ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
''என்னோட அப்பா எலக்ட்ரீஷியன். அவருக்கு சினிமா ஒலிப்பதிவுத் துறையில ஏதாவது சாதிக்கணும்னு ஆசை. ஆனா, அவரோட ஆசை நிறைவேறலை. ஆனா, ''நான் சினிமாத்துறைக்கு போறேன்ப்பா''ன்னு அவர்கிட்டே போய் நின்னப்போ, அவர் மறுப்பேதும் சொல்லலை. அந்த மவுனத்தை ''எனக்கு கிடைக்காதது உனக்காவது கிடைக்கட்டும்ப்பா''ன்னு அவர் சொல்றதா எடுத்துக்கிட்டேன். இப்போ, ''அவன் நல்லா வருவான்''னு, அம்மாகிட்டே அவர் அடிக்கடி சொல்றார். மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!'' உற்சாகமாய் பேசும் 27 வயது கார்த்திக்கின் சமீபத்திய அடையாளம்... அமரகாவியம். கார்த்திக் இக்காவியத்தின் உதவி படத்தொகுப்பாளர்.
* கார்த்திக்கோட சொந்த ஊரு?
''அப்பா ஊரு ஆலங்குளம். அம்மாவுக்கு பாளையங்கோட்டை. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே வடசென்னை. பி.காம்., எம்.ஏ., தத்துவம், விஷுவல் கம்யூனிகேஷன் எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சுட்டு, எடிட்டர் சூர்யா சார்கிட்டே போய் நின்னேன். 'திருதிரு துறுதுறு' படத்தொகுப்புல வாய்ப்பு கொடுத்தார். அதுக்கப்புறம் தெலுங்குல 'சிவா மனசுல சக்தி', தமிழ்ல 'நான்', 'சுட்டகதை' இப்போ 'அமரகாவியம்'னு ஓடிட்டிருக்கேன். எடிட்டர் பவன் சார், 'ஆஹா கல்யாணம்' படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். அதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம்!''
* எந்த இயக்குனரின் படத்தில் பணிபுரிய அதீத விருப்பம்?
''மணிரத்னம். அவர் எடுக்கிற ஒவ்வொரு காட்சியிலேயும் உயிர் இருக்கும். 'என்னை உன்னால 'கட்' பண்ண முடியுமா?'ன்னு, ஒவ்வொரு காட்சியும் படத்தொகுப்பாளரை குழம்ப வைக்கும். அந்த தருணங்கள் ரொம்ப சுகமா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். அதை அனுபவிக்க ஆசைப்படறேன்!''
* 'வெற்றி தாமதமாகிறதே' என்கிற வருத்தம் உண்டா?
''இன்னும் கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கறப்போ, எதுக்காக இந்த வருத்தம்? அதுவும்போக, எல்லா கதையிலேயும் ஒரு படத்தொகுப்பாளருக்கு வேலை இருக்காது. நல்ல கதை அமையணும். அதுக்காக காத்திருக்கத்தான் செய்யணும்!''
* படத்தொகுப்பாளர்களுக்கு ரசிகர்களிடம் அங்கீகாரம் கிடைக்கிறதா?
''கண்டிப்பா இல்லை; அதேநேரத்துல, அந்த அங்கீகாரம் அவசியமும் இல்லை. படத்தோட ரசிகன் ஒன்றிட்டாலே, படத்தொகுப்பு சரியா இருக்குன்னுதான் அர்த்தம். அந்தநேரத்துல, படத்தொகுப்பாளர் பத்தி ரசிகனுக்கு நினைப்பு வராது. ஆனா, சினிமாத்துறை ஜாம்பவான்கள் இதை கணிச்சிடுவாங்க. அவங்க பார்வை என் மேல பட்டாலே போதும். என் கனவுகள் நிஜமாயிடும்!''
* உங்களின் வெற்றி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
''சூர்யா சார், பவன் சார் ரெண்டு பேரும் மனசார பாராட்டணும். அவங்க கொடுத்த ஊக்கம்தான், என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கு. அப்புறம் என் அம்மா. இவங்க எல்லாரையும் நெகிழ வைக்குற வெற்றியா என் வெற்றி அமையணும். அவ்வளவுதான்!''