டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் பப்ளி நடிகையாக வந்து தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்திய ஹன்சிகா மோத்வானி, எங்கேயும் காதல், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். உதயநிதியுடன் அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சிங்கம் 2, மான் கரேத்தே உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் நடித்த அரண்மனை படம் சூப்பர்ஹிட் ஆகி உள்ளது. தினமலர் இணையதளத்திற்கு ஹன்சிகா அளித்த தீபாவளி சிறப்பு பேட்டி :
* இந்த வருஷம் தீபாவளிக்கு உங்க பிளான்?
பாம்பேல நான் வளர்க்கும் 30 குழந்தைகளோட தீபாவளி கொண்டாடப் போறேன். 20ந் தேதி வரை சூட்டிங் இருந்தது. 21 காலை தான் பாம்பே வந்தேன். தீபாவளிக்கு நான், அம்மா, அந்த குழந்தைகளோட பஸ்ல போகப் போறோம். ஒருநாள் அவங்களோட இருக்கப் போறேன். குழந்தைகளுக்கு பிடிக்க மாதிரி டிரஸ், அவங்க விரும்பின பட்டாசுகள் எல்லாம் வாங்கி கொடுத்திருக்கேன். அவங்களோட சந்தோஷத்தை பார்க்கும் போது, எனக்கும் சந்தோஷமா இருக்கு. எல்லாமே கடவுள் பார்த்துக்கிறார்.
* ஹன்சிகா கேரக்டர் இப்ப எப்படி....?
ரொம்ப அமைதியா இருக்க ஆசைப்படுறேன். எல்லாத்தையும் கவனமா கையாள நினைக்கிறேன். இப்ப மெச்சூர்டா இருக்கேன். சந்தோஷமா இருக்கேன். என்னை யார்னு என் குடும்பத்திற்கு தெரியும். ரசிகர்கள் இல்லைனா நான் இல்லை. தமிழ் ரசிகர்கள் எனக்கு கொடுத்த சப்போர்ட் அவ்வளவு. மிஸ் பண்ண மாட்டேன்.
* உங்க அம்மா உங்க வாழ்க்கையில் எடுக்கும் சிரமங்கள்....?
என் அம்மா எனக்காக நிறைய சிரமங்களை சந்திச்சிருக்காங்க. அம்மா எனக்கான காமிரா.
* பேய் படங்களில் நடிக்க பயம் இருக்கா?
கண்டிப்பா எனக்கு பயம் தான். அரண்மனை படத்தில் நிறைய சீனில் பயந்திருக்கேன்.
* ஒரு படத்தை நடிக்கும் முன் எப்படி தேர்வு செய்றீங்க, அந்த பேனரா, கதையா, இயக்குனரா, நடிகரா?
ஸ்கிரிப்ட் தான். இப்ப நடிக்கும் ஆம்பள படத்தில் நான் கதையே கேக்கல. சுந்தர் சார் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னை சரியான வகையில் கொண்டு போவார். செல்வி ரோல் பார்த்துட்டு, என்னை பரிதாபபட்டவங்க பல பேர். செல்வி கேரக்டர் அவ்ளோ பவர் ரோல். அந்த மாதிரி கதைகள் வந்தா கண்ண மூடி கமிட் பண்ணலாம்.
* சின்ன குஷ்பூனு உங்களை எல்லாரும் சொல்றாங்களே, சுந்தர்.சி கூட 2 படங்கள் நடிச்சிருக்கீங்க அவர் என்ன சொன்னார்?
அவர்கிட்ட நிறைய பேர் சொல்லிருக்காங்க. அந்த பொண்ணு பார்க்கிறதுக்கு உங்க மனைவி குஷ்பூ மாதிரி இருக்குனு. முதல் டைம் என்னை சந்திக்கும் போது, கொஞ்ச தூரம் இடைவெளியில் நின்னு என்னை பார்த்திருக்கார். அப்புறம் என்னை சந்தித்து பேசும் போது, உண்மையாகவே நான் குஷ்பூ மாதிரி இருக்கேனு சொன்னார். நான் தான் தமிழ் இண்டஸ்ட்ரி, ரசிகர்களுக்கு நன்றி சொல்லனும், அவ்ளோ பெரிய நடிகை குஷ்பூ மேடத்துடன் என் பெயரையும் சொல்வதற்கு.
* பிற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் இல்லையா?
தமிழ் இண்டஸ்ட்ரி ரொம்ப நல்ல இண்டஸ்ட்ரி. நல்ல இதயம் உள்ள மனிதர்கள் இருக்காங்க. என்னை இவ்ளோ தூரம் வளர்த்ததே தமிழ் ரசிகர்கள் தான். இப்போதைக்கு, தமிழ், தெலுங்கு போதும். ஹிந்தி படங்கள் கூட வருது. ஆனால் இப்ப என் முழு கவனம் தமிழ், தெலுங்கு தான்.
* நிறைய உங்களுக்கு தமிழ் பேச சொல்லிக் கொடுத்த நடிகர்கள் யார்?
தனுஷ், ரவி, சிவா இப்படி எல்லாருமே எனக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்க. ரொம்ப சப்போட்டிவா இருந்திருக்காங்க.
* பெண்களுக்கு சொல்ல விரும்புவது?
தமிழ் பெண்கள் சூப்பர் எனர்ஜி. எல்லாரும் பழகும் விதம், அன்பு ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லா பெண்களும் கண்டிப்பா ஏதோ ஒரு வேலை பார்க்கனும். யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. நம்மால் முடிந்த அளவு சம்பாதிக்கனும்னு நினைக்கிறேன்.
* 2014 எப்படி இருக்கு ?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பல படங்கள் ஹிட் கொடுத்திருக்கேன். நல்ல வருஷமா அமைந்தது. எல்லாத்துக்கும் காரணம், கடவுள், ரசிகர்கள், என்னை நம்பி படம் கொடுத்த தயாரிப்பாளர்கள், எனக்கு சப்போர்ட் பண்ண நடிகர்கள் எல்லாருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல ஆசைப்படுறேன்.
* நீங்க நடித்த படங்களில் பிடித்த படம், மனசுக்கு நெருக்கமான படம் எந்த படம்?
அரண்மனை. செல்வி ரோல் சின்ன ரோல் தான். ஆனால் ரொம்ப பவர் ரோல். செல்வி இல்லனா, அரண்மனை இல்லைனு சொல்லலாம்.
*ஹீரோயினா பல படங்களில் நடிக்கும் நீங்கள், சின்ன ரோலில் தேர்ந்தெடுத்து நடித்த காரணம்?
எனக்கு முன்னரே தெரியும் செல்வி ரோல் எவ்ளோ ஸ்டார்ங்னு. படத்தில் எவ்ளோ நேரம் வர்றோம்கிறது முக்கியம் இல்லை. என்ன ரோலில் வர்றோம்கிறது தான் முக்கியம். அந்த படத்தை தூக்கி கொண்டு போறதே செல்வி என்ற சின்ன கதாபாத்திரம் தான். படம் பார்த்தவங்க, அந்த கேரக்டரை மறக்க மாட்டாங்க. படத்தில் எல்லாரும் அவங்க முழு உழைப்பையும் கொடுத்து நடிச்சாங்க. நல்ல பேர் கிடைத்தது. எடுத்த சீன் எல்லாத்தையும், ஒரே டேக்கில் முடிச்சேன். அவ்ளோ டச் ரோல் அது.
* கடைசியா ஒரு கேள்வி..லவ் பற்றி சொல்லுங்க...
இப்போ என்னுடைய லவ்... காமிரா பற்றி, என் பட வேலை பற்றி, என் ரசிகர்கள் பற்றி தான். வேறு எந்த கவனமும் இப்போதைக்கு இல்லை.