பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
கோலிவுட்டின் லேட்டஸ்ட் டிரண்ட் என்ன தெரியுமா?. எல்லா ஹீரோக்களுக்கும் மைக் பிடித்து பாட ஆசை வந்திருப்பதுதான். தனுஷ் பாடிய கொலவெறி அடைந்த ரீச்தான், நடிகர்களை இந்த மைக் வெறிக்கு ஆளாக்கி இருக்கிறது. தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா காலத்திலிருந்தே நடிகர்கள் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் பாடும் திறன்பெற்றிருந்ததாலேயே ஹீரோவானவர்கள். கமல் தன்னை ஒரு பாடகராகவும் நிரூபித்தவர்.
ஆனால் இப்போது அப்படியில்லை. பாடும் திறமையோ குரல்வளமோ இல்லாமல் அவர் பாடுகிறாரே நான் பாடக்கூடாதா என்ற ஈகோவில் மைக் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிம்பு அடிக்கடி பாடுவதாலேயே தனுஷ் மைக் பிடித்தார். இதற்கு முன்பு அவர் பல பாடல்களை பாடி இருந்தாலும் கொலவெறிதான் அமெரிக்க பிரசிடெண்ட் காது வரைக்கும் ரீச் ஆச்சு. விக்ரம் கந்தசாமி, தெய்வதிருமகள் உள்ளிட்ட சில படங்களில் பாடியிருக்கிறார்.
விஜய் அவ்வப்போது பாடி அதை ஹிட்டாக்கி விட்டு ஒதுங்குவார். பிறகு திடீரென்று பாட ஆரம்பிப்பார். இப்போது தனது ஒவ்வொரு படத்திலும் பாட ஆரம்பித்திருக்கிறார். விஜய் பாடும்போது அவரது சித்தி மகன் விக்ராந்த் பாடக்கூடாதா அவரும் தற்போது நடித்து வரும் பிறவி என்ற படத்தில் ஒரு பாடலைப் பாடுகிறார்.
ஆளாளுக்கு மைக் பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். படத்திற்கு இசை அமைக்கும் இசை அமைப்பாளருக்கு டார்ச்சர் கொடுத்து ஒரு பாடலை பாடிவிடுகிறார்கள். விமல் சென்னையில் ஒரு நாள் என்ற படத்தில் பாட ஆரம்பித்தார் அதன் பிறகு கலகலப்பு படம் என்று தொடர்ச்சியாக தனது சங்கீத பணியை தொடங்கிவிட்டார். போட்டியாளர் விமலே பாடும்போது சிவகார்த்திகேயன் சும்மா இருப்பாரா நாலு படமே நடித்திருக்கும் நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் பாடிவிட்டார். அடுத்தும் பாடி படுத்த இருக்கிறார்.
பிரசன்னா இசை அமைப்பாளரை டார்ச்சர் பண்ணி கல்யாண சமையல் சாதம் படத்துல பாடி ஆசையை தீர்த்துக் கொண்டார். அட அவ்வளவு ஏன் பவர்ஸ்டார் சீனிவாசன்கூட சுட்ட பழமும் சுடாத பழமும் என்ற படத்தில் பாடிவிட்டார். தம்பி ராமையாக உ என்ற படத்தில் ஒரு பாட்டை பாடி இசைக்கு தன்னை அர்ப்பணித்து விட்டார்.
ஹீரோயின்களை பொறுத்தவரை ஆண்ட்ரியா, ஸ்ருதி. வசுந்தரா தாஸ் ஆகியோர் புரபஷனல் சிங்கர்ஸ். இவர்கள் தவிர மலையாள நடிகைகள் காவ்யா மாதவன், மம்தா அடிக்கடி பாடுவார்கள். இப்போது அந்த லிஸ்டில் நித்யா மேனனும் சேர்ந்திருக்கிறார்.
பாடுறதுக்குத்தான் தனியா சிங்கர்ஸ் இருக்காங்களே நீங்கவேற பாடி எங்களை படுத்தணுமா? என்று கேட்டால். "சிங்கர்செல்லாம் நடிக்க வரும்போது நாங்க பாடக்கூடாதா" என்று திருப்பிக் கேட்கிறார்கள்.
அதுசரி... அதை கேட்குற ஆடியன்சோட நிலையை மட்டும் யாரும் நினைச்சு பார்க்க மாட்டேங்குறாங்க.