Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

என்னை வியக்க வைத்த விஜயசேதுபதி! -காயத்ரி பேட்டி

11 செப், 2014 - 10:13 IST
எழுத்தின் அளவு:

முதல் படத்தில் நடித்த போது என்னிடம் எப்படி பழகினாரோ அதேபோல்தான் இப்போதும் பழகி வருகிறார் விஜயசேதுபதி. அவர் நல்ல நடிகர் மட்டுமின்றி நல்ல மனிதரும் கூட. அவருடன் நடித்தபோது பல விசயங்களில் அவரைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன் என்கிறார் காயத்ரி.

தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


* சினிமாவில் நடிகையானது லட்சியமா? விபத்தா?


சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பது லட்சியம் தான். ஓரளவு விவரம் தெரிந்தபோதில் இருந்தே எனக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்போது அதை வீட்டில் சொன்னபோது முதலில் தயங்கினார்கள். பின்னர் நான் பிடிவாதமாக இருந்ததைப் பார்த்து ஓ.கே சொல்லிவிடடார்கள். அதோடு, நீ இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று அவர்கள் எந்த கண்டிசனும் போடவில்லை. ஆனால் நான் அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப கதாபாத்திரங்களையும் செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன். இப்போது வரை எனது சினிமா பயணம் எந்தவித ஆர்ப்பாட்டமோ, அதிரடியோ இல்லாமல் ஒரே சீராக சென்று கொண்டிருக்கிறது.


* சினிமாவில் பாப்புலர் நடிகையாக என்னென்ன முயற்சி எடுக்கிறீர்கள்?


நடிக்கிற படங்களின் வெற்றியும், அதில் நடிக்கிற கதாபாத்திரங்களும் தான் நடிப்பவர்களை பாப்புலராக்கும். ஆனால் நான் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் நான் ஒரு 10 நிமிடம் மட்டும்தான் வருவேன். ஆனால் அந்த கேரக்டர் என்னை பெரிய அளவில் பேச வைத்தது. ஒரே படத்தில் ஒரே சீனில் நடித்து பாப்புலராகி விட்டேன். இப்போது நான் எந்த விழாக்களுக்கு சென்றாலும் அந்த படத்தில் விஜயசேதுபதி என்னைப் பார்த்து சொல்லும், ப்பா ப்பா என்று என்னைப் பார்த்து இளைஞர்கள் கிண்டல் செய்கிறார்கள்.


ஆக, அதுவே என்னை பிரபலமாக்கி விட்டது. அதனால் இப்போது நானும் பாப்புலர் நடிகைதான். அந்த வகையில், நான் நடிக்கிற வேடம் சின்னதாக இருந்தாலும் அது ரீச் ஆகக்கூடியதாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.


* பெரும்பாலும் விஜயசேதுபதியின் படங்களாக நீங்கள் நடிப்பதேன்?


எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில்தான் முதலில் அவருடன் நடித்தேன். அந்த படம் ஹிட் ஆனதால் அடுத்தபடியாக ரம்மி பட வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் அவருக்கு ஜோடியில்லை. இனிகோவுக்குத்தான் ஜோடியாக நடித்தேன். அதையடுத்து இப்போது மெல்லிசை படத்தில் விஜயசேதுபதியுடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். அவர் மாதிரி ஒரு நல்ல நடிகருடன் நடிக்க தொடர்ந்து சான்ஸ் கிடைப்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது.


* மெல்லிசை படத்தில் எந்த மாதிரி ரோலில் நடிக்கிறீர்கள்?


மெல்லிசை படத்தில் விஜயசேதுபதி மியூசிக் டைரக்டராக நடிக்கிறார். நான் ஒரு மியூசிக் டீச்சராக நடிக்கிறேன். மனதை தொடும் அற்புதமான கதை. அதனால் இந்த படத்தில் அதிக இன்வால்மெண்டோடு நடித்து வருகிறேன். இதற்கு முன்பு நான் நடித்துள்ள 18 வயசு, மத்தாப்பூ, ரம்மி படங்களை விட இப்படத்தில் எனக்கு வெயிட்டான வேடம். அதனால் இதுவரை நடிப்பில் நான் பெற்ற அனுபவத்தைக் கொண்டு வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறேன். அதனால் மெல்லிசையில் எனது நடிப்பு மயிலிறகாய் ரசிகர்களின் மனதை வருடும் என்று எதிர்பார்க்கிறேன்.


* விஜயசேதுபதியிடம் பிடித்த விசயம் என்ன?


அதிக தொழில் பக்தி கொண்டவர். தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களை டாமினேஷன் செய்யாமல், மற்றவர்களும் நடிப்பில் ஸ்கோர் பண்ண வேண்டும் என்று வழி விட்டு நடிப்பார். இப்போது அவர் பெரிய ஹீரோவாகி விட்டார். என்ற போதும்,முதல் படத்தில் நடித்தபோது என்னிடம் எப்படி அன்பாக பழகினாரோ அதேபோல்தான் இப்போதும் பழகி வருகிறார். மொத்தத்தில் அவர் நல்ல நடிகர் மட்டுமின்றி நல்ல மனிதரும்கூட. பல விசயங்களில் என்னை வியக்க வைத்திருக்கிறார் விஜயசேதுபதி.


* சமந்தா அஞ்சான் படத்தில் நடித்தது போன்று கவர்ச்சி அவதாரம் எடுப்பீர்களா?


நான் அஞ்சான் படம் பார்க்கவில்லை. அதனால் சமந்தா எந்த மாதிரி அவதாரம் எடுத்திருந்தார் என்பது எனக்கு தெரியவில்லை. மேலும், நான் யாரையும் மனதில் கொண்டு நடிப்பதில்லை. அதோடு எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்றும் நினைப்பதில்லை. அதிலும் கவர்ச்சி விசயத்தில் போட்டி போட்டால் அது ஆபாசத்தில் போய்தான் முடியும். அதனால் அந்த போட்டிக்கு நான் தயாராகயில்லை.


* அப்படியென்றால் கிளாமர் கதைகளில் உருவாகும் படங்கள் உங்களுக்கு பிடிக்காதா?


அப்படியெல்லாம் இல்லை. இந்தியில் பிரியங்கா சோப்ரா சில நடிகைகள் இணைந்து ஒரு படத்தில் நடித்திருந்தார்கள். அது மாடலிங் செய்யும் பெண்கள் சம்பந்தப்பட்ட கதை. அந்த கதைக்கு என்னென்ன தேவையோ அதன்படி நடித்திருந்தார்கள். அதனால் அந்த படம் பேசப்பட்டது. அந்த படத்தை நான் ரொம்பவே ரசித்தேன். கிளாமர் கதாபாத்திரம் என்றாலும், ரசிக்கும்படி இருந்தது.


அந்த வகையில், ஒரு மாடல் சம்பந்தப்பட்ட வேடம் என்கிறபோது அந்த மாடல் அணியும் ஸ்கர்ட், ப்ராக் போன்ற உடைகளை அணிந்து நடித்துதான் ஆக வேண்டும். அப்போதுதான் கதையும், கதாபாத்திரங்களும் நிறைவு பெறும். அதனால் எனக்கும் அதுபோன்ற கதாபாத்திரங்கள் கிடைத்தால்அவர்கள் மாடலிங் செய்யும்போதும் சரி, வீட்டில் இருக்கும்போதும் சரி எந்த மாதிரியான உடையணிந்து இருப்பார்களோ அதேபோல் இயல்புத்தன்மையுடன் நடிப்பேன். ஆனால் அதையே காரணம் காட்டி எல்லை தாண்ட மாட்டேன்.கிளாமருக்கென்று ஒரு அளவு கோல் வைத்திருக்கிறேன்.


* அயிட்டம் பாடல்களுக்கு நடனமாடுவீர்களா?


இப்போதெல்லாம் முன்னணி ஹீரோயினிகள் கூட அந்த மாதிரி பாடல்களில் தோன்றி நடனமாடுகிறார்கள். அதையும் ரசிகர்களும் ரசிக்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி அயிட்டம் பாடல்களுக்கு நடனமாடுவதில் ஆர்வம் இல்லை. அதோடு நான் குடும்பப்பாங்காக நடிப்பதினால்தானோ என்னவோ இதுவரை எந்த இயக்குனரும என்னை அந்த மாதிரி கோணத்தில் பார்த்ததும் இல்லை.


* இன்னமும் நீங்கள் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கவில்லையே?


நான் இதுவரை நடித்த படங்களில் முன்னணி ஹீரோ என்றால் அது விஜயசேதுபதி மட்டும்தான். மற்றபடி எந்த ஹீரோக்களுடனும் இன்னும் நடிக்கவிலலை. ஆனால் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்காக நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனக்கான கதாபாத்திரங்கள் அமையும்போது அந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் காயத்ரி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in