தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. நடிகர் விஜய்யால் சின்ன அசின் என்று அழைக்கப்பட்டவர் தொடர்ந்து கந்தக்கோட்டை, துரோகி, ஆடு புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது கரு.பழனியப்பனின் ஜன்னல் ஓரம் உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* அப்பப்ப வர்றிங்க போறிங்க; திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க முடியாதது ஏன்?
நான், சினிமாவுக்கு வந்து, ஏழு ஆண்டுகள் ஆகி விட்டன. ஒரு சில படங்களில் நடித்ததுடன்,
நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு, டான்ஸ் பக்கம் போய் விடலாம் என, நினைத்தேன். சினிமா என்னை, ஈர்த்து விட்டது. இப்போது, தமிழில் பிசியாகி விட்டேன். நிலையான நடிகைகளின்
வரிசையில், நானும் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
* பெரிய ஹீரோக்களுடன் நடிக்காதது ஏன்?
எனக்கே ஒன்றும் புரியவில்லை. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. எந்த ஆதரவும் இல்லாமல், சினிமாவுக்கு வந்தேன். முடிந்தவரை, நல்ல படங்களில் நடிக்க வேண்டும். அதற்கு, இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதில், அவசரம் காட்டவில்லை.
* தமிழில் முதலில் நடித்த அனுபவம் குறித்து?
"முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் தான், முதலில் தமிழில் அறிமுகமானேன். மொழி புரியாததால், நடிக்க ரொம்பவே சிரமப்பட்டேன். சில காட்சிகள், ஏழு டேக் வரை போயின. இதை நினைத்து, அழுதிருக்கிறேன். ஆனால், இயக்குனர் திருமுருகன் தான், எனக்கு ஆறுதல் கூறி, நடிக்க வைத்தார்.
* நடித்ததில் பிடித்தது?
"முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தை, அடிக்கடி போட்டு பார்ப்பேன். எனக்கு, ரொம்ப பிடித்த படம் அது. எந்தெந்த காட்சிகளில், நன்றாக நடிக்கவில்லை என்பதை பார்த்து வைத்திருக்கிறேன். இனி, படங்களில் நடிக்கும்போது, அந்த குறை வராமல் பார்த்து கொள்வேன்.
* எப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?
சின்ன வயதிலிருந்து, டான்ஸ் கற்றிருக்கிறேன். நடனத்துக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது, என் ஆசை. ஹீரோயின்களை பொறுத்தவரை, ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் தான், பீல்டில் நிக்க முடியும். ஆனால், ரேவதி,ஷோபனா, சுகாசினி போன்றவர்கள், பல ஆண்டுகளுக்கு பேசப்பட்டனர். அதற்கு, அவர்கள் நடித்த கேரக்டர்கள் தான், காரணம். அதேபோன்ற கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன்.
* சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தா...?
நிஜமா சொல்றேன், டான்ஸ் டீச்சர் ஆகியிருப்பேன். என் கனவே அது தான். என்றாவது ஒரு நாள் நிச்சயம் நான் டான்ஸ் டீச்சர் ஆவேன்.
* ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
தமிழ் சினிமா எனக்கு தூரத்தில் இருக்கிற மாதிரி தோணுது. இப்ப ஷூட்டிங் எல்லாம் ஐதரபாத்தில் தான். சென்னை மக்கள், இங்குள்ள சாப்பாடு எல்லாத்தையும் ரொம்ப மிஸ் பண்றேன். கூடிய சீக்கிரமே சென்னைக்கு ஷிப்ட் ஆயிடுவேன். என் படங்களுக்கு ரசிகர்களாகிய உங்களது சப்போர்ட் ரொம்ப வேண்டும். மைனஸா இருந்தால் மன்னிச்சிடுங்க, சீக்கிரம் ப்ளஸ் ஆக்கிடுறேன். நிறைய சாலஞ்சிங் ரோல் பண்ணனும், நல்ல கதையில் நடிக்கணும், எல்லாத்துக்கும் மேல உங்க அன்பு வேண்டும்.