ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாமணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த், தொடர்ந்து 180 படத்தின் மூலம் பேசப்பட்டவர் இப்போது தனுஷ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் ஜோடியாக எதிர்நீச்சல் படத்தில் நடித்துள்ளார். இப்படமும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வணக்கம் சென்னையில் நடித்து வரும் ப்ரியா ஆனந்த் தனது திரையுலக அனுபவம் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் இங்கே...
* சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?
நான் பிறந்தது சென்னையில். அம்மா தமிழ், அப்பா ஐதராபாத். மராத்தி குடும்பம், சென்னை ஐதராபாத்தில் வளர்ந்த் பிறகு அமெரிக்கா சென்றுவிட்டேன். எனக்கு மீடியாவுல கொஞ்சம் ஆர்வம் இருந்தது. அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து என் தாத்தா பாட்டியுடன் தங்கியிருந்தேன். டெக்கனிக்கல் லைன்ல தான் எனக்கு முதல்ல ஆர்வம் இருந்தது. ஆஸிஸ்டென்ட் டைரக்டரா சேர ஆசைப்பட்டேன்.
மாடலிங்ல கொஞ்சம் விருப்பம் வந்தது. கொஞ்சம் நடித்தேன். அப்புறம் தெலுங்கில் பட வாய்ப்பு கிடைத்தது அடுத்து 180 படம் தமிழ், தெலுங்கில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்புறம் இந்திக்கு போனேன். இப்போ எதிர்நீச்சல் படம் வெளிவந்திருக்கு. இந்த இடம் கிடைக்கிறதுக்கு அவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கேன். அமெரிக்காவுல இருந்து வந்தேன், படங்களில் நடிச்சேனு அவ்வளோ சீக்கிரமா சொல்லிட முடியாது. எதிர்நீச்சல் டைட்டீல் எனக்கு மட்டும் அல்ல, பல பேர் வாழ்க்கையிலும் பொருத்தமா இருக்கும்.
* உதவி இயக்குனராக ஆசைப்பட்டீர்களாமே?
ஆம். ஆனால், சினிமா பீல்டுக்கு வந்தபின் தான், அது ரொம்ப சிரமமான வேலை என, தெரிந்தது. உதவி இயக்குனர்கள் படும் சிரமத்தை பார்த்தால், "அப்பாடா, நாம தப்பிச்சுட்டோம் என, நினைக்க தோன்றுகிறது. ஆனாலும், தொழில்நுட்ப விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற, ஆசை, இன்னும் உள்ளது.
* தமிழ் மொழி படங்களுக்கும், மற்ற மொழி படங்களுக்கும் என்ன வித்தியாசம்?
படப்பிடிப்புகளில், பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், தயாரிப்பு மற்றும் படத்தை விளம்பரபடுத்துதல் போன்ற விஷயங்களில் வித்தியாசம் இருக்கு. இந்தியில், படங்கள் வெளியாவதற்கு முன், மொத்த டீமும், படத்தை விளம்பர படுத்தும் வேலையில் இறங்கி விடுவர். இங்கே, ஒரு சில படங்களுக்கு தான், அப்படி நடக்கிறது.
* "இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தால், தமிழில் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டீர்களாமே?
அது உண்மை தான். ஆனால், வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த தமிழ் பட வாய்ப்பை இழந்தாலும், "இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில், நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் அதிகம். எனக்கு எது கிடைக்கும்னு இருக்கோ, அது எனக்கு வரும்.
* சென்னை பிடித்திருக்கிறதா?
என்ன, இப்படி கேட்டுட்டீங்க. நான் பக்கா சென்னை பொண்ணுங்க. இந்த ஊரை விட்டு, எந்த ஊருக்கு படப்பிடிப்புக்கு போனாலும், சென்னையை மிஸ் பண்றேனோ என்ற கவலை இருக்கும். தெலுங்கு, இந்தியில் நடித்தாலும், தமிழில் தான் நிறைய படங்களில் நடிக்க விரும்புறேன்.
* பிடித்த நடிகை?
என்னை ஆச்சர்யப்பட வைத்த நடிகை, ஸ்ரீதேவி மேடம் தான். 4 வயதில் இருந்து, இப்ப வரைக்கும் நடிச்சிட்டு இருக்காங்க. எவ்ளோ சாதிச்சிருக்காங்கன்னு நினைச்சுப் பார்க்கவே பெருமையா இருக்கு. என்னை போல் வளர்ந்து வரும் நடிகைகள், அவங்க படங்களை பார்த்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.
* அடுத்த படங்கள்...?
எதிர்நீச்சல் படத்துக்கு பிறகு வணக்கம் சென்னை படத்தில் நடிக்கிறேன். முதல் முறையாக கிருத்திகா உதயநிதி டைரக்ட் பண்றாங்க. சூப்பர் சப்ஜெக்ட். இந்தப்படத்தில் என்.ஆர்.ஐ. பொண்ணா நடிக்கிறேன். அதிலும் அனிரூத் தான் மியூசிக் - கலக்கியிருக்காரு.