Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

இசைக்கு கதை முக்கியம்: தாஜ்நூர் சிறப்பு பேட்டி!!

05 மார், 2013 - 17:23 IST
எழுத்தின் அளவு:

15 வருடங்களுக்கு மேலாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடம் கீபோர்ட் பிளேயராக இருந்தவர் தாஜ்நூர். "வம்சம்" படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு எத்தன், விநாயகம், ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படங்களுக்கு இசை அமைத்தார் தற்போது "கலியுகம்" அடித்தளம், உள்பட நான்கு படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். அவர் அளித்த சிறப்பு பேட்டி:

* வம்சம் படத்துக்கு பிறகு உங்கள் இசை பெரிதாக பேசப்படவில்லையே?

வம்சத்திற்கு பிறகு நான் இசை அமைத்த அத்தனை படங்களிலும் என்னுடைய முழு உழைப்பை கொடுத்திருக்கேன். இங்கு ஒரு பாட்டோ, இசையோ மக்களை போய் சேரவேண்டுமானால் படம் ஹிட்டாக வேண்டும். படங்கள் வெற்றி பெற்றால் அதில் உள்ள சுமாரான பாடல்கள்கூட ஹிட்டாகிவிடும். இதுதான் இங்குள்ள நிலைமை.

* ஒவ்வொரு வருடமும் குறைந்தது 40 இசை அமைப்பாளர்கள் புதிதாக வருகிறார்களே?


இசை யாருக்கும் சொந்தம் இல்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் திறமை உள்ளவர்கள்தான் நிலைத்து நிற்க முடியும். புதிதாக வருகிறவர்களில் பெரும்பாலோனோர் ஒரு படத்துக்கு பிறகு காணாமல் போய்விடுகிறார்கள்.

* நவீன தொழில்நுட்பம், இசை அமைப்பை எளிதாக்கி விட்டதா?

முன்பு 2 விரல்களால் எழுதிக் கொண்டிருந்தோம், இப்போது பத்து விரல்களைக் கொண்டு கம்யூட்டரில் எழுதுகிறோம். ஒரு பக்கம் எழுதிய இடத்தில் இப்போ பத்து பக்கம் எழுத முடிகிறது. அதற்காக எல்லோரும் எழுத்தாளராகி விடுகிறார்களா. அதுமாதிரிதான் நவீன தொழில்நுட்பம் இசையை எளிமையாக்கி இருக்கிறது. பெரிய ஸ்டூடியோக்கள் இப்போ சிறிய அறைகளாக சுருங்கி விட்டது. ஆனால் இசை அப்படியேதான் இருக்கிறது. அதை கையாள அதற்குரிய தகுதி வேண்டும். முந்தைய பதிலில் சொன்னதுபோல் அதிக இசை அமைப்பாளர்கள் வருவதற்கு இந்த நவீன தொழில்நுட்பமும் ஒரு காரணம்.

* புதுபாடலாசிரியர்கள், பழைய பாடல் ஆசிரியர்களை ஒப்பிடுங்களேன்?

எப்போதுமே ஓல்டு இஸ் கோல்டுதான். வாலி, வைரமுத்துவின் அனுபவங்கள் பாடல்களாக கொட்டும், இளைஞர்களிடம் சுதந்திரமாக வேலை செய்யலாம். நான் இருவரையுமே சமமாக மதிக்கிறேன். ஒருமுறை என் இசையை கேட்டு விட்டு வாலி சார் "யோவ் நீர் தாஜ்நூர் இல்லவே, கோஹனூர்" என்றார். அதை பெரிய விருதாக மதிக்கிறேன்.

* கதைதான் இசையை தீர்மானிக்கிறதா?

நிச்சயமாக, நல்ல கதை அமைந்தால் அது இசை அமைப்பாளனுக்கு சவாலாக இருக்கும். அந்த சவாலில் ஜெயிக்க கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனாலும் அதில் ஒரு சுகம் இருக்கும். "அடித்தளம்" என்ற ஒரு படத்துக்கு இசை அமைக்கிறேன். கட்டிட வேலை செய்யும் கொத்தனார்களின் கதை. ஒரு வீட்டை ரசித்து ரசித்து கட்டிய கொத்தனார், அந்த வீட்டுக்கு உரிமையாளர் வந்ததும். அவன் தான் கட்டிய வீட்டை ஏக்கத்தோடு பார்த்துச் செல்லும் கொடுமையை ஒரு பாட்டில் சொல்ல வேண்டும். எத்தனை பெரிய சவால் இது. அதை சிறப்பா செய்திருக்கேன். நல்ல கதை அமைந்தால் இசை அமைப்பாளனுக்கு தீபாவளிதான். அதுவும் இசை தொடர்பான படம் கிடைத்தால் டிரிபிள் தீபாவளி. அப்படி ஒரு வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்.

* குத்துப் பாடல்கள் தேவைதானா?

இசையில் பல்வேறு வடிவங்களில் குத்துப்பாட்டும் ஒன்று. முன்பு அதனை டப்பாங்குத்து என்பார்கள். ஆனால் குத்துப்பாடல்களில் ஆபாச வரிகளை எழுதுவதும், அதை கவர்ச்சியாக படமாக்குவதும் தவறு.

* சினிமாவுக்கு அப்பால்...?


நிறைய செய்து கொண்டிருக்கிறேன். "தாய்பால்" என்ற ஒரு ஆல்பத்துக்கு இசை அமைத்து வருகிறேன். தாய்பாலின் சிறப்பைச் சொல்லும் பாடல்களை கவிஞர் அறிவுமதி எழுதியிருக்கிறார். முன்னணி நட்சதிரங்கள் தாய்பால் பெருமை குறித்து பேசியிருக்கிறார்கள். அதோடு திருக்குறள் அனைத்திற்கும் இசை வடிவம் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறேன். வந்தேமாதரம் போன்று தமிழ் மக்களுக்கான ஒரு உலக கீதத்தை தரும் முயற்சியில் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in