இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரே மாதிரி படம் எடுத்தால் மக்களுக்கு போரடிச்சிடும்னு நினைச்சு. சில டைரக்டர்கள் மாற்றி யோசிச்சு சில படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சில சாதனை படைக்கலாம். சில கமெடியா போகலாம். அந்த படங்களோட ஒரு மினி டிரைய்லரை பார்க்கலாம்...
என்ன சத்தம் இந்த நேரம்
இந்தப் படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகள் நடிக்கிறாங்க. நான்கு பேருக்கும் 8வயது. அதிதி, அக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி என்பது அந்த சகோதரிகளின் பெயர். இவுங்களோட அப்பா அம்மாவா டைரக்டர் ஜெயம் ராஜாவும், காதல் மன்னன் ஹீரோயின் மானுவும் நடிக்கிறாங்க. நிதின் சத்யா, மாளவிகா, இமான் அண்ணாச்சி, வையாபுரியும் நடிக்கிறாங்க. சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக இருந்த குரு ரமேஷ் டைரக்ட் செய்கிறார். ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகளை பெற்றவர்களின் சந்தோஷமும் சங்கடமும்தான் படத்தோட கதையாம்.
சிக்கிக்கு சிக்கிக்கிச்சு
படத்தின் தலைப்பை பார்த்துட்டு மிரண்டுடாதீங்க. அதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கு. சிதம்பரங்ற ஹீரோவோட பெயரை பிரண்ட்சு எல்லாம் சிக்கின்னு கூப்பிடுவாங்க. அவரிடம் ஒரு பெண் சிக்கிக் கொள்வார். அதைத்தான் சிக்கிக்கு சிக்கிக்கிச்சுன்னு டைட்டிலா வச்சிருக்காங்க. சரி இந்தப் படத்துல என்ன மாத்தி யோசிச்சிருக்காங்க தெரியுமா. முழு படத்தையும் ஒரே ரெயில்ல ஷூட் பண்ணியிருக்காங்க. இதுக்கு முன்னாடி இப்படி சில படங்கள் வந்திருந்தாலும் தமிழ்ல இதுதான் புதுசு. மிதுன், மிருதுளா நடிக்கிறாங்க. நாளை இயக்குனர்கள் போட்டியில ஜெயிச்ச என்.ராஜ்குமார் டைரக்ட் செய்கிறார். ரெயில் சினேகிதத்துல வர்ற காதல் டிரையின் ஊர் போய் சேர்றதுக்குள்ள சக்சஸ் ஆகுதாங்குறது படத்தோட ஸ்டோரி. கொஞ்சம் கமர்ஷியலா ரெடியாகுற படம்.
என் உயிர் என் கையில்
சினிமாவுல ஜெயிக்குறதுக்கு ரொம்ப நாளா போராடிக்கிட்டிருக்குற ஜெய் ஆகாஷின் புது முயற்சி இந்தப் படம். அவர் ஒருத்தர் மட்டும்தான் படத்துல நடிச்சிருக்கார். ஒரு சவப்பெட்டிக்குள் உயிருடன் மாட்டிக் கொண்டு தவிக்கும் ஹாலிவுட் படம் வந்த மாதிரி. இதுல இடிஞ்ச கட்டிட இடிபாட்டுக்குள்ள சிக்கிக்குற ஒருத்தர் எப்படி வெளியில வர்றாருங்ற கதை. அவரே டைரக்ட் செய்திருக்கிறார்.
கவிதை
இந்தப் படமும் என் உயிர் என் கையில் மாதிரியான படம்தான். ஊமை விழிகள் படத்தை டைரக்ட் செய்த ஆர்.அரவிந்தராஜ் தன் மகள் கீர்த்தி மட்டும் நடிக்க இந்தப் படத்தை எடுத்து முடிச்சிட்டார். அதாவது சுனாமி வந்தபோது ஒரு பெண், ஒரு கவிழ்ந்த போட்டுக்குள் மாட்டிக்கொண்டு நான்கு நாளைக்கு பிறகு மீட்கப்படுகிறாள். நாகப்பட்டினத்தில் நடந்த இந்த நிஜ சம்பவத்தை வைத்து அந்த பெண் நான்கு நாட்கள் அந்த படகுக்குள் எப்படி கஷ்டங்களை அனுபவித்திருப்பாள்ங்றதை படமா எடுத்திருக்கிறார்.
ஒண்
இது ரொம்பவே வித்தியாசமான படம். உலகத்திலேயே முதல் முயற்சின்னு சொல்றாங்க. அதாவது ஒன்மேன் ஷோ. வெங்கயாம் படம் இயக்கிய சங்ககிரி ராஜ்குமாரின் படம். நடிகர், டைரக்டர், கேமராமேன், தயாரிப்பாளர், லைட்மேன், இசையமைப்பாளர், பாடகர் எல்லாமே அவர்தான். இரண்டாவது நபருக்கு வேலையே கொடுக்காமல் எடுக்குறார். படம் இண்டர்நேஷனல் லெவலுக்கு போகணுங்றதுக்காக ஆங்கிலத்தில் எடுக்கிறார். நடுக்காட்டுக்குள்ள மாட்டிக்கிற ஒருத்தன் தவிக்குற தவிப்புதான் படத்தோட ஸ்டோரி.
அகடம்
இந்தப் படத்துல என்ன விஷேம்னா படம் கட்டே இல்லாமல் ஒரே ஷாட்ல எடுத்திருக்காங்க. ஒரு மர்ம வீட்டுக்குள் நாலைஞ்சு பேர் மாட்டிக்கிறாங்க. அடுத்தடுத்து கொலை நடக்குது. இப்படி போகும் திகில் கதை. இந்த படத்துக்கு கின்னஸ் வேர்ட்ல் ரிக்கார்ட் சர்டிபிக்கேட் கிடைச்சிருக்கு.
இன்னும் என்னென்ன மாதிரி மாத்தியோசிக்க போறாங்களோ தெரியலை. வெறும் விருது, பாராட்டுன்னு மட்டும் கடந்து போயிடாம பணம்போட்ட தயாரிப்பாளருக்கு லாபம் கிடைச்சுதுன்னா சந்தோஷம்தான்.