கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
அட்டகத்தி ஐஸ்வர்யா ராஜேஷ், அதன்பிறகு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் நடித்தவர் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திருடன் போலீஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் முதன்முறையாக மாடர்ன் கெட்டப்பில் நடித்திருக்கும் அவர், இனிமேல் என்மீது விழுந்திருக்கும் கிராமத்து முத்திரையை உடைத்தெறியும் வகையில் அதிரடியான மாடர்ன் கெட்டப்பில் நடிக்கப்போகிறேன் என்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
* திருடன் போலீஸ் படத்தில் எந்த மாதிரியான ரோலில் நடித்திருக்கிறீர்கள்?
இதுவரை நான் 11 படங்களில் நடித்து விட்டேன். 2011ல் அவர்களும் இவர்களும் என்ற படத்தில் அறிமுகமானேன். அதன்பிறகு சட்டப்படி குற்றம், விளையாடவா போன்ற படங்களில் நடித்து வந்தபோதுதான் அட்டகத்தி படவாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் செகண்ட் ஹீரோயின் வேடம் என்றபோதும் எனது நடிப்பு யதார்த்தமாக இருந்ததாக சொல்லித்தான், ரம்மி படத்திற்கு புக் பண்ணினர். அந்த படத்தில நடிக்கும்போதுதான் பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை போன்ற படங்கள் புக்காகின.
அந்த வகையில், இதுவரை நான் நடித்த படங்களில் பெரும்பாலும் கிராமத்து கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்ததால், ஐஸ்வர்யா என்றாலே கிராமத்து வேடத்துக்குத்தான் பொருந்துவார் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் அந்த இமேஜை உடைத்தெறியும் வகையில், திருடன் போலீஸ் படத்தில் மாடர்ன் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். இனி சிட்டி, வில்லேஜ் என இரண்டுவிதமான வேடங்களாக கலந்து நடிப்பேன்.
* மாடர்ன் கெட்டப் என்கிறபோது நயன்தாரா, தமன்னா போன்று கிளாமராக நடிக்க வேண்டியதிருக்குமே?
நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கதையும், டைரக்டர்களும் தான் முடிவு செய்ய வேண்டும். இன்றைக்கு சினிமாவில் ஹீரோயின்களுக்கிடையே பலத்த போட்டி நடக்கிறது. அதனால் அந்த போட்டியை சமாளிக்க டைரக்டர்களின் நடிகையாக இருக்க வேண்டும். அவர்கள் எப்படி எப்படி நடிக்கச் சொல்கிறார்களோ அப்படி நடிக்க வேண்டும். அதனால், நான் சினிமாவுக்கு வரும்போதே எந்த மாதிரியான கதையாக இருந்தாலும் அதற்கேற்ப நடிக்க முடிவு செய்து விட்டுத்தான் வந்தேன்.
அந்தவகையில், நயன்தாரா, தமன்னா நடித்தது போன்று என்னாலும் நடிக்க முடியும். கிளாமராக நடிப்பதெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லை. ஆனால், பர்பாமென்ஸ் ரீதியாக சைன் பண்ண வேண்டும் என்பதுதான் எனது நோக்கமே. அதனால் கிளாமராக நடித்தாலும் என் நடிப்பாற்றலை வெளியே கொண்டு வரும் கதைகளுக்குத்தான் இப்போது முதலிடம் கொடுக்கிறேன்.
* உங்களது நடிப்பை சிலர் ரேவதிக்கு இணையாக பேசுகிறார்களே. அது சரிதானா?
ரேவதி ரொம்ப பெரிய நடிகை. நான் சின்ன வயதில் இருந்தபோது அவர் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தார். அப்போதெல்லாம் அவரது நடிப்பை வெகுவாக ரசித்திருக்கிறேன். ஆனால், அவர் மாதிரி ஒரு நடிகையாக வர வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. இப்போது எனது நடிப்பைப்பார்த்து விட்டு அப்படி சொல்கிறார்கள். அது எனக்கு பெரிய சந்தோசம். ஏன் விருது கிடைத்தது போன்று உணர்ந்தேன். அதற்காக ரேவதி போன்று ஹோம்லியாக மட்டும்தான் நடிப்பேன் என்றில்லை. இன்றைய காலகட்டத்திற்கேற்ற நடிகையாக நடிப்பேன். மேலும் படத்துக்குப்படம் எனது திறமையை மெருகேற்றிக்கொள்ளும் கதைகள், கதாபாத்திரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன்.
* மீண்டும் விஜயசேதுபதியுடன் நடிப்பது பற்றி எப்படி உணருகிறீர்கள்?
அவருடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் நடித்த நான் இப்போது இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் நடிக்கிறேன். சீனுராமசாமி இயக்கும் இந்த படத்திலும் எனக்கு அழுத்தமான வேடம். அதிலும் விஜயசேதுபதி எனக்கு ஜோடி என்றால் எங்களுக்கிடையே நடிப்பு போட்டி நடக்கும். அவர் எந்த மாதிரியான காட்சிகளிலும் எளிதாக நடிக்கக்கூடியவர் என்பதால், அவருக்கு இணையாக நானும் நடிக்க வேண்டும் என்பதால் முன்பே ரிகர்சல் பார்த்துக்கொண்டு நடிப்பேன். அந்த வகையில், மூன்று படங்களில் அவருடன் நடித்து விட்ட நான் நடிப்பிலும் இப்போது நல்ல தேர்ச்சி அடைந்து விட்டதாக நினைக்கிறேன்.
* விஜயசேதுபதி ஒரு பாட்டுக்கு குத்தாட்டமாடுவது போன்று வாய்ப்பு வந்தால் நீங்களும் ஆடுவீர்களா?
விஜயசேதுபதி வித்தியாசமானவர். அதனால்தான் ஹீரோவாக இல்லாமல் எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்கிறார். அதனால்தான் திருடன் போலீஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். எந்த நடிகர்களும் செய்யாததை அவர் செய்வதால் ஒரு புதுமையாக உள்ளது. ஆனால் நான் வளர்ந்து வரும் நேரத்தில் அப்படி நடித்தால் அதன்பிறகு குத்தாட்ட நடிகையாக்கி விடுவார்கள். அதனால் இப்போதைக்கு ஒரு பாட்டுக்கு நடனமாடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
* தற்போதைய கோலிவுட் நடிகைகளில் யாரை உங்களது போட்டி நடிகையாக கருதுகிறீர்கள்?
இப்போதெல்லாம் போட்டி என்று எதுவுமில்லை. நடிக்கிற படம் ஓட வேண்டும். ஓடினால் படமும், நடித்தவர்களின் நடிப்பும் வெளிச்சத்துக்கு வரும். அடுத்தடுத்து படங்கள் புக்காகும். அதனால் எனக்கு கிடைக்கிற படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன். மற்றபடி நடிப்பதில் முந்தைய படத்தை விட அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி நினைப்பதினால்தான் எனது நடிப்பு படத்துக்குப்படம் பேசப்பட்டு வருகிறது. அதோடு அடுத்தடுத்து புதிய படங்களுக்கும் பல டைரக்டர்கள் கதை சொல்லி வருகின்றனர்.
* படத்துக்குப்படம் ஸ்லிம்மாகிக்கொண்டு வருகிறீர்களே எப்படி?
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே நான் டான்சர். டி.வியில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தேன். அதைப்பார்த்து விட்டுதான் சினிமாவில் நடிக்க சான்ஸ் வந்தது. ஆனபோதும், உடம்பு வெயிட் போட்டுதான் இருந்தேன். அதனால் நடிக்க வந்த பிறகு புல் டயட்ஸ் இருந்து தினமும் ஜிம்மிற்கு சென்றுதான் உடல் எடையை குறைத்தேன். அதனால் இப்போது அதை தொடர்ந்து கடைபிடித்தும் வருகிறேன். அதனால்தான் திரையில் ஸ்லிம்மாக தெரிகிறேன் இதை இப்படியே மெயின்டெயின் பண்ண வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
* ஆனால் நீங்கள் நடிக்கும் படங்களில் பெரிய அளவில் நடன திறமையை வெளிப்படுத்தவில்லையே?
அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை என்பதுதான் காரணம். ஏற்கனவே டான்சரான நான், சினிமாவில் எந்த அளவுக்கு அதிரடியான பாடல்கள் கிடைத்தாலும் புகுந்து விளையாட தயாராக இருக்கிறேன். ஆனால் என்ன நேரமோ, எனக்கு கிடைப்பதெல்லாமே மெலோடியான பாடல்களாக அமைகிறது. அதனால் சின்னச்சின்ன டான்ஸ் மூவ்மெண்டுகள் கொடுத்துதான் நடிக்க வேண்டியதாகி விட்டது. ஆனால், எதிர்காலத்தில் நான் எதிர்பார்க்கும் அதிரடியான பாடல்கள் கிடைக்கும்போது, பர்பாமென்ஸ் மட்டுமின்றி நடனத்திலும் சிறப்பான நடிகை என்று பெயரெடுக்கும் அளவுக்கு அதிரடி நடனத்தை வெளிப்படுத்துவேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.