தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு காலத்தில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்றே நடிகைகள் இருந்தார்கள். ஜெயமாலினி, விஜயலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என வரிசையாக ஒவ்வோரு காலகட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு குத்தாட்ட நடிகைகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஹீரோயின்கள் தங்கள் கேரக்டரில் மட்டும் அடக்க ஒடுக்கமாக வந்து போவார்கள்.
2000மாவது ஆண்டுக்கு பிறகு படத்தில் நடித்த நடிகைகளே குத்தாட்டம் ஆட ஆரம்பித்தார்கள். அவர்களே கவர்ச்சிக்கும் தங்களை தயார்படுத்தினார்கள். அதனால் அனுராதா மகள் அபிநயஸ்ரீ, பபிதா மகள் லக்ஷா ஆகியோர் கவர்ச்சி ஆட்டத்துக்கு வந்தும் அம்மாக்களை போல சாதிக்க முடியவில்லை.
இப்போது படத்தில் நடிக்கும் ஹீரோயின் குத்தாட்டம் ஆடுவதை விட படத்தில் நடிக்காத இன்னொரு ஹீரோயின் குத்தாட்டம் ஆடுவது பாப்புலராகி உள்ளது. முதல்வன் படத்தில் சுஷ்மிதா சென் சக்கலக பேபிக்கு ஆடி இந்த டிரண்டை துவக்கி வைத்தார். அப்புறம் அது பல்கி பெருக ஆரம்பித்தது.
அதன்பிறகு வரிசையாக ஹீரோயின்கள் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார்கள். சமீபத்தில் விரட்டு படத்தில் ஆண்ட்ரியா ஆடினார், சிங்கம் 2 வில் அஞ்சலி ஆடினார். இப்படி நிறைய இருக்கிறது. இப்போது இனியா ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்துக்கு ஆடியிருக்கிறார். இவர் ஏற்னெவே கதை திரைக்கதை வசனம் இயக்கம், ரெண்டாது படம் ஆகியவற்றில் ஆடியிருக்கிறார்.
திலகர் படத்தில் நீது சந்திரா ஆடியுள்ளார். இவர் யுத்தம் செய், சேட்டை படங்களில் ஆடியவர்தான். எழில் இயக்கும் வெள்ளைக்கார துரை படத்தில் மீனாட்சி ஆடியிருக்கிறார். அஞ்சான் படத்தில் இந்தி நடிகை சித்ரங்கடா சிங் ஆடியிருக்கிறார், பிரசாந்த் நடிக்கும் சாஹசம் படத்தில் நர்கீஸ் பக்ரி ஆடியுள்ளார்.
தமிழ் நாட்டைப்போலவே ஆந்திராவிலும் ஒத்தபாட்டு குத்தாட்டம் பாப்புலராகி உள்ளது. ஸ்ருதி ஹாசன் ஆகடு படத்தில் போட்ட ஆட்டத்தால் ஆந்திராவே ஆடிப்போயிருக்கிறது. சமந்தா நடிக்கும் அல்லடு ஸ்ரீனு படத்தில் தமன்னா ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார். விரைவில் காஜல் அகர்வால் ஒரு பாட்டுக்கு ஆட உள்ளார்.
கோடியை தொட்டும், கோடியை தாண்டியும் சம்பளம் வாங்கும் நடிகைகள் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு காரணம் பணம்தான். ஒரு படத்தில் நடிக்க 40 நாள் கால்ஷீட் கொடுத்தால் ஒரு கோடி சம்பளம் என்றால்... நான்கு நாள் குத்தாட்டதுக்கு கால்ஷீட் கொடுத்தால் குறைந்தது 25 லட்சம் சம்பளம் கிடைக்கும். இந்தி நடிகை நர்கீஸ் பக்கிரிக்கு இந்தியில் சம்பளம் ஒரு கோடி. அவர் சாஹசம் படத்தில் பிரசாந்துடன் ஆடிவிட்டு வாங்கியிருக்கும் சம்பளம் 30 லட்சம் என்கிறார்கள். இத்தனைக்கும் மூன்று நாட்கள்தான் வேலை. அவர் வந்து போன செலவு கணக்கு பத்து லட்சம் தனி.
இப்படி ஹீரோயின்களே குத்தாட்டத்தையும் ஆடிவிடுவதால் குத்தாட்டைத்தையே நம்பி இருக்கும் ரிஷா, மைனா நாகு, சில ஆயிரங்களுக்காக ஆடும் தமிழ்நாடு ஆந்திரா டான்சர்கள், ஓரிரு லட்சங்களுக்கு ஆடும் மும்பை மாடல்கள் வேலை இழந்து நிற்கிறார்கள்.