Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

மேடைகளில் முத்தம் கொடுப்பது அன்பின் வெளிப்பாடுதான்! - நடிகை பூஜா பேட்டி

26 ஜூலை, 2014 - 17:48 IST
எழுத்தின் அளவு:

மேடைகளில் முத்தம் கொடுப்பது ஒன்றும் தவறான கலாச்சாரம் இல்லை. அது ஒரு அன்பின் வெளிப்பாடுதான். நானும் அப்படி நினைத்துதான் என் நண்பர்களுக்கு முத்தம் கொடுக்கிறேன். அதை மற்றவர்கள் தவறாக நினைத்தால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்கிறார் முத்த ஸ்பெசலிஸ்ட் நடிகை பூஜா. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


* தற்போது பூஜாவின் மார்க்கெட் மந்தமாக உள்ளதே?


சினிமாவில் 2003-ல் ஜே ஜே என்ற படத்தில்தான் நான் அறிமுகமானேன். அந்த வகையில், இதுவரை 25 படங்கள் வரை நடித்து விட்டேன். அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், சிங்களம், ஆங்கிலம் என பல மொழி படங்கள் அடங்கும். முக்கியமாக பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தபோது என் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. ஆனால் அதன்பிறகு படிப்படியாக படவாய்ப்புகள் குறைந்தது. அதனால்தான் தமிழில் இருந்து இடம்பெயர்ந்து சிங்கள மொழியில் நடிக்கத் தொடங்கினேன்.


* இலங்கை காதலரை நீங்கள் திருமணம் செய்து விட்டதாக செய்தி பரவியதே அது உண்மையா?


என்னைப்பற்றி காதல், கல்யாணம் என்று வதந்தி பரவுவது வாடிக்கையாகி விட்டது. மேலும், நான் எனது நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வேன். அவர்களை கலாய்ப்பேன். வாடா போடா என்று ஜாலியாக பேசுவேன். எனக்கு அவர்கள் மீது அதிக அன்பு ஏற்படும்போது அவர்களுக்கு முத்தம் கொடுத்து எனது அன்பை வெளிப்படுத்துவேன். இது எனது சுபாவம். ஆனால், அப்படி நான் நண்பர்களுடன் பழகுவதை தவறாக கருதி, காதல், கல்யாணம் என்று அவ்வப்போது ஏதாவது செய்தி பரவி விடுகிறது.


* சில மேடைகளில் ஹீரோக்களுக்கு முத்தம் கொடுத்து பரபரப்பு கூட்டுவது ஏன்?


அதை நான் பரபரப்பு கூட்டுவதற்காக செய்வதில்லை. எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்களாக இருந்தால், என் பாணியில் முத்தம் கொடுப்பேன். இதை நான் எப்போதுமே செய்து வருகிறேன். ஆனால், மீடியாக்கள்தான் அதற்கு கண்,காது,மூக்கு வைத்து கதை ஜோடித்து விடுகிறார்கள். அப்படித்தான் முத்தம் கொடுக்கிற இந்த சிறிய விசயம் பரபரப்பு செய்தியாகி விடுகிறது. இதை மற்றவர்கள் பெருசுபடுத்தாமல் இருந்தால் இதெல்லாம் ஒரு விசயமே இல்லை.


* தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்கள் நண்பர்களாக இருந்தும் உங்களுக்கு படங்கள் இல்லையே?


ஹீரோக்கள் நண்பர்களாக இருப்பதற்கும், எனக்கும் படங்கள் கிடைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு பொருத்தமான கேரக்டர்கள் என்கிறபட்சத்தில் டைரக்டர்கள்தான் என்னை தொடர்பு கொள்வார்கள். மேலும், ஹீரோக்கள் எனக்கு நண்பர்களாக இருந்தபோதும் அவர்கள் எனக்கு சிபாரிசு எதுவும் செய்வதில்லை. நானும் அதை எதிர்பார்த்து பழகுவதில்லை. அப்படி எதிர்பார்த்து நான் பழகியிருந்தால் இப்போது என் கைநிறைய படங்கள் இருக்கும்.


* சிங்களர்களை எதிர்க்கும் தமிழ் சினிமாவினர் சிங்கள பெண்ணான உங்களிடம் எப்படி பழகுகிறார்கள்?


சிங்களர்களை தமிழ் மக்கள் எதிரிகளாக நினைத்தாலும், சிங்கள நடிகையான என்னை யாரும் அப்படி நினைப்பதில்லை. காரணம், நான் கலைத்துறையைச்சேர்ந்தவள். என்னை ஒரு நடிகையாக மட்டுமே பார்க்கிறார்கள். சிங்களர்களை எதிர்க்கும் டைரக்டர் சீமான் அவர் இயக்கிய தம்பி படத்தில் என்னை நடிக்க வைத்தார். அதிலிருந்து என்னிடம் அன்பாக பழகி வருகிறார். என்னை ஒருநாள்கூட அவர் சிங்கள் நாட்டுக்காரி என்ற கோணத்தில் பார்த்ததில்லை. அந்த வகையில் வந்தாரையெல்லாம் வாழவைக்கும் தமிழ்நாடு என்னையும் அரவணைத்துள்ளது.


* கடவுள் பாதி மிருகம் பாதி படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருப்பது ஏன்?


அது சிறிய வேடம் அல்ல, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல். நான் பெங்களூரில் படித்தபோது அந்த படத்தின் தயாரிப்பாளரான ராஜூம் படித்தார். அப்போது ஏற்பட்ட நட்பு காரணமாக என்னை அவர் நடிக்க அழைத்தார். கதைப்படி இன்னொரு நடிகைதான் கதாநாயகி என்றாலும், ஒரு முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். ஒரே நாளில் நடக்கும் அந்த கதையில் இதுவரை நடிக்காத ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறேன்.


மேலும், கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்ற வட்டத்தை விட்டு இப்போது நான் வெளியேறி விட்டேன். வித்தியாசமான வேடங்கள் கிடைத்தாலும் நடிப்பேன். 33 வயதாகி விட்ட நான் இனிமேலும் டூயட் பாடும் நடிகையாகத்தான் நடிப்பேன் எனறு சொல்வது நியாயமில்லை என்பது எனக்கே தெரியும். அதனால் வயதுக்கேற்ற நடிகையாக என்னை மாற்றிக்கொண்டுள்ளேன்.


* அப்படியென்றால் அயிட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் ஆடுவீர்களா?


இதுவரை அப்படி நினைக்கவில்லை. ஆனால், இனிமேல் வாய்ப்பு வந்தால் குத்தாட்டம் ஆடுவேன். காரணம், தற்போது மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் நடிகைகளே அயிட்டம் பாடல்களுக்கு ஆடுகிறார்கள். அதனால், காலத்திற்கேற்ற நடிகையாக என்னை மாற்றிக்கொண்டுள்ளேன். ஆனால் என்ன காரணமோ இதுவரை எந்த டைரக்டர்களும் குத்துப்பாட்டுக்கு ஆடுவது சம்பந்தமாக என்னிடம் கேட்டதே இல்லை. நான் கதாநாயகியாக நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு தடை போட்டு நடித்து வந்ததால், இவர் அதுக்கு செட்டாக மாட்டார் என்நு நினைத்து விட்டார்களோ என்னவோ.


* சில ஹீரோக்களை மேடைகளிலேயே வாடா போடா என்று அழைக்கிறீர்களே?


எனது நண்பர்களை மட்டும்தான் அப்படி அழைப்பேன். என்னைப்பொறுத்தவரை நன்றாக பழகாதவரை மரியாதை கொடுப்பேன் ஆனால் நெருக்கமான நண்பர்களாகி விட்டால், அதன்பிறகு வாடா போடாதான். அதுதான் நட்புக்கு மரியாதை என்று நினைக்கிறேன். அதுமட்டுமின்றி, உள் ஒன்று, புறம் ஒன்று பேசும் பழக்கமும் எனக்கு இல்லை. உள்ளத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் உதட்டிலும் வரும். எனது இந்த குணம் தெரிந்து கொள்ளும் எனது நண்பர்கள், நான் என்ன பேசினாலும் அவதை தவறாகவே நினைப்பதில்லை. அவர்களே அப்படி பேசுவதற்கு எனக்கு சுதந்திரம கொடுத்து விடுகிறார்கள் என்கிறார் பூஜா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in