பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
எதைப்பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டேன், நான் செய்யும் வேலையை முழு நிறைவாக செய்து கொடுப்பேன் என்கிறார் களவாணி விமல். தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பிரத்யேக பேட்டி இதோ...
* பசங்க, களவாணி, வாகை சூடவாவுக்கு பிறகு சொல்லிக்கொள்கிற மாதிரி உங்களுக்கு படங்கள் அமையவில்லையே?
எந்தவொரு படமாக இருந்தாலும் வெற்றி பெறுவதற்கான அம்சங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்துதான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், பல சமயங்களில் வெற்றி கைநழுவிப்போய் விடுகிறது. அதனால் அப்படி நம்பி நடித்த படங்களும் டம்மியாகி விடுவதோடு, நம்மையும் டம்மியாக்கி விடுகின்றன. அதேசமயம், தேசிங்குராஜாவுக்குப்பிறகு நான் நடித்த ஜன்னல் ஓரமும் நல்ல படம்தான்.
* ஆனால், ஜன்னல் ஓரம் வெற்றி பெறவில்லையே?
அந்த படத்தை ரொம்ப எதிர்பார்த்தேன். மலையாளத்தில் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் என்பதால் அதே அளவுக்கு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், தமிழ் ரசிகர்கள் அதற்கு பெரிய வரவேற்பு கொடுக்காதது ஏமாற்றமே.ஆனபோதும், வெற்றி தோல்வியை நினைத்து பெரிதாக அலட்டிக்கொள்ளாத நான், நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் சிறப்பாக வரவேண்டும் என்பதை மனதில் கொண்டே நடித்து வருகிறேன்.
* ஜன்னல் ஓரம் படத்திற்காக 85 லட்சத்தை விட்டுக்கொடுத்தீர்களாமே?
அந்த படத்தை ரிலீஸ் செய்கிற நேரத்தில் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் பிரச்னை வந்தது. நான் சம்பளத்தை விட்டுக்கொடுத்தால்தான் அவரால் படத்தை வெளியிட முடியும் என்கிற கட்டாயம். அதனால் நானே முன்வந்து என் சம்பளம் 85 லட்சத்தை விட்டுக்கொடுத்தேன். அதேசமயம் படம் வெளியாகி வெற்றியை பரிசாக கொடுக்கும் என்று எதிர்பார்த்தேன. ஆனால் ஏமாற்றி விட்டது.
* பிந்துமாதவியுடன் தொடர்ந்து நடிக்க நீங்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறதே?
படங்களின் கதையை செலக்ட் பண்ணுவதோடு சரி. மற்றபடி அந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்றெல்லாம் நான் கேட்பதே இல்லை. அது என் வேலையும் இல்லை. எனக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா படங்களில் பிந்துமாதவி நடித்தார் என்றால் அது அப்படங்களின் டைரக்டர்கள் செய்த முடிவு. அந்த படங்களில் அவர் நடித்ததற்கும் எனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. மேலும், தொடர்ந்து அவர் என்னுடன் நடிப்பதை நான் விரும்பவில்லை என்று நினைப்பதும் தவறுதான். டைரக்டர்கள முடிவெடுக்கிற பட்சத்தில் எந்த நடிகை என்றாலும் நடிப்பேன்.
* சற்குணம் இயக்கத்தில் நீங்கள் நடித்த களவாணி, வாகை சூடவா படங்கள் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கடுத்து தனுஷை வைத்து அவர் இயக்கிய நய்யாண்டி தோல்வியடைந்து விட்டதே?
நய்யாண்டியும் நல்ல படம்தான். தனுஷ் சார் ரொம்ப நல்ல நடிகர். ஆனால் அந்த படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டது. சினிமாவில் இப்படித்தான் எந்த படம் ஓடும். எது ஓடாது என்பதை கணிக்கவே முடியவில்லை. என் நண்பர் சற்குணம் இயக்கிய அந்த படம் தோல்வியடைந்ததில் எனக்கும் வருத்தமே. இருப்பினும், இந்த தோல்வியை அவர் தொடர விடமாட்டார் என்று நம்புகிறேன்.
* சமீபகாலமாய் மல்டி ஹீரோ கதைகளில் அதிகமாக நடிக்கிறீர்களே?
அந்த மாதிரி படங்கள் அதிகமாக வருவதே ஆரோக்யமான விசயம்தானே. ஒவ்வொரு ஹீரோக்களுக்கென்றும் ரசிகர் வட்டம் உள்ளது. அப்படி ஒரே படத்தில் பல நடிகர்கள் நடிக்கிறபோது அந்த நடிகர்கள் சம்பந்தப்பட்ட ரிசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். இதனால் படத்தின் கலெக்சன் அதிகரிக்குமே. அதோடு, ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மை ஏற்பட்டு, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தவும் அது வழி வகுக்குமே.
* புலிவால் படத்தில் உங்களுடன் இணைந்து நடித்துள்ள பிரசன்னா உங்களிடமிருந்து நிறைய நடிப்பு கற்றுக்கொண்டதாக கூறியிருக்கிறாரே?
பிரசன்னா என்னை விட சீனியர். இருப்பினும், என்னிடமிருந்து அவர் நடிப்பு கற்றுக்கொண்டதாக சொல்கிறார். ஆனால், அப்படத்தில் நடித்தபோது நானும் அவரிடமிருந்து பல விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். அது அவருக்குத் தெரியாது. மேலும், எதையும் சரியாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பிரசன்னாவுடன் புலிவால் படத்தில் ஒரு சண்டை காட்சியில் இயல்பாக வர வேண்டும் என்பதற்காக நிஜமாலுமே மாறி மாறி அடித்துக்கொண்டோம். அப்போதுதான் அவரிடமிருந்து தொழில் நேர்த்தியை புரிந்து கொண்டேன். என்னைக்கேட்டால், என்னைவிட சிறந்த நடிகராக பிரசன்னாவைதான் சொல்வேன்.
* விஜயசேதுபதி பாணியில் கதையின் நாயகனாக நடிப்பீர்களா?
கட்டாயம் நடிப்பேன். விஜயசேதுபதியும் என்னைப்போலவே கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர்தான். நானும், விதார்த்தும் அங்கு நடிப்பு பயிற்சி எடுத்து வந்தபோது, விஜயசேதுபதி அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது நாங்கள் 3 பேருமே நண்பர்களாக இருந்தோம். ஆனால் எங்களுக்குப்பிறகு நடிகராக வந்த விஜயசேதுபதி வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கி விட்டார். ரொம்ப சந்தோசமாக உள்ளது. ஒரு நண்பனாக அவரை வாழ்த்துகிறேன்.
* மினிமம் கியாரண்டி ஹீரோ பட்டியலில் இருந்து எப்போது விடுபடுவீர்கள்?
மினிமம் கியாரண்டி என்பது நானாக முடிவெடுத்தது அல்ல. எனக்கு வரும் கதைகளைப்பொறுத்து அது உருவானது. மேலும், மெகா பட்ஜெட் என்பதை விட மினிமம் கியாரண்டி கதைகள்தான் தடுக்கி விழுந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். அதனால், என்னைப்பொறுத்தவரை மினிமம் கியாரண்டி ஹீரோவாக இருப்பதையே விரும்புகிறேன். இப்படி இருப்பதால் நான் நடிக்கிற படம் தோல்வியடைந்தாலும் அந்த தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்படாது. விழுந்தாலும் எளிதில் எழுந்து விடலாம். அதனால் அப்படி ஒரு முத்திரை விழுந்தாலும் அதைப்பற்றி கவலைப்படவில்லை என்கிறார் விமல்.