Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள்

08 நவ, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:

இந்த ஆண்டு இதுவரை வந்துள்ள 106 படங்களில், 20 படங்கள் மட்டுமே லாபத்தை ஈட்டியுள்ளன. எட்டுப் படங்கள் நஷ்டமில்லாமல் தயாரிப்பாளர்களை காப்பாற்றியுள்ளது. 450 கோடி ரூபாய் முதலீட்டில் 102 படங்கள் தயாராகி வருகின்றன. இதில், 68 படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகின்றன. பல தயாரிப்பாளர்கள் சினிமாவில் நஷ்டமடைந்து ஒதுங்கும் நிலையில், புதிய தயாரிப்பாளர்கள் 450 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். கறுப்பு பணம் வைத்திருப்போர் திரையுலகத்தில் புகுந்து விட்டனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திரைப்படத் தயாரிப்பு செலவுகள் அதிகரித்து விட்டது. நடிகர், நடிகைகள் சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்து விட்டது. திருட்டு "விசிடி' புழக் கம் அதிகமாகி விட்டதால், தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோரின் எண்ணிக் கை குறைந்து விட்டது.படங்கள் நினைத்த மாதிரி ஓடவில்லை என்று கூறி பிரபல தயாரிப்பாளர்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி வருகின்றனர். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தயாரிப் பாளர்கள், தற்போது களமிறங்கியுள்ளனர். புதுப்பட பூஜை தினம், தினம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 31 படங்கள் பூஜை போடப் பட்டுள்ளன.இதில், பல தயாரிப்பாளர்கள் கறுப்பு பணத்தை சினிமாவில் முதலீடு செய்து, கணக்கில் கொண்டு வந்து விடுகின்றனர்.

திரையுலகில் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து நஷ்டமடைந்தாலும் மாறாக வினியோக உரிமை, ஆடியோ உரிமை,"டிவி" சேனல்களுக்கு வழங்கப்படும் உரிமை என வருவாய் கணக்கு காண்பித்து கறுப்பு பணத்தை இந்த வழியில் வெள்ளை பணமாக மாற்றும் முயற்சியும் நடக்கிறது. முன்னணி நடிகர்கள் சிலர் பாதிப் பணத்தை கறுப்பு பணமாகவும், பாதியை வெள்ளையாகவும் வாங்குகின்றனர். மேலும், சில நடிகர்கள் படத்தில் நடித்துக் கொடுப்பதற்கு ஈடாக பினாமி பெயரில் சொத் துக் களை வாங்கிக் கொள்கின்றனர்.சில கோடிகளில் தயாரிக்கப்படும் படத்திற்கு பல கோடிகள் லாபம் வருவதாக கணக்கு காட்டுகின்றனர். இவ்வாறு கறுப்பு பணம் வெள்ளையாகி அதற்கு பிறகு முறையாக வரிக் கணக்கு காட்டப்படுகிறது.

சினிமா சம்பந்தப்பட்டவர்களில் பலர் அசையா சொத்துக்களாக வாங்கிப்போட்டு, பிறகு வேண்டுமென்றே பிரம்மாண்டமாக படம் தயாரித்து கையை சுட்டுக் கொள்வதாகவும், கணக்கு காண்பிக்கின்றனர். இன்னும் சிலர் வேறு,வேறு பெயர்களில் தயாரிப்பு கம்பெனிகளை துவங்கி அவர்களாகவே மூடுவிழா நடத்தி விடுகின்றனர். இப்படி செய்வதால் அதிகளவு வருமான வரி கட்டுவதிலிருந்தும் தப்பித்துக் கொள்கின்றனர்.சிலர் குடும்ப உறுப்பினர்களை கொண்டு அறக்கட்டளை மற்றும் சமூக சேவை செய்வதாக கூறி வரிச் சலுகையும் பெற்று விடும் நிலையும் உள்ளது. இப்படி திரைத்தொழிலில் பம்மாத்து வேலைக்கு பல வழிகள் சாதகமாக உள்ளதால், சினிமாவின் மீது கறுப்பு பணப் பேர்வழிகளின் பார்வை பதிந்துள்ளதால் தான் படத் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

புதுப்படத்தை கட்டுப்பாடின்றி அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டு பத்து நாட்கள் ஓடினாலே போதும்,போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்று கணக்கு போட்டு, கட்டுப்பாடின்றி கூட்டுக் கொள்ளை அடிக்கும் விதமாக இஷ்டத்திற்கு டிக்கெட் விலையை உயர்த்தி விடும் நிலையும் தொடர்கிறது.சினிமாவில் புரளும் கோடிக்கணக்கான கறுப்பு பணத்தை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களும் கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றனர்.அந்தக் காலத்தில் ஒரு சினிமா தயாரிப்பாளர், இயக்குனர், வினியோகஸ்தர் என திரைத்துறையைச் சார்ந்த எவராவது ஒருவரை நம்பி பல குடும்பங்கள் பிழைத்தன. இன்று, கறுப்பு பண கலாசாரத்தால் சினிமா தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் கூட கறாராக இருந்து கொள்ளும் நிலை உள்ளது. நலிந்தவர்களுக்கு உதவும் எண்ணம் இல்லை.

இதுகுறித்து திரையுலகத்தை சேர்ந்த அனுபவஸ்தர் ஒருவர் கூறுகையில், ""கறுப்பு பணம் புழங்கும் இடமாக திரையுலகம் மாறி வருகிறது. நலத் திட்ட உதவிகள், கல்வி, திருமண உதவி என செய்து வந்த காலம் மலையேறி விட்டது,'' என்றார்.தமிழகம் முழுவதும் எத்தனையோ பள்ளிகள், மேற்கூரை, விளக்கு வசதி, கரும்பலகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றன. சினிமா துறையில் புழங்கும் பல நூறு கோடி கறுப்புப் பணத்தை இதுபோன்ற கல்விச் சேவைக்கு திருப்பி விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் விரும்புகின்றனர். படத்திற்கு தமிழ் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு அளிப்பது போன்ற சலுகைகளை விட, அந்தப் பணத்தைக் குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்தலாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தனுஷ் - Trichy,இந்தியா
28 ஜன, 2011 - 13:03 Report Abuse
 தனுஷ் G பணமாக இருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in