தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரசாந்த் நடித்த கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, கார்த்திக் நடித்த சந்தித்தவேளை போன்ற படங்களை இயக்கியவர் ரவிச்சந்திரன். கவர்ச்சி, இடுப்பு டான்ஸை நம்பாமல், கதையை மட்டுமே நம்பி படமெடுக்கும் சில இயக்குனர்களில் இவரும் ஒருவர். ஆனால் இயக்கிய படங்கள் ஹிட்டாக அமைந்தபோதும் அதன்பிறகு அவரை சினிமாவில் காணமுடியவில்லை. பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது நட்பதிகாரம் என்ற படம் மூலம் கோலிவுட்டில ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார் ரவிச்சந்திரன்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
நட்பதிகாரம் எந்தமாதிரியான கதையில் உருவாகிறது?
நட்பை மையமாக வைத்து உருவாகிறது. இரண்டு குடும்பம், நான்கு நண்பர்கள். முதலில். கேசுவலாக கலாய்த்துக்கொள்ளும் அவர்களுக்கிடையே பின்னர் நட்பு ஏற்படுகிறது. அதையடுத்து அவர்கள் வாழ்க்கையில் ஒரு சிறிய குழப்பம் வருகிறது. அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இந்த படம். முக்கியமாக ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே உள்ள நட்பு கொஞ்சம் மிஸ் ஆனாலும் காதலாகி விடும். ஆனால் நான் கடைசிவரை அவர்கள் நட்பாக இருப்பதுபோலவே சொல்லியிருக்கிறேன்.அது சாத்தியமா என்று கேட்கலாம். ஆனால் இந்த கதையில் அது சாத்தியப்பட்டிருக்கிறது. அது எப்படி என்பதுதான் நட்பதிகாரம்.
இப்போதைய யூத்துக்கு ஏதாவது அட்வைஸ் செய்கிறீர்களா?
நண்பர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். மேலும், தெரிந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. எந்த சந்தர்ப்பத்திலும் நட்பு துரோகம் ஆகிவிடக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறேன். மேலும், கண்ணெதிரே தோன்றினாள் எனது முதல் படம் என்றாலும், இந்த படத்தையும் எனது முதல் படம் என்கிற மனநிலையுடன் இயக்கியிருக்கிறேன்.
திரையுலகில் உங்களது இடைவெளிக்கு என்ன காரணம்?
இந்த இடைவெளி தானாக ஏற்பட்டதல்ல, நானாக ஏற்படுத்திக்கொண்டது. சினிமாவில் நான் சம்பாதிக்க வரவில்லை. எல்லா படத்திலுமே ஒரே டென்சன் டென்சன் டென்சன். சினிமாவில் என்னால் மல்லுக்கட்ட முடியவில்லை. அதனால்தான் படம் இயக்காமல் இருந்தேன். இப்போது என் நண்பர் இந்த படத்தை இயக்கச்சொன்னதால் இயக்கியிருக்கிறேன்.
இன்றைய டிரெண்டு கானா பாட்டு என்கிறார்களே. இந்த படத்தில் அது உள்ளதா?
இந்த படத்துல டாஸ்மாக்கையெல்லாம் காட்டவில்லை. சில காட்சிகளில் பீர் பாட்டில் இருந்தால்கூட அது அட்மாஸ்பியர்ல இருக்கும். ஆனா சாப்பிடுற மாதிரி இருக்காது. என் படத்துல டாஸ்மாக்கெல்லாம் இடம்பெறாது.
மேலும் ஒரு கானா பாட்டு இருக்கு. மியூசிக் டைரக்டர் தேவா பாடியிருக்கார். அவளோ பாண்டி பஜாரு, இவளோ பர்மா பஜாரு, ரெண்டு பேரும் சேர்ந்தாக்க ரொம்ப பேஜாரு என்ற பாடலை பாடியிருக்கிறார்.
அது மட்டுமின்றி, என்னோட படத்துல எந்த பெண்ணையும் தப்பா காட்டினதில்லை. இடுப்பு டான்ஸ் வைத்ததில்லை. நான் ஒரு நல்ல படம் பண்றேன். தேவா சார் பாட்டே இந்த படத்துக்கு மேட்சாகாத பாடல்தான். இருபபினும் ஒரு கமர்சியல் வேண்டும் என்பதற்காக அந்த பாடலை வைத்தேன். சொன்னதும் உடனே வந்து பாடிக்கொடுத்தார். இந்த படத்தில் இரண்டு ஹீரோவும் புதுசுதான். தீபக் நிழம்பூர் என்பவர் இசையமைத்திருக்கிறார். அவர் கேரளாவைச்சேர்ந்தவர்.. எப்படி ஹாரிஸ் ஜெயராஜ்க்கு எனது பர்ஸ்ட் படத்தில் ஒரு பிரேக் கொடுத்தேனோ அதே மாதிரி இவருக்கும் இந்த படம் பிரேக்காக இருக்கும். அந்த அளவுக்கு நன்றாக இசையமைத்திருக்கிறார்.
தியேட்டருக்கு ஆடியன்ஸை இழுப்பதே கடினமாக இருக்கும்போது புதுமுகங்களை வைத்து படம் இயக்கியிருக்கிறீர்களே?
பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ணுவது டார்ச்சராக உள்ளது. அதனால்தான் புதுமுகங்களை வைத்து படம் பண்ணியிருக்கிறேன்.மேலும், இப்போதெல்லாம் புதுமுகங்கள் படங்கள்தான் ஓடுது.நல்ல பொருளை செங்கல்பட்டுல விற்றாலும் போய் வாங்குவாங்க. கேவலமான பொருள் பாண்டிபஜார்ல விற்றாலும் வாங்க மாட்டாங்க. அந்த வகையில், என் படம் நல்ல படம். அதனால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும்.
மறுபடியும் பிரசாந்தை இயக்கும் ஐடியா உள்ளதா?
இப்போது அவர் சாகசம் என்றொரு படத்தை பண்ணிக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அதோடு சில இந்தி ரீமேக் படங்களின் ரைட்சும் அவர்கள் வைத்திருப்பதாக செய்தி படித்தேன். ஆனால் என்னைப்பொறுத்தவரை ரீமேக் படம் பண்ணும் ஐடியா ஒருபோதும் கிடையாது. அதனால்தான், விஜய்யை வைத்து பிரியமானேவளே படத்தை இயக்க வாய்ப்பு வந்தபோது மறுத்து விட்டேன். காரணம இன்னொருத்தர் இயக்கிய படத்தை திரும்பவும் இயக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. இன்னொருத்தவர் பீல் பண்ணியதை நான் எப்படி பீல் பண்ண முடியும். அப்படி பண்ணினால் அது அடுத்தவன் பொண்டாட்டிய சொந்தம் கொண்டாடுவதுபோல் இருக்கும்.