ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
இதுவரை 8,565 மேடைகளை தன் "குரல்களால் வசப்படுத்திய மிமிக்ரி கலைஞன். இயக்குனர் சிகரம் பாலசந்தர் மூலம், 1992ல் "வானமே எல்லை படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து 107 படங்களில் நடித்து, புகழின் உச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர். இருந்தாலும், இவருக்கு இளைஞர்கள் சூட்டிய செல்லப் பெயர் "ஓட்டேரி நரி... இதுதான் இப்போதைக்கு இவரது அடையாளம். அவர்தான் நடிகர் தாமு. மதுரை வந்த அவரை சந்தித்தோம்...
* நடுவே கொஞ்சம் உங்களை ஆளை காணோமே?
உண்மை தான். படம் ஒன்றை டைரக்ட் செய்ய உள்ளேன். நடிகன் என்ற கண்ணோட்டத்திலிருந்து ரசிகர்கள் பார்வை மாற வேண்டும் என்பதற்காகவே, இந்த இடைவெளி.
* இயக்குனராக வேண்டும் என்பது திடீர் முடிவா?
நான் இயக்குனராக வேண்டும் என்பதற்காகத்தான் சினிமாவிற்கே வந்தேன். ஆனால், பாலசந்தர், என்னை நடிகனாகிட்டார். இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்தது. அதற்கான காலம் இப்போது வந்துவிட்டது.
* நடிகர்கள் இயக்குனர்களாக மாறுவதால்தான், இயக்குனர்கள் நடிகர்களாக மாறுகிறார்களா?
நடிகர்கள் டைரக்ட் செய்த படங்கள் "ஹிட் ஆனதாக சரித்திரம் இல்லை. இதில், எம்.ஜி.ஆர்., கமல் மற்றும் சிலர் விதிவிலக்கு. நான், நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக, பல இயக்குனர்களிடம் பயிற்சி பெற்று வருகிறேன். அவர்களும் மனமுவந்து பயிற்சி அளிக்கின்றனர்.
* இப்போதெல்லாம் படங்கள் சர்ச்சையில் சிக்குவது "பேஷனாகி விட்டதே?
சினிமா என்பது லாபம் தரும் தொழில். அதை கருத்திற்கொண்டு, சர்ச்சை ஏற்படாத வகையில், படம் எடுத்தால் பிரச்னையில்லை, என்பது எனது கருத்து.
* மிமிக்ரியை மறந்துவிட்டீர்களா?
நிச்சயமாக இல்லை. திருவள்ளுவர், குறள் மன்னன் போல், நான் குரல் மாமன்னன். இந்த கலைதான் சினிமாவுக்கு என்னை அறிமுகப்படுத்தியது. 1330 குரல்களில் பேச வேண்டும் என்பது எனது லட்சியம். இப்போது 79 குரல்களில் பேசி வருகிறேன். எனது சினிமா பயணமும், மிமிக்ரி கலையும் தொடரும்.
* சில காமெடி நடிகர்கள் போல், நீங்களும் கட்சியில் சேர்ந்தீர்களே ஏன்?
சினிமா என்பது எனக்கு பிசினஸ். வறுமையில் இருக்கும் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அரசியலில் சேர்ந்தேன். ஆனால், எனக்கு "மைனஸாக அமைந்துவிட்டது.
* ஊர் ஊராக சென்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களாமே?
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எனக்கு "மாஸ்டர் டிரையினர் என்ற பொறுப்பு கொடுத்துள்ளார். "டு இந்தியா 2020 நேஷனல் கிளப் மூலம், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறேன். ஒரு சிறந்த இந்தியனை உருவாக்கும் பொறுப்பை எனக்கு கொடுத்துள்ளார். எனது பேச்சை கேட்பவர்கள், இரண்டு "கிங்குகளை கைவிடுவது நிச்சயம். அது "ஸ்மோக்கிங், டிரிங்கிங் . எதையும் செய்யும் இளைஞனுக்கு, என்னால் முடிந்த சிறு உதவி இது, என்றார்.