இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவுக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை பக்கம் இருந்து ஆண்டுதோறும் அழகுப் புயல்கள் கோடம்பாக்கத்தில் மையம் கொள்ளும். இந்த ஆண்டு அது அதிகமாகவே இருந்தது. கன்னட தேசத்திலிருந்து, குறைந்த அளவே அழகு தேவதைகள் வருவார்கள். இந்த ஆண்டு கன்னடத்திலிருந்துதான் அதிக தேவதைகள் வந்திருக்கிறார்கள். இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் அறிமுகமான, அறிமுகமாக இருக்கிற இந்த அழகு புயல்கள் 2015ல் கலக்கும் என்றே தெரிகிறது.
எதிர்பார்க்கப்படும் அந்த தேவதைகள் பற்றி பார்க்கலாம்...
ஆனந்தி
ஸ்ரீதிவ்யா, லட்சுமி மேனன் மாதிரியான நெகஸ்ட் டோர் கேர்ள் லுக்கில் அடுத்து வரப்போகிறவர் ஆனந்தி. ரக்ஷிதாவாக தெலுங்கில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்தவர். கயல் மூலம் புயலாக வீசப்போகிறார்.
பல்லவி சுபாஷ்
சட்டென்று மாறுது வானிலை படத்தின் மூலம் கோடம்பாக்கம் வரும் மும்பை பொண்ணு. வக்கீலுக்கு படித்துக் கொண்டிருந்தவர், மாடலிங், விளம்பரம் என்று இறங்கினார். ராஜீவ் மேனன் இயக்கிய ஒரு விளம்பரத்தால் பிரபலமானவர். தமிழ் படத்தில் நடிக்கலாமே என்ற கொக்கி போட்டு கவுதம் மேனனிடம் அறிமுகப்படுத்த தல படத்துக்கு பிறகு இவரின் படம்தான். படத்துக்கு பிறகு இவரது வானிலை மாறுமா என்பது தெரியும்.
சாவித்ரி
இசை படத்தின் மூலம் எஸ்.ஜே.சூர்யா அறிமுகப்படுத்துகிறார். மும்பை பொண்ணு, இந்தி டி.வி தொடர்களில் நடிப்பை துவக்கியவர், மர்டர் 2 படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். சுல்குனா பனிகிரஹி என்ற இயற்பெயரை அவர் நன்றாக நடிப்பதால் சாவித்ரி என்று மாற்றி இருக்கிறார் சூர்யா. இசை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நெருக்கமாக நடித்திருக்கிறார். ஜோதிகா, நிலா ஆகியோருக்கு கிடைத்த பிரேக் இவருக்கு கிடைக்கலாம்.
கீர்த்தி சுரேஷ்
மாஜி ஹீரோயின் மேனகாவின் மகள். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். கீதாஞ்சலி படத்தின் மூலம் ஹீரோயினாகி நான்கைந்து படங்ளில் நடித்துவிட்டார். ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கிறார். அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடிக்க இருக்கிறார்.
அமைரா தஸ்தூர்
10ம் வகுப்பு முடித்த கையோடு விளம்பர நடிகையானர் நடித்துக் கொண்டே படித்தார். இசாக் என்ற இந்திப் படத்தில் ஹீரோயினாக அறிமுகம். அழகான அரைலூசுப் பெண் வேண்டும் என்று தேடிய கே-.வி.ஆனந்த் கண்ணில் பட்டு அனேகன் படத்தின் கதாநாயகியாகிவிட்டார்.
சுபஸ்ரீ கங்குலி
கேரளாவின் புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் எல்லாம் தெரியும். மிஷ்கினின் பிசாசு படத்தில் பேயாட்டம் ஆட வந்திருக்கிறார். பிசாசுவில் பெரும்பாலான காட்சிகளில் 60 உயர ரோப்பில் தொங்கி நடித்த இவரது நடிப்பு ஆர்வத்தை ஆச்சர்யத்துடன் பார்க்கிறது கோடம்பாக்கம்.
நிக்கி கல்ராணி
தெலுங்கு, கன்னடத்தில் நடித்து வரும் சஞ்சனாவின் சகோதரி. பெங்களூரு பொண்ணு, பேஷன் டிசைனிங் முடித்து, அதன்பிறகு 50 விளம்பரங்களில் நடித்து விட்டு சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தெலுங்கு கன்னடத்தில் 11 படங்கள் நடித்து விட்டு இப்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் டார்லிங் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
சுபஸ்ரீ கங்குலி
பெங்காலியிலிருந்து மிக அபூர்வமாகத்தான் தேவதைகள் வருவார்கள். இப்போது வந்திருக்கிறார் சுபஸ்ரீ கங்குலி. கிருஷ்ணா இயக்கும் மானே தேனே பேயே படத்தின் ஹீரோயின். கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்த கேரக்டர் அவர் கால்ஷீட் சொதப்பவே, சுபஸ்ரீக்கு அடித்தது லக்.
சோனம் பாஜ்வா
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வாங்கி வெளியிடும் கப்பல் படத்தின் ஹீரோயின். பஞ்சாபி நடிகை. பெஸ்ட் ஆப் லக் என்ற பஞ்சாபி படத்தில் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் நடித்திருக்கிறார். மும்பையில் நடந்த கப்பல் ஆடிசனில் கலந்து கொண்டு தேர்வாகி வந்திருக்கிறார்.
தீபா சன்னிதி
5 கன்னட படங்களில் நடித்து விட்டு எனக்குள் ஒருவன் மூலம் தமிழுக்கு வருகிறார். இது வெளிவருவதற்கு முன்பே யட்சன் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அச்சு அசலான கன்னடத்து பைங்கிளி. முதல் கன்னட படமான சாரதியில் நிறைய விருதுகளை வாங்கியவர், அதன் பிறகு பிரியாமணி மாதிரி கமர்ஷியல் ஹீரோயினாகிவிட்டார்.
சோனாரிகா படோரியா
கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் கலாபிரபு இயக்கும் இந்திரஜித் படத்தில் கவுதம் கார்த்திக்கின் ஜோடியாக அறிமுகமாகிறார். மும்பை பொண்ணு இந்தி டி.வி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தவரை அப்படியே அள்ளிவந்து ஹீரோயினாக்கி விட்டார்கள்.
அனைகா
ராம்கோபால் வர்மாவின் கண்டுபிடிப்பு. தெலுங்கு படத்தில் அறிமுகம். அந்தப் படம் நான்தாண்டா என்ற பெயரில் தமிழில் வரவேண்டியது. இன்னும் வரவில்லை. அதில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். அதன் டீசரை பார்த்த வசந்த பாலன் காவியத் தலைவன் படத்தில் காவியத் தலைவியாக்கி விட்டார்.
இப்படியாக 2015ம் ஆண்டு அழகுப் புயல்கள் அடித்து வீசப்போகிறது. இதில் எந்த புயல் எந்த பாதிப்பும் இல்லாமல் கரையைக்கடக்கும், எந்த புயல் நின்று வீசும் என்பதை அவர்களின் படம் வெளிவந்த பிறகு தெரியும்.