இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
என் முகம் மற்றும் உடல் அமைப்புக்கு கிளாமர் செட்டாகாது. அதனால்தான் நான் அந்த ஏரியா பக்கம் வருவதே இல்லை. மேலும் என்னை எந்த டைரக்டர்களும் கிளாமராக நடிக்குமாறு கேட்டுக்கொண்டதும் இல்லை. அதனால் அந்த விஷப்பரீட்சையில் ஒருநாளும் நான் இறங்கமாட்டேன் என்கிறார் கீர்த்தி ஷெட்டி. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
* இதுவரை என்னென்ன படங்களில் நடித்திருக்கிறீர்கள்?
சகாக்கள்தான் எனது முதல் படம். அதையடுத்து சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்தேன். அந்த படம் வெற்றி பெற்றபோது, டோட்டல் கோலிவுட்டே என்னை தத்தெடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதன்பிறகு எந்த படமும் புக்காகவில்லை. அதனால் எனது சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பிச்சென்று விட்டேன்.
அதன்பிறகு கொண்டான் கொடுத்தான் படத்தில் நடித்தேன். அப்படம் வெற்றி பெறவில்லை. அதனால் எனக்கு புதிய படங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சியில் இருந்தபோதுதான் பாண்டியநாடு, சிநேகாவின் காதலர்கள், மாங்கா, செவிலி போன்ற படங்கள் கிடைத்தன. இதில் சில படங்கள் வருடக்கணக்கில் ஆமை வேகத்தில் வளர்ந்து கொண்டிருப்பதால் நான் நடித்த படங்கள் வருடத்திற்கு ஒன்று திரைக்கு வருவதே அபூர்வமாகி விட்டது. அதனால் அத்வைதா என்றொரு நடிகை இருப்பதையே ரசிகர்கள் மறந்து விட்டார்கள்.
* அதனால்தான் அத்வைதா என்ற பெயரை மாற்றி விட்டீர்களோ?
சினிமாவின் நான் அறிமுகமானதே கீர்த்தி ஷெட்டியாகத்தான். சகாக்கள் என்ற படத்தில் நான் நடித்து வந்தபோது, அதே படத்தில் நடித்த நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி நியூமராலஜி பார்த்து எனது பையரை அத்வைதாவாக மாற்றினார். ஆனால், அந்த பெயர் மாற்றம் எனது சினிமா பயணத்தில் எந்தவித மாற்றத்தையும் கொடுக்கவில்லை. அதனால் இப்போது மீண்டும் கீர்த்தி ஷெட்டியாகியிருக்கிறேன். என்றாலும், நான் அத்வைதாவாகவே சினிமா உலகத்துக்கு அறிமுகம் என்பதால் இந்த புதிய பெயரை சொல்லி யாரும் என்னை அழைப்பதில்லை. அத்வைதா என்றே அழைக்கிறார்கள்.
* சினேகாவின் காதலர்கள் படத்தில் நடித்ததற்கு எந்த மாதிரி ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது?
இந்த படத்தில் டைட்டீல் ரோலில் நடித்ததால் இப்போதுதான் நான் முழுசாக வெளியே வந்திருக்கிறேன். ஒரே படத்தில் மூன்று பேரை நான் காதலிப்பது போன்ற வித்தியாசமான கதை என்பதால் என்ஜாய் பண்ணி நடித்தேன். இந்த மாதிரி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் இப்போது நடிகைகளுக்கு கிடைப்பது அரிது. அந்த வகையில், இந்த படமே என்னை ஓரளவு ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாகவே அறிகிறேன்.
* இதேபோல் நிஜ வாழ்க்கையில் காதலித்த எக்ஸ்பீரியன்ஸ் உள்ளதா?
பெங்களூரில் நான் படித்த காலத்தில் சில மாணவர்கள் எனக்கு லவ் லட்டர் கொடுத்திருக்கிறார்கள். சிலர் லவ்வை நேரடியாகவே ப்ரபோஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் யாராவது பசங்க எங்கிட்ட வந்தாலே நான் தெறித்து ஓடிவிடுவேன். அந்த அளவுக்கு பயப்படுவேன். அதனால் யாரையும் காதலிக்கிற அளவுக்கு அப்போது எனக்கு துணிச்சல் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட நான் இப்போது சினிமாவுக்கு வந்து படத்துக்குப்படம் காதலிப்பது போல் நடிக்கிறேன். அதிலும் சினேகாவின் காதலர்கள் படத்தில் பலரை காதலிக்கிறேன், நடப்பதெல்லாமே எனக்கு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது.
மேலும் அடுத்து நிஜ வாழ்க்கையில் யாரையேனும் காதலித்து திருமணம் செய்வேனா? இல்லையா என்பதை இப்போதே சொல்ல முடியவில்லை. அதேசமயம், காதல் கல்யாணமாக இருந்தால் சந்தோசப்படுவேன்.
* ஹீரோயினாக நடிக்கும்போது பாண்டியநாடு படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தது ஏன்?
அழகர்சாமியின் குதிரை படத்தில் என்னையும் ஒரு நாயகியாக நடிக்க வைத்தவர் சுசீந்திரன். அதனால் விஷால் நடிக்கும பாண்டியநாடு படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது அது சிறிய கேரக்டர் என்றபோதும் மறுக்க முடியவில்லை. ஆனால் அந்த படம் வெற்றி பெற்றதால் என்னை மீண்டும் ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தியது. ஆக நான் நடித்ததில் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதனால் மீண்டும் எனக்கு சான்ஸ் தருமாறு அவரை கேட்டுக்கொண்டு வருகிறேன்.
* இதுவரை எந்த படத்திலும் கிளாமராக நடிக்கவில்லையே?
என் முகம் மற்றும் உடல் அமைப்புக்கு கிளாமர் செட்டாகாது. அதனால்தான் நான் அந்த ஏரியா பக்கம் வருவதே இல்லை. மேலும் என்னை இதுவரை எந்த டைரக்டர்களும் கிளாமராக நடிக்குமாறு கேட்டுக்கொண்டதும் இல்லை. அதனால் நானும் அந்த விஷப்பரீட்சையில் ஒருநாளும் இறங்கமாட்டேன்.
* லட்சுமிமேனன் போன்ற குடும்ப நடிகைகளே முத்தக்காட்சிகளுக்கு மாறி விட்டார்களே. நீங்களும் மாறினால் என்ன?
கதையும், கதாபாத்திரமும் பொருத்தமாக அமையும்போது அதுபற்றி யோசிப்பேன். மேலும், நான் முத்தக்காட்சிக்கு ஒருபோதும் எதிரி அல்ல. சரியான சந்தர்ப்பங்கள் அமைகிறபோது அதைப்பற்றி பரிசீலனை செய்வேன்.
* முன்னணி ஹீரோவுடன் குத்தாட்டமாட வாய்ப்பு வந்தால் ஏற்பீர்களா?
நான் பள்ளி பருவத்திலேயே முறைப்படி கிளாசிக்கல் நடனம் பயின்றவள். அதனால் எந்த மாதிரியான நடனம் என்றாலும் கலக்கி விடுவேன். அதேசமயம் கிளாமருக்கே எனது உடலமைப்பு பொருந்தாது என்கிறபோது குத்துப்பாட்டு எந்த அளவுக்கு ஒர்க்அவுட் ஆகும் என்று சொல்லத் தோன்றவில்லை. மேலும், இப்போதெல்லாம் அயிட்டம் பாடல்களில் ஆடவும் பிரபல நடிகைகளைத்தான் தேடுகிறார்கள். அப்படியிருக்க என்போன்ற பிரபலமில்லாத நடிகைகளுக்கு அந்தமாதிரி வாய்ப்புகள் கிடைப்பதுகூட கடினம்தான்.
* அடுத்த கட்டத்துக்கு செல்ல என்னென்ன முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?
சினேகாவின் காதலர்கள் படத்திற்கு பிறகு சில முக்கிய டைரக்டர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அதில் இரண்டு டைரக்டர்கள் விரைவில் அழைப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆக, இதுவரை மந்தமாக இருந்து வரும் எனது சினிமா மார்க்கெட்டில், இனிமேற்கொண்டு பரபரப்பு கூடும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் கீர்த்தி ஷெட்டி.