரிவது இல்லை. நடிகைகள் கல்யாண விஷயம் என்றால், ஓவரா, பில்டப் கொடுத்துடறாங்க. ஒருத்தரை பார்த்ததுமே, முதல் பார்வையிலேயே அவரை கல்யாணம் செய்து விட முடியாது. அவரின் பின்னணி, அவரின் குணம் என, அனைத்து விஷயங்களும் தெரிய வேண்டும். சாதாரண பெண்கள் மட்டுமல்லாமல், நடிகைகளும் இதைத் தான் எதிர்பார்க்கின்றனர். ஆனால், நடிகைகள் கல்யாணம் மட்டும், விளம்பர பொருளாகி விடுவது தான், வேதனையான விஷயம்.
7 சரி அதை விடுங்க; எப்போது தான் கல்யாணம் செய்ய உத்தேசம்?
இரண்டு வருஷமாகவே அம்மா வற்புறுத்திட்டு இருக்காங்க. நானும், நல்ல பையனா பாருங்க, கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டேன். சினிமா வாய்ப்பு போய்விடும் என்ற கவலை எதுவும் இல்லை; நிறைய படம் பண்ணியாச்சு. என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால், என்னை ஒரு வார்த்தை கேட்டு விட்டு எழுதலாமே. எல்லார் வீட்டிலும் மகளுக்கு கல்யாண ஏற்பாடுகளை செய்வது மாதிரி தான், எனக்கும் செய்யுறாங்க. இதை
ஏன் பெரிது படுத்துகின்றனர் என, தெரியவில்லை.
8. ப்ரியதர்ஷன் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தலன்னா வேற எந்த ஜாப் போயிருப்பீங்க?
எத்திராஜ் காலேஜ் படிக்கும்போது வாய்ப்பு கொடுத்தார், நான் என் தோழிகள் எல்லாரும் எம்.பி.ஏ. ஆஸ்திரேலியாவில் படிக்க ஆசைப்பட்டு இருந்தோம், அன்னைக்கு ஒரு வேளை, சார் கூப்பிடலைன்னா நான் ஆஸ்திரேலியா படிக்க போயிருப்பேன்.
9. உங்களுக்கு திருப்புமுனை தந்த படங்கள்னு எதை சொல்றீங்க ?
ஆரம்பத்தில சின்ன சின்ன ரோல்களில் நானும் நடிச்சேன், லேசா லேசா படம் நடிச்சேன் , அப்புறம் மௌனம் பேசியதே படம் சூர்யா கூட பண்ணேன் , பிறகு
ஹரி படம் சாமி பண்ணேன் ,அந்த படம் தான் என்னை ரசிகர்களிடம் தூக்கி போனது. எங்க போனாலும் மாமின்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க , பெரிய திருப்புமுனை
தந்தது, அதன் பிறகு உடனே என்னை பேச வைத்த படம் கில்லி , பெரிய நடிகர்கள் கூட நடித்த படம் அது , கில்லி என்னை உச்சத்தில் கொண்டு போனதுன்னு சொல்லுவேன்.
10.,உங்களால் பண்ண முடியாம போன ரோல்ஸ் என்ன என்ன ?
நான் இது வரை வில்லி ரோல்ஸ் பண்ணல ,மகாராணி மாதிரி ஹிஸ்டரி படங்கள் பண்ணல, கண் பார்வை அற்ற மாதிரி ரோல்ஸ் பண்ணல ,அப்படி நிறைய ரோல்ஸ் பண்ண முடியாம போனது , கொஞ்சம் கஷ்டமா இருக்கு
11, உங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்த நடிகர்கள் யாரெல்லாம் ?
நான் ரொம்ப பிரெண்ட்லி கேரக்டர் , யார்கிட்டேயும் சண்டை வம்புக்கெல்லாம் போனதில்லை ,அதனால் நிறைய ஹீரோக்கள் எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்காங்க ,
சூர்யா, விஜய், அஜித், விக்ரம் இப்படி பலரும் எனக்கு சப்போர்ட்டிவா இருந்திருக்காங்க , என் சினிமா பயணம் நல்லாவே போய்ட்டுருக்கு ,அதுக்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்.
12. சிம்ரன் ,உங்களை போல எல்லாம் இப்போ வர்ற நடிகைகள் ரொம்ப வருஷம் தாக்குப்பிடிக்க முடியலயே ஏன் ?
கொஞ்சம் கவனமா ஸ்கிரிப்ட் தேர்வு பண்ணணும், சில சமயம் படங்களில் வந்து தலை காட்டிட்டு போற மாதிரி இருக்கும்,அந்த மாதிரி படங்களும் ஆரம்பத்தில்
பண்ணிருக்கேன் , ஆனா எனக்கு அந்த மாதிரி சின்ன படங்கள் ஆரம்பத்தில் உதவியா இருந்திருக்கு , நடிகர்கள் , ,பெரிய கம்பெனி, நல்ல கதை இதில் நான் ஒரு சின்ன துளியா இருந்ததில் சந்தோஷப்பட்டிருக்கேன் , அப்புறம் கொஞ்சம் பேர் கிடைத்தது, அதை தக்க வைக்க சில நல்ல கதைகளை தேர்வு செய்து நடிச்சாலே போதுமானதுன்னு நினைக்கிறேன் ,படங்கள் இல்லன்னா கூட அவசரப்பட்டு கமி்ட் பண்ணிக்காம நல்ல கதை கிடைத்த பிறகு படம் பண்ணுவது நல்லதுன்னு நினைக்கிறேன்.
13. கமல் சார் கூட நடிச்சிட்டீங்க ,ரஜினி கூட நடிக்காத வருத்தம் இருக்கா ?
ஐயோ ரொம்ப இருக்கு, அந்த ஒரு நாளுக்காக இப்பவும் காத்திருக்கேன் , மாஸ் ஹீரோவாச்சே அவர்...
14., நீங்க நடிக்க முடியாம மிஸ் ஆன படங்கள் அதும் இருக்கா ?
தசாவதாரம் படம் , 90 நாள் மொத்தமா டேட்ஸ் கேட்டார் ரவிக்குமார் சார் .அப்போ எனக்கு கொடுக்க முடியல ,கதை கேட்டு ரொம்ப பிடித்தது, ஆனா அந்த படம் பண்ண
முடியாத ரொம்ப வருத்தம் எனக்கு இருந்தது, அப்புறம் வாரணம் ஆயிரம், சமீரா ரோல் , கெளதம் படம்னா உடனே பண்ணிடுவேன் அப்போ US போக வேண்டி இருந்தது
படத்துக்காக ,என்னால போக முடில ,அந்த வருத்தம் இருக்கு
15. த்ரிஷா பொறுத்தவரை ஒரு விஷயத்தை எப்படி கையாளுவீங்க ?
ரொம்ப தைரியமா பேஸ் பண்ணுவேன் ,எங்க வீட்டில் அம்மா, பாட்டி எல்லாரும் ரொம்ப தைரியமானவங்க. எது நடந்தாலும் அழுது புரண்டு ரகளை அடிக்க மாட்டோம்.
கண்டிப்பா தைரியமா இருப்பேன், என்னை எது எழுதினாலும் சாதாரணமா போயிடுவேன் , ஆனா தரக்குறைவா முதுகில் அடிச்சமாதிரி எழுதினா, பதில் சொல்ல நினைப்பேன்
, அதையும் சீரியஸா எடுத்துக்க மாட்டேன்.
16. கதை தேர்வு செய்யும் போது நடிகர் யாருன்னு பார்ப்பீங்களா ,பேனர் பார்ப்பீங்களா , இல்லை கதை உங்களை இம்ப்ரஸ் பண்ணியிருந்தா, சம்பளம் இல்லாம
நடிக்க ஒத்துக்குவீங்களா ?
எனக்கு நல்ல கதை அமையும் போது, அவங்களால் அந்த பட்ஜெட்ல படம் பண்ண முடியலன்னா , சில படங்கள் சம்பளம் குறைத்து கூட நடிச்சி கொடுத்திருக்கேன் , கதை ரொம்ப முக்கியம் ,சில சமயம் நல்ல கதை இருந்து ஆர்டிஸ்ட் இருந்து தயாரிப்பாளர் சரியா கிடைக்கலைன்னா படம் பாதிலே நின்னுடுமே ,சோ இது எல்லாமே இப்போ கொஞ்சம் பார்த்து ஒத்துக்கிறேன், நல்ல கதைகளுக்காக சம்பளமும் குறைச்சிருக்கேன்.
கடைசியா ஒரு கேள்வி; யார் அந்த வருண்...?
என் நட்பு வட்டாரத்தில் நிறைய பேர் உள்ளனர். எல்லாரிடமும் எளிதாக பழகி விடுவேன். ஆனாலும், வருண் பற்றி பேசுவதற்கு எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், இப்போது அதைப் பற்றி பேச வேண்டாமே. எனக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கும்போது, கண்டிப்பாக, எல்லாருக்கும் அதை வெளிப்படையாக தெரிவிப்பேன்.