'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்திய தேசத்தின் சுதந்திரத்தில் சினிமாவுக்கும் பெரிய பங்கு உண்டு. அதேபோல தமிழ்நாட்டில் மக்களிடையே சுதந்திர வேட்கை தீயை வளர்த்தில் தமிழ் சினிமாவுக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழ் நாட்டில் நடராஜ முதலியார் 1917ல் முதல் சினிமா கம்பெனியை தொடங்கியபோது எடுத்த முதல் படமே காந்தியை பற்றியதுதான். தமிழில் முதல் பேசும் படமான காளிதாஸ் சுதந்திரத்தை பேசியது. "ராட்டினமாம் காந்தி கை பாணம்..." என்ற பாடல் சுதந்திர உணர்வை தூண்டியது.
தீரர் சத்தியமூர்த்தி புராண படங்களில் நடித்துக் கொண்டிருந்த கே.பி.சுந்தராம்பாள், தியாகராஜபாகவதர் போன்றவர்களை தேசபக்தியை ஊட்டுமாறு பணித்தார். அவர்கள் கதர் ஆடைகளை அணிந்து நாட்டில் சுதேசி கொள்கைகளை பரப்பினார்கள். தங்கள் படங்களில் தேசபக்தி பாடல்களை பாடினார்கள்.
இயக்குனர் கே.சுப்பிரமணியம் 1931ம் ஆண்டு தான் இயக்கிய பாலயோகி படத்திலும் 1939ம் ஆண்டு இயக்கிய தியாகபூமி படத்திலும் ஜாதிக் கொடுமையையும் அடிமை விலங்கை உடைக்க வேண்டிய அவசியத்தையும் சொன்னார். இதனால் அவர் சொந்த ஜாதியிலிருந்தே விலக்கி வைக்கப்பட்டார். ஆங்கில அரசு தடை விதித்த தியாகபூமி படத்திற்கு தேசத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். தியாகபூமி படத்தில் இடம்பெற்ற "தேச சேவை செய்ய வாரீர்...:" என்ற பாடல் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பியது.
1935ம் ஆண்டு வெளிவந்த வள்ளி திருமணம் புராண படத்தில் வள்ளியாக நடித்த டி.பி.ராஜலட்சுமி வெள்ளை கொக்குகளை விரட்டுவது போன்ற பாடலை பாடினார். அதன் பொருள் புரியாமல் ஆங்கிலேயர்கள் அனுமதித்தனர். தமிழர்கள் புரிந்து கொண்டு உணர்வு பெற்றனர். இதே படத்தில் முருகன் வள்ளியிடம் சுதேசி வளையல்களை விற்ப்பார். சுதந்திரம் பெற்ற 1947 ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் வெளியிட்ட நாம் இருவர் படத்தில் "ஆடுவோமே பள்ளு பாடுவோமோ..." பாடல் இடம் பெற்றது. அன்றிலிருந்து 7வது மாதத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்து அந்த பாடலை அர்த்தமுள்ளதாக்கியது.
சுதந்திரத்திற்கு பிறகு தமிழர்களிடையே தேசப்பற்றை தக்க வைத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கு பெரிய பங்கு உண்டு. கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், பகத் சிங், திருப்பூர் குமரன், பாரதியார் என அத்தனை சுதந்திர போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தி தேசபக்தி வளர்த்தார்.
அதற்கு பிறகு விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார் ஆகியோர் தேசபக்தியூட்டும் படங்களுக்கு முக்கியத்தும் கொடுத்து நடிக்க ஆரம்பித்தார்கள். இந்திய ராணுவத்துக்கும், இந்திய தேசத்துக்குமான பெருமைகளை இவர்கள் தூக்கிப்பிடித்தார்கள். இயக்குனர் மணிரத்தினத்தின் மும்பை படம் தேசபக்தியின் இன்னொரு பரிமாணத்தை காட்டியது. அர்ஜுனின் ஜெய்ஹிந்த், வந்தேமாதரம், விஜயகாந்தின் வல்லரசு, சரத்குமாரின் ஐ லவ் இந்தியா போன்ற படங்கள் தேசப்பற்றை வளர்த்தன.
சமீபத்தில் வெளிவந்த விஜய் நடித்த துப்பாக்கி இந்திய ராணுத்தின் மரியாதையை உயர்த்திப் பிடித்த படம். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமா தேசப்பற்றுக்கு தன் பங்களிப்பை செய்து வந்திருக்கிறது.
வெல்க சுதந்திரம்... வளர்க பாரத தேசம்... ஜெய்ஹிந்த்!!