இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தற்போது 5 படங்களில் பிஸியாக நடித்து வருவதால் குஷியுடன் இருக்கிறார் நடிகை நயன்தாரா. ஸ்ரீராம ராஜ்ஜியம் தெலுங்கு படம் முடிந்ததும் கண்ணீரோடு விடைபெற்று சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக உறுதி செய்தார் நயன்தாரா. அதன் பிறகு அவர் எதிர்பார்த்தபடி திருமண வாழ்க்கை அமையாததால் மீண்டும் திரையுலகில் கால் பதித்தார்.
யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு நயன்தாராவை தமிழ் திரையுலகம் வரவேற்றது. ரசிகர்களும் நயன்தாராவின் வரவை ஆதரித்தனர். அதன் விளைவாக தற்போது அஜீத் ஜோடியாக வலை, ஆர்யா ஜோடியாக ராஜாராணி, உதயநிதியுடன் கதிர்வேலன் காதலி படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகும் கஹானி இந்திப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், நான் நடித்த 5 படங்கள் இந்த ஆண்டு ரிலீசாக உள்ளது. இதற்கெல்லாம் கடவுள் அருள்தான் காரணம். நான் கடுமையாக உழைக்கிறேன். பலனை கடவுளிடம் விட்டு விடுகிறேன். படங்கள் வெற்றி பெறுவதற்கு யாரும் உத்தர வாதம் அளிக்க முடியாது. ஒவ்வொரு படமும் வெவ்வேறு விதமாக வருகின்றன. இந்த படம்தான் வெற்றி பெறும் என்று உறுதியாக கணிக்க முடியாது, என்றார்.